Srimaha Sorna Bhairavi Sametha Sornakala Bhairavar Thirukovil Religious Institution
Details
Srimaha Sorna Bhairavi Sametha Sornakala Bhairavar Thirukovil is promoted by Sri Vembusidhar Gunasshegare Swamigal at Kumbakonam. We work hard to provide excellent customer service to all our clients.
உலகில் இதுவரை வெளிவராத பைரவ உபாசகர் ஸ்ரீ வேம்புச்சித்தர் குணசேகர ஸ்வாமிகள் தியானத்தில் தோன்றி திருக்காட்சி அருளிய அதிசய அதியற்புத திருவுரு கொண்ட ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர்.
கும்பகோணம் திருவிசநல்லூர், ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் ஆலயத்தின் தனி சிறப்புக்கள்:
இங்கு வந்து வேண்ட தலை எழுத்து மாறும். ஜாதகத்தில் உள்ள பாதகங்கள் யாவும் சாதகமாகும். ஆயிரம் கோயிலுக்கு சென்று வணங்கிய புண்ணியம் இங்கே கிட்டும். பொன் பொருள் செல்வாக்கு புகழ் மிகச் சிறப்பான வாழ்க்கை அமையும்.
மூன்று யுகங்களிலும் ஏன் கலியுகத்திலும் கூட இது போன்ற தெய்வ திருவுருவ அமைப்பு உலகில் வேறு எங்கும் கிடையாது.
ஐயன் அமர்ந்து அருளுகின்ற கற்பக விருட்சம் நினைத்ததை நினைத்தபடி தரக் கூடிய தேவலோக மரம். இந்திராதி தேவர்கள் அமர்ந்து வேண்டும் மரம். ஆக இது உலகில் வேறு எங்கும் காண இயலாதது.
ஐயன் மேல் திருக்கரங்களில் நவநிதிகளில் இரு பெரும் நிதிகளான சங்க நிதி, பத்ம நிதியோடு திகழ்கிறார். இதுவும் வேறு எங்கும் காண இயலாதது.
ஐயன் மடியில் இருக்கும் பூரண கும்பத்தில் உலகில் உள்ள சர்வ தேவ தேவதா தெய்வங்களோடு நோய் நொடியை தீர்க்கக் கூடிய அமிர்தமும் கொண்டது.
கீழ் திருக்கரங்களில் ஐயன் காட்டிக் கொண்டிருக்கும் அபய, வரத முத்திரையும் கூட எங்கும் காண இயலாதது.
அம்மை மடியில் இருக்கும் சொர்ண
கும்பம் எப்போதும் சொர்ணம் சுரந்து கொண்டே இருக்கக் கூடியது. இதுவும் எங்கும் காணவியலாதது.
அமர்ந்து அருளும் இடமோ குரு மற்றும் குபேரனுக்குரிய வடக்கு திசை ஆகும். நோக்கும் இடம் இறை சக்தி நிறைந்த வடகிழக்கு எனும் ஈசானியம் ஆகும். இறையருள், குருவருள், அஷ்ட லட்சுமி குபேர அருள் இங்கு வந்து வணங்க பூரணமாய் கிட்டும்.
இவர் சூரிய கிரஹத்திற்குரிய பிராண தேவதை ஆவார். சூரியனை சுற்றியே மற்ற கிரஹங்கள் சுற்றி வந்து கொண்டு இருக்கின்றன. ஆக இவரை இங்கு வந்து வணங்க சூரிய கிரஹ தோஷம் மட்டுமின்றி அனைத்து கிரஹ தோஷங்களும் விலகி ஓடும். பஞ்ச பூத வசியம் கிட்டும். அஷ்டத்திக்கு பாலக அனுக்கிரஹம் கிட்டும். மேலும் இவர் 9 கோள்களின் பிராணனாக இருப்பதுடன் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் இவர் உடலின் அங்கங்களாக வும், பூமியை தாங்கும் அஷ்ட நாகங்கள் இவர் உடலை அலங்கரித்து கொண்டும் உள்ளது.
சனீஸ்வரரின் குரு:
ஆக இவரை வணங்க சனிக்கிரஹ தோஷங்கள் எதுவாக இருந்தாலும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும்.
ஸ்ரீவடுக பைரவர்:
இங்குள்ள வடுக பைரவர் பால தோற்றத்தில் வித்தியாசமாக காட்சி தருபவர். வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கி நின்று அருள் புரிபவர். மிகவும் வரப்பிரசாதி. மூர்த்தி சிறுசு. கீர்த்தி பெருசு என்பது போல் அனைவரது கஷ்ட நஷ்டங்களை, ஏவல் பில்லி சூனியங்களை, கடன் தொல்லைகளை உடனே போக்கக் கூடியவர். இந்த திருவுருவ அமைப்பு இங்கு மட்டுமே உள்ளது.
ஸ்ரீவரசித்தி வலம்புரி விநாயகர்
வடமேற்கு மூலையில் அரசு வேம்பிற்கு அருகில் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி அமர்ந்து வேண்டு பவரது சர்வ சங்கடங்களையும் சகல விக்கினங்களையும் போக்குபவர். இந்த அமைப்பு இங்கு மட்டும் தான் உள்ளது.
ஸ்ரீமஹா வேம்பு வாலையம்மன்:
அரசு வேம்பின் அடியில் நாக சக்திகளுடன் சேர்ந்து இருப்பது மிகவும் விசேஷம். மரத்தினடியில் ஸ்ரீகாத்தாயி அம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீசப்த மாதாக்களை வணங்கிவந்த வேளையில் அரசிலிருந்து வெளி வந்த மூன்று வேர்கள் அந்த மூன்று கற்களையும் தன்னுள் ஈர்த்து கொண்டது. ஆக 9 அம்மன்கள் அருள் புரிந்து வரும் வேளையில் இங்கு வரும் சில பெண்களுக்கு அருள் வந்து ஸ்ரீவேம்பு வாலை அம்மனை புரதிஷ்டை செய்ய சொல்லி கேட்டுக் கொண்டபடியால் 10 ஆவது அம்மனாக கழுத்து அளவு கொண்ட ஸ்ரீவேம்பு வாலை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேலும் என் பெற்றோருக்கு ஆயிரம் பிறை கண்ட விழா எடுத்த போது அரசு வேம்பிற்கும் திருமணம் செய்விக்கப் பெற்றது. இது போன்றதொரு அமைப்பு வேறு எங்கும் கிடையாது.
இங்கு வந்து சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பேறுக்காக வேண்டிக் கொள்பவர்களுக்கு வேண்டியபடி அப்படியே நடக்கிறது. இத்திருவாலயம் தனிச்சிறப்பு கொண்ட அதிசய அற்புதங்கள் நிறைந்த ஆலயமாக திகழ்கிறது.
27 பிறவிகளாக இவ்வுலகுக்கு வந்து உலக மக்களுக்கு சேவை செய்து வருகின்ற இப்பிறவியிலும் 25 வருடங்களுக்கும் மேலாக பைரவ உபாசனை பெற்று வழிபாடு செய்து வரும் ஸ்ரீவேம்புச்சித்தர் மூலம் இதுவரை எவர் மூலமும் வெளிப்படாது இவரது தியானத்தில் 2010ஆம் ஆண்டில் வெளிப்பட்டு இவ்வுலகை அருளாட்சி செய்து வரும் மிகவும் சக்தி வாய்ந்த அதிசய ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர். ஐயனும் அம்மையும் முப்பெரும் தேவ தேவி சொரூபம். அஷ்ட பைரவி சமேத அஷ்ட பைரவ சொரூபம். அஷ்டாஷ்ட பைரவி சமேத அஷ்டாஷ்ட பைரவ சொரூபம். குபேரனுக்கு நவநிதி களையும் அஷ்ட லக்ஷ்மிகளுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வழங்குபவர். உலகில் எங்கும் நிறைந்த எல்லா பைரவப் பெருமான்களும் இரவு வேளைகளில் இங்கு வந்து வேண்டுவதால் இவ்விடத்திற்கு "சர்வலோக பைரவர் சமஸ்தானம்" என்ற பெயரும் உண்டு. இராஜாதி இராஜனாக, சர்வ காரிய சித்திகளையும் நிறைவேற்றுபவர்.
இங்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் காலை 09.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 10.00 மணிக்கு சொர்ண சித்தி, தனபிராப்தி, சர்வ காரிய சித்தி கிட்ட கொல்லிமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறப்பான மூலிகைகளை கொண்டு ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீ அஷ்டபைரவர், ஸ்ரீசொர்ணாகர்ஷன பைரவர் ஹோமம் நடைபெறும். விரும்புபவர்கள் வந்து கலந்து கொண்டு இறைப்பேரருளையும் குருவருளையும் பெற்று செல்லலாம்.
ஆலயம் திறந்திருக்கும் நேரம்:
காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை.
மாலை 04.00 மணி முதல் இரவு 06.30 மணி வரை.
அருள்வாக்கு:
தினசரி காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 வரை. முன் அனுமதி பெற்று வரவும்.
ஆலய அமைவிடம்:
இத்திருவாலயம் ஸ்ரீசிவயோகிநாதர் ஆலயத்திற்கும் ஸ்ரீ கற்கடேஸ்வரர் ஆலயத்திற்கும் இடையில் உள்ளது.
உலகின் அதிசயமான இத்திருவுருவ அமைப்பு என்பதால் *copy right* பெறப்பட்டது. இதுவும் கூட ஓர் அற்புதமே.
அஷ்ட ஐஸ்வர்யங்களையும் நவநிதிகளையும் தரும் உலகில் இதுவரை வேறு எங்கும் காணவியலா அதிசய அற்புத கலியுகத்தின் கண் கண்ட தெய்வம்:
எல்லா ராசிக்காரர்களும் எல்லா நட்சத்திரக் காரர்களும் வந்து வழிபட்டு தங்களின் சாப, பாப, தோஷங்களை போக்கி கொள்ள வேண்டிய அற்புத திருத்தலம்.
ஜாதகத்தில் நல்ல தசை, நல்ல புத்தி நடக்கும் போது அபரிமிதமான நல்ல பலன்கள் நடப்பதற்கும்; கெட்ட தசை,கெட்ட புத்தி நடக்கும்போது கெடுதல்கள் தாக்காது இருப்பதற்கும் வந்து வழிபட்டு செல்ல வேண்டிய திருத்தலம்:
ஆயிரம் ஆண்டு கால பழமையான திருவாலயத்தில் கிடைக்கின்ற பலனை விட அதிக பலன்களை வழங்கும் அதியற்புத திருத்தலம்.
சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், ஹோமம் நடைபெறும் நாட்கள்:
நமது (கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ணபுரி உறை) ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி, அம்மாவாசை போன்ற நாட்களில் ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானுக்கும் ஸ்ரீமஹா வடுக பைரவருக்கும் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி, அம்மாவாசை நாட்களில் காலை 09.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை களும் 10.00 மணிக்கு சர்வ காரிய சித்தி, சொர்ண சித்தி, தன பிராப்தி தரும் சர்வ கஷ்ட நஷ்ட கடன் உபத்திரவங்களை போக்கும் கொல்லிமலையில் இருந்து தருவிக்கப் பெற்ற அதியற்புத மூலிகைகளை கொண்டு ஸ்ரீ கால பைரவர், ஸ்ரீ அஷ்ட பைரவர், ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமம் நடைபெறும்.
ஆலய அமைவிடம்:
திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீசௌந்தரநாயகி சமேத சிவயோகிநாதர் சதுர்கால பைரவர் கோவிலுக்கும் ஸ்ரீ அருமருந்து நாயகி அபூர்வ நாயகி சமேத கற்கடேஸ்வரர் கோவிலுக்கும் இடையில் நமது ஆலயம் அமைந்துள்ளது.
ஆலய நடை திறப்பு நேரம்:
காலை 08.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
மாலை 04.00 மணி முதல் இரவு 06.00 மணி வரை.
அருள்வாக்கு
தினசரி காலை 09.00 மணி முதல் 01.00 மணி வரை அருள்வாக்கு சொல்லப் படும். முன் அனுமதி பெற்று வரவும்.
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் பெருமை:
ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான் ஸ்ரீமஹா காளி, சரஸ்வதி, லக்ஷ்மி ஐக்ய ஸ்ரீமஹா சிவ விஷ்ணு பிரம்ம சொரூபம். அஷ்ட. பைரவி சமேத அஷ்ட பைரவ மற்றும் அஷ்டாஷ்ட பைரவி சமேத அஷ்டாஷ்ட பைரவ சொரூபம். பெருமானின் உடலில் 12 ராசிகளும் உடலின் அங்கங்களாக இருப்பதால் எல்லா ராசிக்காரர்களும், அந்த 12 ராசிகளுக்குள் அடங்கிய 27 நட்சத்திரக்காரர்களும் வழிபட அனைத்து நலனையும் பெறலாம். அதேபோல் நவக்கோள்களின் பிராணனாகவும் சூரிய பகவானின் பிரத்யட்ச அதி தேவதையாகவும் விளங்குவதாலும் மேலும் சூரியனை சுற்றியே அனைத்து கோள்களும் சுற்றி வருவதாலும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானை தொடர்ந்து வழிபட ஜாதகத்தில் எந்த தசை நடந்தாலும் அதேபோல் எந்த புத்தி நடந்தாலும் அவர்கள் வந்து வழிபட நவக்கிரஹ தோஷங்கள் யாவும் விலகும். அதன் தாக்கத்தில் இருந்தும் விடுபடலாம். ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான் இப்பூமியை தங்கி நிற்கும் அஷ்ட நாகங்களை பூணூலாக அணிந்திருப்பதால் இவரை வழிபட சர்வ சர்ப்ப தோஷங்களும் விலகும். தம்மை வணங்கும் குபேரனுக்கு நவநிதிகளையும், அஷ்ட லட்சுமிகளுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வழங்குபவரும் இவரே. அவர்களுக்கு குறையும் செல்வ வளத்தை தம்மை வணங்க திரும்ப தருபவரும் அவரே.
அதேபோல் இப்பூவுலகில் பைரவர் தோன்றி திருக்காட்சி அளித்த பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட பைரவரின் அருளை பரிபூரணமாய் பெறலாம். ஏனெனில் இத்திருவாலயத்தை அமைத்த ஸ்ரீவேம்புச்சித்தர் அவதரித்தது கேட்டை நட்சத்திரம் தான். ஆக கேட்டை நட்சத்திர நாளில் சென்று வழிபடுவதும் சிறப்பு.
எல்லோரும் வழிபட வேண்டிய கால வேளைகள்:
வாழ்வில் சர்வ கஷ்ட நஷ்டங்கள், சாப, பாப, தோஷங்கள், கடன் தொல்லைகள், வியாதிகள், காரிய தடைகள்,ஏவல் , பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள், சண்டை சச்சரவுகள் விலக:
தினசரி ராஹு கால வேளைகள், தினசரி பிரதோஷ கால வேளைகள்,
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, அம்மாவாசை, தேய்பிறை அஷ்டமி போன்ற நாட்கள்.
வீடு, வாசல், நில புலம், பொன், பொருள், புகழ், செல்வாக்கு, விவாஹ பிராப்தி, சந்தான பிராப்தி, கல்வி முன்னேற்றம், வேலை வாய்ப்பு, அதிகார மிக்க பதவி, தொழில் முன்னேற்றம், தொட்ட காரியம் யாவிலும் வெற்றி கிட்ட:
தினசரி குளிகை காலங்கள், திங்கட்கிழமை அந்தி, சந்தி நேரங்கள், செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, திருவாதிரை நட்சத்திர நாட்கள், வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி, மாதப்பிறப்பு, பிறந்த நட்சத்திர நாட்கள், சித்திரை வருடப் பிறப்பு, சித்திரை பரணி, ஐப்பசி பரணி, ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷ, கேட்டை நட்சத்திர நாட்கள்.
பைரவ விரதம்:
தை மாதம் முதல் செவ்வாய் கிழமையில் இருந்து விரதம் இருக்க ஆரம்பித்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவ விரதம் இருந்து வருவது நல்ல வளமான வாழ்வைத் தரும். அதேபோல் பரணி நட்சத்திர நாட்களிலும் விரதம் மேற்கொள்ள நல்லது.
சொல்ல வேண்டிய மந்திரம்:
ஸ்ரீமஹாவடுக பைரவர் மந்திரம்:
ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்ததாரணாய குரு குரு வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா.
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் மந்திரம்:
ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஓம் நமோ பகவதே சொர்ணாகர்ஷன பைரவாய பிர ணதாபீஷ்ட தத்பர பூரணாய ஏஹி ஏஹி கருணாநிதே மஹ்யம் ஹிரண்ய சித்திஞ்ச தாபய தாபய சீக்ரம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஸ்வாஹா.
ஸ்வாமிக்கு போட வேண்டிய மாலைகள்:
#தாமரைப்பூ மாலை போடலாம்.
#வில்வ மாலை போடலாம்.
#செவ்வரளிப்பூ மாலை போடலாம்.
#சம்பங்கிப்பூ மாலை போடலாம்.
#பன்னீர் ரோஜா மாலை போடலாம்.
#எலுமிச்சை108 கோர்த்து மாலை போடலாம்.
#மஞ்சள் செவ்வந்திப்பூ மாலை போடலாம்.
#வெற்றிலை மாலை போடலாம்.
#சந்தன மாலை போடலாம்.
வாழ்வில் சுபிட்சம் ஏற்பட பைரவ தீபம் போடும் முறை:
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான் சன்னதி முன்
தேங்காய் சர்வ காரிய ஜெயதீபம்:
அதாவது தேங்காயில் மஞ்சளைத் தடவி இரண்டாக உடைத்து தேங்காய் நீரை கீழே ஊற்றி உள்ளே துடைத்து விட்டு அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவும்.
பஞ்சபூத வசிய தீபம்:
அதாவது 5 அகல் விளக்குகளில் முறையே இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஊற்றி திரிபோட்டு விளக்கேற்றலாம்.
அஷ்டபைரவர்/ அஷ்ட திக் பாலக வசிய தீபம்:
/
அதாவது எட்டு அகல் விளக்குகளில் ஐந்து எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து ஊற்றி திரி போட்டு தீபங்கள் ஏற்றலாம்.
நவக்கோள் வசிய தீபம்:
அதாவது ஒன்பது அகல் விளக்குகளில் ஐந்து எண்ணெய்களையும் ஓன்றாக கலந்து தீபம் ஏற்றலாம்.
ராசி வசியதீபம்:
அதாவது 12 அகல் விளக்குகளில் ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஏற்றலாம்.
நட்சத்திர வசிய தீபம்:
அதாவது 27 அகல் விளக்குகளில் ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஏற்றலாம்.
மிளகு தீபம்: சர்வ ருண/ரோஹ/தாரித்ரிய வித்வேஷன, சர்வ கஷ்ட/நஷ்ட/உபத்திரவ நிவர்த்தித, சர்வ சாப/பாப/தோஷ ஹர, சர்வ சத்ரு நாசன, சர்வ ஏவல் பில்லி சூனிய ஹர தீபம்:
அதாவது 27 மிளகை சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் துணியில் ஏதாவது ஒன்றில் வைத்து சிறு மூட்டையாக கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம்.
பூசணிக்காய் தீபம்:
அதாவது ஒரு பூசணிக்காயை வாங்கி இரண்டாக வெட்டி உள்ளே உள்ள விதைகளை நீக்கி இரண்டு பாதியிலும் உள்ளே குங்குமத்தை தடவி மூன்று இடத்தில் சந்தன குங்குமப் பொட்டு வைத்து நல்லெண்ணெய் நிரப்பி திரி போட்டு விளக்கேற்றலாம்.#வயதுக்கேற்ற சர்வ தோஷ ஹர தீபம்: அதாவது உங்களுக்கு தற்போது என்ன வயது ஆகிறதோ அந்த வயத்துக்கேற்ற அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றலாம்.
மேலே சொன்ன முறைகளில் உங்களுக்கு எது வசதியோ அவ்வாறு தீபம் போட்டு வழிபட கஷ்டங்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.
ஸ்ரீவேம்புச்சித்தர் (பைரவ உபாசகர்),
ஸ்தாபகர், ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் திருக்கோயில், ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாட்டு குழு, சொர்ணபுரி, திருவிசநல்லூர், கும்பகோணம் - 612 105.
நித்ய பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், விஷேச கால பூஜைகளுக்கு, நித்ய அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் ஹோமங்களுக்கு தேவையான மூலிகை பொருட்கள் வாங்கித் தந்து இறை கைங்கர்யத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கீழ்க்கண்ட G Pay எண்ணுக்கு பணம் அனுப்பி வைக்கலாம்.
G Pay No.94449 64303
வாட்சப்: 94449 64303
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் வரலாறு அவரது பூஜை முறைகள், மந்திரங்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றி விரிவாக அறிய கீழ்க்கண்ட வெப்சைட் மற்றும் யூடியூபிற்குள் செல்லவும்.
வெப் சைட்: (web site)
https://sornakarshanabhairava.com/
யூடியூப் (You tube)
https://www.youtube.com/channel/UCzjFs9wrqCjVOX6WoIbA_YQ
நவநிதிகளையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் சொர்ண சித்தி, தன பிராப்தி என அனைத்தையும் தரும் திருவிசநல்லூர் ஸ்ரீமஹாசொர்ணாகர்ஷன பைரவர்:
சிறு பிள்ளை பிராயத்தில் அவ்வப்போது சிறிய கோயில் கட்டி பூஜை செய்து எம் வயதொத்த பிள்ளைகளுக்கு பிரசாதங்கள் வழங்கி மகிழுவது, ஸ்வாமி படங்கள் நிறைய வாங்கி சேர்ப்பது, அதனை பார்த்து பார்த்து ரசிப்பது காவடி, கரகம், எடுக்கும் இடங்களுக்கு, பம்பை, உடுக்கை, மேள தாளம் முழங்கும் இறை நிகழ்வு நடக்கும் இடங்களுக்கு ஓடோடி செல்வது, (8 வயதில் பதியெண் சித்தர்களில் ஒருவரான மச்சேந்திரரின் அருட்காட்சி கிடைத்து எப்போதும் உம்முடனே இருப்போம் என்று சொல்லிடும் அனுக்கிரகம் பெற்றேன்.) இப்படி இறைத்தேடல் நிறைந்திருந்த எமக்கு அரசு தேர்வு மூலம் உத்தியோகம் காவல் துறையில் ஸ்டெனோகிராபர் ஆக கிடைக்கப் பெற்று 1987ல் இருந்து நிறைய திருவாலயங்கள் சென்று வணங்கும் வாய்ப்பும், நிறைய மகான்கள், சித்தர்களை தரிசிக்கும் வாய்ப்பும், எண்ணற்ற சித்தர்களின் ஜீவ சமாதிகளை தரிசிக்கும் வாய்ப்பும், நிறைய புனித நதிகளில் நீராடும் வாய்ப்பும் அமையப் பெற்றது.
1994 முதல் 1996 வரை டெல்லியில் வசித்த போது வியாழக்கிழமை தோறும் மாலை பஜன்ஸ் தொடர்ந்து எம்மால் எம் வீட்டில் நடத்தப்பட்டது. எமக்கு மிகவும் வேண்டிய மஹான் ஒருவக்காக அவர் டெல்லி வரும் போதெல்லாம் அவருக்காக ஐந்துக்கும் மேற்பட்ட ஆன்மீக விழாக்கள் நடத்தினேன். நிறைய ஆன்மீக அனுபவங்கள் பெற்றேன். டெல்லியை சுற்றியுள்ள அனைத்து ஆன்மீக தலங்களுக்கும் சென்று வழிபடும் பாக்கியமும், பல புனித நதி தீரங்களில் நீராடும் பாக்கியமும் பெற்றேன்.
1996ல் ஒரு அதிகாலை பொழுதில் ஒரு வெள்ளை நிற பொமரேனியன் நாய் ஒன்று பூஜை அறையில் வந்து மறைவது போல் திருக்காட்சி கண்டோம்.
அதேபோல் வேரொரு அதிகாலை பொழுதில் "ஓம் நமசிவாய" மந்திரம் எம் ஆத்மாவில் ஒலிக்க கேட்டு அதன் நாத இசை இனிமையினால் ஈர்க்கப்பட்டு மூன்று நாட்கள் ஆனந்தத்திலேயே மிதந்தோம். அதன் இனிமையை வெளியில் எத்தனை ஆயிரம் இசைக் கருவிகளை வைத்து இசைத்து கேட்டாலும் அதன் இனிமை கிடைக்குமா என்பது சந்தேகமே.
1996ல் ஒரு ஆலய கும்பாபிஷேகத்திற்காக ஈரோட்டுக்கு
சென்று இருந்த போது கும்பகோணம் பாபநாசம் குத்தாலம் அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வந்த "காளிதாஸ் சர்மா" என்ற எங்களால் "அண்ணா" என்று அன்பாக அழைக்கப்பட்ட அந்த மஹானிடம் இருந்து "ராம" மந்திர தீட்சையும் "காயத்ரி" மந்திர தீட்சையும் பெறப்பட்டு அது சித்தியாகி நிறைய ஆன்மீக அனுபவங்கள் பெறப்பட்டது.
பைரவர் தடுத்தாட் கொண்டது
திருவண்ணாமலைக்கு அடிக்கடி சென்று கிரிவலம் முடித்து இறை தரிசனம் கொள்வதை பழக்கமாக கொண்டிருந்த எமக்கு 2003ல் ஒருமுறை கிரிவலம் சென்ற போது நிருதி லிங்கத்திற்கும் வாயு லிங்கத்திற்கும் இடையில் ஒரு பெரிய நாய் நின்று கொண்டிருந்தது. எம்மைக் கண்டதும் அந்த நாய் தலையை ஆட்டி எம்மை அருகில் அழைத்தது. யாமும் அதன் அருகில் செல்ல அந்த நாய் எம் வயிற்றில் ஒரு முட்டு முட்ட யாம் அணிந்திருந்த எம் மூக்கு கண்ணாடி கீழே விழுந்து விட்டது. அதை குனிந்து எடுத்து அணிந்து அந்த நாயை பார்த்த போது அது அந்த இடத்தில் இருந்து மறைந்து விட்டது. இது தான் பைரவர் எம்மை வந்து தடுத்தாட் கொண்டது.
இச்சம்பவம் நடந்து ஒரே வாரத்தில் எமக்கு குருவாக கொல்லிமலை சித்தர் ஸ்ரீ காகபுஜண்டர் ஸ்ரீலஸ்ரீ தர்மலிங்க ஸ்வாமிகள் கிடைக்கும் பெரும் பாக்கியம் பெற்றேன். அவர் மூலம் சித்தர்களுக்கான தீட்சை முறைகள், பைரவ, பைரவி உபாசனை, வாசியோகம் போன்றவைகள் கிடைக்கப்பெற்று அதனை முறைப்படி கடும் முயற்சியுடன் பயிற்சிகள் செய்து மேன்மை பெற்று எம் குருநாதர் அவர்கள் திருவாய் மொழியால் அவருக்கு 2005ல் செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள தியான புவனத்தில் எடுக்கப்பட்ட ஒரு விழாவில் "ஸ்ரீவேம்புச்சித்தர்" எனும் திருநாமம் வழங்கினார்கள். இதற்கிடையில் கொல்லிமலையில் உள்ள குகைகளில் தியானம் செய்வது,
திருக்கழுக்குன்றம், பர்வதமலை, திருவண்ணாமலை, பழனி, திருமலைவையாவூர் சென்று கிரிவலம் செய்வது, தியானம் மேற்கொள்வது இவைகளும் தொடர்ந்தது. நிறைய சித்தர்களின் தரிசனமும், இறைத்திரு தரிசனங்களும் ஆன்மீக அனுபவங்களும் கிடைத்துக் கொண்டே இருந்தது.
2006ல் ஒருநாள் காலை வேலையில் எம் குருநாதர் எமக்கு நித்திய பூஜைக்காக வழங்கிய ஸ்ரீ பைரவர் பஞ்சலோக திருவுருவ சிலைக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்த போது பைரவர் நெற்றியில் இருந்து ஒரு ஒளி செல்வது போல் ஒரு காட்சி கிட்ட எம்மைப் பற்றி எழுது என்று ஒரு அசரீரி கிட்டியது. மூன்றே நாளில் "காக்கும் தெய்வம் மஹா பைரவர்" என்ற நூல் எழுத அந்நூல் சாருபிரபா பப்ளி
கேஷன்ஸ் மூலம் ஒரு லட்சம் பிரதிகள் தயாரிக்கப்பட்டு நக்கீரனின் இணை ஆன்மீக இதழான "ஓம் சரவணபவா" என்ற இதழோடு இணைத்து இலவசமாக வெளியிடப்பெற்றது. அதனைத் தொடர்ந்து 2006 முதல் 2015 வரை பல பதிப்புகள் வெளியிட்டார்கள். பைரவர் வழிபாடு தமிழ்நாடு மட்டுமின்றி அயல்நாடுகளிலும் பரவியது.
2008ல் ஒரு நாள் அதிகாலை தியானத்தில் நகரத்தார் சீமை சென்று எம்மைப் பற்றிஎழுது என்று உரைக்க காரைக்குடி மற்றும் அதனை ஒட்டியுள்ள பல ஊர்களில் உள்ள சிவத் திருவாலயங்களுக்கு ம் சென்று வழிபட்டு அவ்வாலயங்களில் உறைந்து அருளும் பைரவரின் சிறப்புகள் பற்றி "நகரத்தார் சீமையில் பைரவரின் அற்புத திருத்தலங்கள்" என்ற நூல் எம்மால் இயற்றப்பட்டு இலுப்பைக்குடி ஆலய ட்ரஸ்டி திரு. சேவுகன் செட்டியார் அவர்களால் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 10.2.2008 அன்று எம்முடைய அவதாரத் திருநாளில் வெளியிடப் பெற்றது. சித்தர்கள் தங்களுக்கு என்று ஒரு நாள் உன்னால் கொண்டாடப்பட வேண்டும் என்று சித்தர்கள் இட்ட ஆணைப்படி அன்று முதல் இந்நாள் "சர்வலோக சித்தர்கள் தினமாக" எம்மால் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படும் என்று அந்த மேடையில் அறிவிக்கப் பட்டது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது.
அதன் பின்இறை திருவருள் ஆணைப்படி "திருமுருகனின் திருத்தலங்களும் வழிபடும் முறைகளும்", "வைஷ்ணவ ரகசியங்கள்", "கொல்லூர் அம்மா மூகாம்பா", "வினை நீக்கும் விக்னஹர விநாயகர்","சொர்ண வசியம் தரும் சொர்ண பைரவர்" என்ற ஆன்மீக நன்நூல்கள் எம்மால் இயற்றப்பட்டது.
2008ம் ஆண்டு ஒரு நாள் அதிகாலை வேலையில் தியானத்தில் தோன்றிய ஸ்ரீமஹா பைரவப்பெருமான் திருவிசநல்லூரில் "ஓர் இடம் வாங்கு" என்று ஆணையிட்டதன் பேரில் திருவிசநல்லூரில் இடம் வாங்கப் பெற்றது. அவ்விடம் வாங்குவதற்காக திருவிசநல்லூர் வந்து ஸ்ரீ யோகிநாத ஸ்வாமி ஆலயத்தில் உள்ள சதுர்கால பைரவர் சன்னதியில் வணங்கி நின்ற போது அதில் இரண்டாவதாக உயரமாக உள்ள பைரவர் எம்மைக் கண்டு குலுங்கி குலுங்கி சிரித்தார். இங்கு இடம் வாங்க இறையருள் கூடியதை கண்கூடே கண்டேன்
அதேபோல் அந்த இடத்தின் அருகே நின்று பேசிக்கொண்டே இருக்கும் போது மூன்று முறை கருடன் தலைக்கு மேல் வட்டமிட்டு சென்றது. அதேபோல் அந்த இடம் முழுமையும் மூன்று முறை சுற்றி சென்றது. ஒரு பெண்மணியும் ஒரு குழந்தையும் அந்த இடத்தில் வந்து நின்றது. ஒரு பசுவும் ஒரு கன்றும் அந்த இடத்தில் வந்து நின்று நல் சகுனம் காட்டியது. ஆகவே அந்த இடம் வாங்கப் பெற்றது. இந்த இடம் வாங்கிய போது கோயில் அமைக்கும் எண்ணம் எல்லாம் எமக்கு கிடையாது.
2010ஆம் ஆண்டு ஒருநாள் அதிகாலை வேலையில் தியானத்தில் தோன்றிய ஸ்ரீமஹா பைரவப் பெருமான் "காசிக்கு வந்து ஒரு வாரம் தங்கு" என்று உத்தரவிட்டதால் அங்கு சென்று பைரவப் பெருமானின் திருவுள ஆணைப்படி அங்குள்ள சுடுகாடுகளான "அரிச்சந்திரா காட்" "மணிகர்னிகா காட்"டிலும், ஸ்ரீ கால பைரவர் திருச்சன்ன தியிலும், ஸ்ரீ விஸ்வநாதர் திருச்சன்னதியிலும் தியானம் மேற்கொள்ளப் பெற்றது. ஸ்ரீமஹா பைரவப் பெருமானின் உத்தரவுப்படி காசியில் கேதார்காட்டில் அமர்ந்து "ஸ்ரீமஹா பைரவ ஹோமம்" நடத்தப் பெற்றது. ஏழாம் நாளில் பைரவப் பெருமானின் ஆணைப்படி கொஞ்சம் சுடுகாட்டு சாம்பல், இரு ஆலயங்களின் விபூதி பிரசாதங்கள் ஒரு கலயத்தில் சேகரிக்கப்பட்டு பூஜைக்ககாக கொண்டுவரப்பட்டு தினசரி பூஜை செய்து வரும் போது ஒரு நாள் அதிகாலை வேலை "எமக்கு ஓர் ஆலயம் எழுப்பு" என்று கேட்க யாமோ "உலகில் இதுவரை எவருக்கும் காட்டியிராத திருவுருவ திருக்காட்சியை எமக்கு காட்டி அருளினால் ஆலயம் எழுப்புகிறோம்" என்று கூற "அவ்வாறே காட்டியருளுவோம்" என்று கூறி மறைந்து விட்டார். அதன் பின் பத்து பதினைந்து நாட்களில் ஸ்ரீமஹா பைரவப் பெருமான் காட்டியருளிய திருக்கோலமே ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானாக திருவாலயத்தில் 12.2.2012ல் இருந்து அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறார்.
*கும்பகோணம் திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீவேம்புச் சித்தர் ஆசிரமம் எனும் ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் சித்தர் பீட திருவாலயத்தில் தனிக்கோவிலில் இருந்து அருள்பாலித்து வருபவர்தான் ஸ்ரீமஹாசொர்ணாகர்ஷன பைரவர். 27 பிறவிகளாக தொடர்ந்து கடும் தவம் இயற்றியவரும், இப்பிறவியில் பைரவ உபாசகராக இருந்து 25 வருடத்திற்கும் மேலாக தவம் செய்து கொண்டு தம்மை நாடி வரும் பக்த கோடிகளுக்கு அருள்வாக்கு மூலம் அருள் புரிந்து வரும் ஸ்ரீ வேம்புசித்தர் குணசேகர ஸ்வாமிகளுக்கு தியானத்தின் மூலம் திருக்காட்சி தந்து அவருக்கு அவர் தவத்தின் பெருமையை உலகறிய செய்ய வேண்டும் என்று கலியுகத்திலும் உலகில் இதுவரை எவருக்கும் காட்டாத அதிசய அதியற்புத திருக்காட்சியை காட்டியருளி திருவிசநல்லூரில் இடம் வாங்க செய்து திருவாலயம் எழுப்ப சொல்லி இப்பூவுலக மக்கள் உய்வு பெற "*வேண்டியது வேண்டியபடி" "கேட்டது கேட்டபடி" "நினைத்தது நினைத்தபடி" கேட்கும் வரங்களை வாரி வாரி வழங்கும் வள்ளலாய் அள்ளி அள்ளி வழங்கி அனைவர் வாழ்விலும் அனைத்து வித கஷ்டங்களையும் நீக்கி அருள் மழை, பொருள் மழை என பொழிந்து கொண்டிருக்கிறார்*.
பைரவர் வழிபாட்டு சிறப்பு:
"பைரவர் வழிபாடு கை மேல் பலன்"
பைரவர் வழிபாடு என்பது கால பைரவர் தொடங்கி அஷ்ட பைரவர், அஷ்டாஷ்ட பைரவர் என தொடர்ந்து சொர்ணாகர்ஷன பைரவரில் முடிவது.
கற்பக விருட்சம்:
*இங்குள்ள சொர்ணாகர்ஷன பைரவர், வேண்டியது வேண்டியபடி, நினைத்ததை நினைத்தபடி, கேட்டதை கேட்டபடி தரும் தேவலோக மரமான கற்பக மரத்தின் அடியில் பத்ர பீடத்தின் மேல் புனித கங்கா ஜடா முடியில் மூன்றாம் பிறை சூடி நான்கு திருக்கரங்களுடன், ஸ்ரீஅஜாமிளா தேவி எனும் ஸ்ரீமஹா சொர்ண பைரவியை தமது மேல் திருக்கரத்தால் சற்று அணைத்தவாறு
இருவரும் புன்னகை தவழும் திருமுகங்களுடன் பத்ர பீட ரத்ன சிம்மாசனத்தின் மீது உடன் அமர்ந்து அருள் பொழியும் சர்வானந்த கோலாகலராக திகழ்கிறார்கள்.
வரப்பிரசாதி:
மேலும் இப்பெருமான் சர்வாபரணங்கள் பூண்டு, சர்வ அலங்காரங்களோடு, பட்டுப் பீதாம்பரங்கள் அணிந்து நவ நிதிகளையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சொர்ணத்தையும், தன, தானியங்களையும் தன்னகத்தே குவித்து வைத்திருப்பவர். மிகவும் வரப்பிரசாதி.
செல்வந்தர் ஆக்கும் வழிபாடு:
ஆகவே இவரை வணங்குபவர்கள் தாமும் செல்வந்தராக இருப்பதுடன் மற்றவர்களையும் செல்வந்தராக மாற்றும் இயல்பு கொண்டவராக திகழ்வர்.
கோவில் அமைவிடம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருவிசநல்லூர் கற்கடேஸ்வரர் கோவில் சாலையில் அமையப்பெற்ற சொர்ணபுரியில் இக்கோவில் அமைந்துள்ளது.
அதாவது (ஸ்ரீயோகிநாதசுவாமி, சதுர்கால பைரவர் திருக்கோவிலுக்கும் ஸ்ரீகற்கடேஸ்வரர் கோவிலுக்கும் இடையில்) உள்ளது.
சர்வானந்த கோலாகலர்:
நினைத்ததை நினைத்தபடி தருகின்ற கற்பக விருட்சத்தின் அடியில் பத்ர பீட சிம்மாசனத்தின் மீது அம்மையும், அப்பனும் சர்வானந்த கோலாகலத்தில் அமர்ந்தபடி சொர்ணகால பைரவர் வலது திருப்பாதத்தை மடித்து இடது திருப்பாதத்தை தாமரை மலரில் பதித்தவாறும், சொர்ண பைரவி அம்மை தம்மிரு திருப்பாதங்களையும் தொங்கவிட்டபடி தாமரை மலரில் பாதத்தை பதித்தவாறு அமர்ந்திருப்பதும் விஷேசமாகும்.
பூரண அமுத கும்பம்:
சொர்ணகால பைரவர் தம் மடியில் பூரண அம்ருத கும்பத்தை வைத்திருப்பது வேண்டுபவர் வேண்டியபடி அனைத்து கோரிக்கையையும் நினைத்தது நினைத்தபடி, கேட்டது கேட்டபடி தந்து அருளுவதோடு நோய் நொடி இல்லாத நிலையையும், சர்வ சித்தியையும் தருவேன் என்பதாகும். அதனுள் இவ்வுலகில் உள்ள சர்வ தேவ தேவதா தெய்வங்கள் அடங்கி இருப்பதும் மேலும் நோய் நொடிகளை போக்கும் அமிர்தமும் நிறைந்து இருப்பதும் மிக விஷேசம்.
சொர்ண கும்பம்:
சொர்ண பைரவி தம் மடியில் ஒரு திருக்கரத்தால் என்றும் என்றென்றும் பொங்கி வழிந்து கொண்டே இருக்கும்சொர்ண கும்பத்தை பிடித்தபடி தன்னை தேடி வரும் அன்பர்களின் தாரித்ரிய நிலையை நீக்கி சொர்ணத்தை அள்ளி, அள்ளி வழங்கி சொர்ண சித்தியை தருவேன் என்பதாகும். மேலும் மறு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவரின் இடுப்பை தழுவியவாறு அமர்ந்துள்ளார். இவ்வாறு அமர்ந்திருப்பது என்பது குடும்ப ஒற்றுமையை வழங்குவேன், அனைத்து செல்வங்களையும் வாரி, வாரி வழங்குவேன் என்பதாகும்.
நாக பாச சூல டமருகம்:
தம் திருக்கரத்தில் வைத்திருக்கும் டமருகத்தால் பெரும் ஒலியை எழுப்பி அந்த சப்தத்தில் லயித்து தம்மை திரும்பி பார்க்கும் தன்னடியவர்களை நாக பாசத்தால் பிடித்து இழுத்து அவர்களின் சாப, பாப, தோஷங்களை திரிசூலத்தால் நீக்கி அனைத்து நலன்களையும் நிறைவாய் வழங்கி தகுதி இருந்தால் மோட்சமும் தருவேன் என்பதாகும்.
குருவின், குபேரனின் திசையான வடக்கே அமர்ந்து இறை சக்தி நிறைந்த ஈசானியத்தை நோக்கியவாறு அமர்ந்திருப்பது குருவின், குபேரனின் அருளை பரிபூரணமாக வழங்குவதோடு ஈசானியத்தில் நிறைந்த இறை சக்தியையும்வருபவர் எளிதாக பெறும்படி அமைக்கப் பட்டுள்ளது மிகவும் சிறப்பானது.
சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாடு என்பது வழிபடுபவரின் வாழ்க்கையில் தரித்திரம் தலை காட்டாது காத்து தன, தான்யம், சொர்ணம் முதலிய செல்வ செழிப்பை தரும் சிறப்பு கொண்டது.
சொர்ணாகர்ஷன பைரவர், 64 பைரவர்களுக்கும் அப்பாற்பட்டவர். அஷ்ட லட்சுமிகளுக்கும், குபேரருக்கும் நவ நிதிகளையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுக்கும் அதிபதி. மேலும் அவர்களின் அவ்வப்போது குறையும் செல்வத்தினை தம்மை நினைத்து மறுபடியும் வேண்டும் போது அதனையும் நிறைத்து தருபவரும் இவரே.
அனுதினமும் முப்பொழுதும் வீட்டு பூஜையறைகளிலும், வழிபாட்டு தலங்களிலும், சர்வ வியாபார ஸ்தலங்களிலும் மற்றும் தங்க, வைர நகை வியாபாரம் செய்யும் கடைகளிலும், காசு பணம் நிறைய புழங்கும் இடங்களிலும் வைத்து வழிபட மிகவும் உகந்தவர்.
இப்பெருமானை வீட்டில் வைத்து தினசரி மூன்று வேலைகளிலும் வழிபட்டு வர எந்த கஷ்டங்களும் நெருங்காது.
நஷ்டங்களும் வராது. தொட்டது துலங்கும். வைத்தது விளங்கும். சொர்ணம் கொழிக்கும். பவுர்ணமி தோறும் முறைப்படி உள்ளன்போடு இப்பெருமானை பூஜித்து மந்திரம் ஜெபித்து வர தலைமுறை தலைமுறையாக நீடித்து நிற்கக்கூடிய நிறை செல்வம் சேரும்.
வழிபட வேண்டிய நாட்கள்:
*திங்கட்கிழமை மாலை நேரங்கள், மாத பிரதோஷம், தினசரி பிரதோஷ காலங்கள், பவுர்ணமி மற்றும் வளர்பிறை அஷ்டமி நாட்கள், திருவாதிரை நட்சத்திர நாட்கள் இவரை வழிபட மிகவும் உகந்த நாட்கள்.
அதேபோல் மாதப்பிறப்பு, அவரவர் பிறந்த நட்சத்திர நாட்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், வியாழக்கிழமை மாலை நேரம், தேய்பிறை அஷ்டமி, அமாவாசை நாட்களிலும், ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷ, கேட்டை நட்சத்திர நாட்களிலும் இங்கு வந்து மஹா சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் மறையும். இனம் புரியாத பயம் தானாய் விலகும். சாப, பாப, தோஷங்கள், கடன் தொல்லைகள் குறையும். நோய் நொடிகள் விலகும். தீயவை அனைத்தும் விலகும். நல்லன அனைத்தும் நடக்கும். சனிக்கிழமைகளில் வழிபட சனிக்கிரக தோஷங்கள் (ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாமஷ்டத்து சனி) யாவும் விலகும்.
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான் காலச்சக்ராதிபதி. காலச்சக்கரத்தில் இப்பிரபஞ்சம் முழுவதும் (அதாவது பஞ்ச பூதங்கள், எட்டு திக்குகள், ஆகாயம், பூமி, நவக்கோள்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தேழு நட்சத்திரங்கள்) அடக்கம். இதற்கெல்லாம் மேலாக நவக்கோள்களின் பிராணனாக அதாவது மூச்சுக் காற்றாக இருப்பதும் இவரே. நவக்கோள்களில் சனைச்சரனுக்கு குருவாக இருந்து ஈஸ்வர பட்டம் தந்து சனீஸ்வரர் என ஆக்கியவரும் இவரே. அஷ்ட நாகங்களும் இவரின் பூணூலாக, இடைக் கச்சாக இருந்து வருவதும் மிகவும் விசேஷம்.
சொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலை, வில்வ மாலை, சந்தன மாலை, மஞ்சள் செவ்வந்தி மாலை, சம்பங்கி மாலை, பன்னீர் ரோஜா மாலை, சாற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது.
சிறப்பு மூலிகைகளை கொண்டு ஹோமம்
இவ்வாலயத்தில் அம்மாவாசை, தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பவுர்ணமி நாட்களில் காலை வேளையில் கால பைரவர், அஷ்ட பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமம் சர்வ கஷ்டங்கள் விலகி சர்வ காரிய சித்தி, சொர்ண சித்தி தரும் சிறப்பான கொல்லிமலையில் இருந்து கொண்டுவரப்பட்ட மூலிகைகளை கொண்டு நடத்தப்படுகிறது.
இதில் கலந்து கொண்டு குருவருளையும், இறைப்பேரருளையும் பெற்றுச் செல்லலாம்,
கும்பகோணம், திருவிசநல்லூர் சொர்ணபுரி உறை ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா மஹா சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட வாழ்வில் கிட்டும் பலன்கள்:
1. நினைத்தது நினைத்தபடி நடக்கும்.
2. கேட்டது கேட்டபடி கிடைக்கும்.
3. சொர்ண சித்தி கிட்டும்.
4. தன பிராப்தி கூடும்.
5. அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறையும்.
6. தொழிலில் மேன்மை உண்டாகும்.
7. சொத்து சுகங்கள், நில புலன்கள், மாடு கன்றுகள் நிறையும்.
8. அஷ்ட மங்களங்கள் கூடும்.
9. மனதில் தெளிவு பிறக்கும்.
10. நல்ல சிந்தனைகள் தோன்றும்.
11. நல்ல, நிறைவான, உயர்ந்த படிப்பு கிட்டும்.
12. நல்ல புகழ், நிறை செல்வாக்கு, அதிகாரமிக்க உயர் பதவி கிட்டும்.
13. நினைத்த வாழ்க்கை, நல்ல வரன், சந்தான பாக்கியம், வெளிநாட்டு உத்தியோகம் கிட்டும்.
14. நவக்கிரஹங்கள் நன்மை செய்யும்.
15. பஞ்சபூதங்கள் வசியம் ஆகும்.
16. பரிபூரண ஆயுள் ஆரோக்கியம் கூடும்.
17. குல தேவதா, குரு தேவதா சர்வ தேவ தேவதா தெய்வ
அனுக்ரஹம் கிட்டும்.
18. வாழ்வில் அனுதினமும் ஆனந்தம் நிறையும்.
19. மனதுக்கு நிறைவு ஏற்படும்.
20. வந்த வினைகள் நீங்கி வரும் வினைகள் போகும்.
21. சர்வ சாப, பாப, தோஷங்கள் விலகும்.
22. ஏவல், பில்லி, சூனியங்கள் ஓடும்.
23. எதிரிகள் விலகி ஓடுவர்.
24. பூத, பிரேத, பிசாசு எனும் கெட்ட சக்திகள் விலகி நன்மைகள் பெருகும்.
25. எதிர்மறை ஆற்றல் நேர்மை ஆற்றலாக மாறும்.
26. வீட்டில், வெளியில் சண்டை, சச்சரவுகள் விலகி ஒற்றுமை ஓங்கும்.
27. கெட்ட பழக்க வழக்கங்கள் மறையும்.
28. கெட்ட சகவாசம் விலகி ஓடும்.
28. சர்வ சங்கடங்கள் விலகும்.
29. சர்வ விக்கினங்கள் ஓடும்.
30. நோய் நொடிகள் நீங்கும்.
31. கடன் தொல்லைகள் விலகும்.
32. கொடுத்த பணம் திரும்பி வரும்.
33. கிட்டாதன யாவும் கிட்டும்.
34. எட்டாதன யாவும் எட்டும்.
35. குல தேவதா, குரு தேவதா, சர்வ தேவ தேவதா, தெய்வ திருவருள் கிட்டும்.
எம் கடந்த 26 பிறவி நினைவலைகள்:
எம் குருநாதர் சித்தர் ஸ்ரீ காக புஜண்டர் ஸ்ரீலஸ்ரீ தர்மலிங்க ஸ்வாமிகள் எடுத்துரைத்து அந்தந்த இடங்களுக்கு அழைத்து சென்று உணர்த்தியது மற்றும் எம் தியானத்தில் அவ்வப் போது இறை பரம்பொருள் எமக்கு எடுத்துரைத்தது*
1. கும்பகோணம் கும்பேஸ்வரர் திருவாலயத்தில் உக்ர லிங்கமாக;
2. திருக் கருப்பறியலூரில் சிவாலயத்தில் எம் குருநாதருடன்;
3. திருமியச்சூரில் ஸ்ரீ லலிதாம்பிகா ஆலயம் எழுப்பி பின் அம்மையின் திருக்கரத்தில் கிளியாக மறைந்தவராக;
4. சித்தர்காடு ஸ்ரீகாழி சிற்றம்பல நாடிகள் அவர்களுடன் 64 சித்தர்களில் யோக சித்தராக;
5. மருதமலையில் வாழ்ந்து நாடி வரும் பக்தர்களுக்கு வேப்பிலை தந்து அனைத்தும் கிட்ட செய்தவராக;
6. திருச்சோற்றுத் துறையில் மக்களின் வறுமை நீக்க அட்சய பாத்திரம் பெற்று அமுதம் வழங்கிய அதிசய தம்பதியராக;
7. சென்னை மயிலாப்பூரில் இன்றைய முண்டகக்கன்னி அம்மன் கோயிலில் திருவள்ளுவ தேவனுக்கு சமாதி அமைக்க முயன்ற சீடனாக;
8. அம்பர் மாகாளத்தில் பால்வடி மாரியம்மன் ஆலயத்தில் வேம்புசித்தராக;
9. முத்துப் பேட்டையில் மக்களுக்கு நன்மைகள் நிறைய செய்த இஸ்லாமிய சூபியாக;
10. குமணன்- பொங்கி சமேதராக, வள்ளலாக;
11. கொல்லி மலை குகையில் சிவபிரானை நோக்கி தவம் செய்தவராக;
12. திருவண்ணா மலை குகையில் ஈசனை நினைத்து தவச்சீலராக;
13. 500 வருடங்களுக்கு முன் இறை தொண்டு செய்து திருவிசநல்லூரில் தற்போது ஸ்ரீமஹாசொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஆலயத்தில் ஜீவசமாதி அடைந்தவராக;
14. திருநெல்வேலி மகேந்திரகிரி மலையில் மகேசன் நினைவில் வாழ்ந்தவராக;
15. திருவண்ணா மலை அருகில் உள்ள பர்வதமலையில் மஹேஸ்வரனை நினைத்து தவச்சீலராக;
16. சதுரகிரி பர்வதத்தில் குகையில் வாழ்ந்தவராக;
17. பழனி மலையில் முருகப்பெருமானை வழிபட்டு சித்தராக;
18. ஸ்ரீமஹா விஷ்ணுவை வழிபட்டு திருமண்டக் குடியில் அழகிய மணவாள தாசனாக;
19. காரைக்குடி அருகில் உள்ள இலுப்பைக் குடியில்
இறை நேசனாக;
20. பிரம்மரிஷி மலையில்*
*உறைந்தவராக;
21. உத்திர கோச மங்கையிலே;
22. திருக்காஞ்சி மாநகரிலே;
22. சீர்காழி சட்டைநாத புரத்திலே பைரவ பித்தனாக;
23. தென்காசிக்குப் பக்கத்தில் உள்ள திருவழுக்குப் பாறையிலே;
24. திருநாகை காரோகணத்திலே;
25. சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் துர்க்கை ஆலயம் அமைத்து வழிப்பட்டவராக;
26. கோவை மாவட்ட த்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையிலே;
27. தற்போது திருவிசநல்லூரில் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஆலயம் அமைத்து பைரவ உபாசகரான ஸ்ரீவேம்புச் சித்தராக;
28. அடுத்தபிறவியில் புண்ணிய காசியில் புனித கங்கை நதிக் கரையருகில் ஸ்ரீவிஸ்வநாதர் ஆலயத்தின் வடகிழக்கு பகுதியில் ஓரிடத்தில் பிறப்பவராக;
அதன் பின் அடுத்த பிறவியில் வந்து கேளுங்கள். தவத்தின் பயனால் அனைத்தையும் இப்பிறவியில் எடுத்து உரைப்பது போல் அப்பிறவியிலும் எடுத்து உரைப்பேன். பாக்கியம் இருந்தால்
திரும்பவும் பார்ப்போம்.
கும்பகோணம், திருவிசநல்லூர், சொர்ணபுரி உறை ஸ்ரீமஹா சொர்ணபைரவி சமேத சொர்ணகால பைரவர் திருக்கோயில் பற்றியும், ஆலயம் நிர்மாணித்த பைரவ உபாசகர் சொர்ண ஸ்ரீவேம்புச்சித்தர் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினால் கீழ்க்கண்ட வைகளில் சென்று பார்க்கலாம். தெரிந்து கொள்ளலாம்.
Face book (முகநூல்):
https://www.facebook.com/srivembusidhar.gunasshegareswamigal
Face book group (முகநூல் குழு):
1.சர்வலோக சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாட்டு குழு
2. நம்ம அதிசய சொர்ணபைரவர், திருவிசநல்லூர்.
Whatsapp (வாட்சப் குழு):
உலக சொர்ணபைரவ அடியார்கள்
Web site:
1. https://sornakarshana bairava.com/index.php
2.https://vkno.in/srimahasornabhairavi
Youtube:
https://www.youtube.com/channel/UCzjFs9wrqCjVOX6WolbAyq
Instagram:
https://www.instagram.com/vembusidhargmail.co/
Telegram:
https://t.me/Vembusidhar
ஸ்ரீவேம்புச்சித்தர்,
(பைரவ உபாசகர்)
ஆடிப்பூர திருநாள்:
இன்று மதியம் 1.04 முதல் நாளை மாலை 4.12 வரை பூரம் உள்ளது.
இன்நன்னாளிலே கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ணபுரி உறை வற்றாத ஜீவ நதி போல் அட்சயப்பாத்திரம் போல் பொங்கி பொங்கி வழிந்து கொண்டே இருக்கிற, சொர்ணத்தை வாரி வாரி வழங்குகின்ற சொர்ண கும்பத்தைதம் மடியிலே வைத்துள்ள வைத்துள்ள ஸ்ரீமஹா சொர்ண பைரவி அம்மையையும் நவநிதிகளில் இரு பெரும் நிதிகளான சங்க நிதி மற்றும் பத்ம நிதியுடனும், அனைத்தையும் தரவல்ல பூரண கும்பத்தை மடியில் வைத்து, நினைத்த தை நினைத்தபடி கேட்டதை கேட்டபடி தருகின்ற கர்ப்ப விருட்சத்தின் அடியில் அமர்ந்துள்ள ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமான் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானையும், சர்வ கஷ்டங்களையும் போக்க வல்ல அரசு வேம்பின் அடியில் அமர்ந்துள்ள ஸ்ரீமஹா சொர்ண வேம்பு வாலை யம்மனையும் இன்று மதியம் முதல் நாளை மாலை வரை வழிபட்டு செல்ல சர்வ கஷ்டங்களும் கடன் தொல்லைகளும் நீங்கப் பெற்று சொர்ணாசித்தியையும் தன பிராப்தியையும் பெறலாம்.
Sorrna Sri Vembusiddhar
(Bairava Upasakar),
திருவிசநல்லூர்,
கும்பகோணம்-612105.
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருவாலயத்தின் 30 தனி சிறப்புகள் என்ன? என்ன?
ஆலய அமைவிடம்:
கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ணபுரியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமஹாசொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப்பெருமான் ஆலயம் அருள்மிகு சிவயோகிநாதர் ஆலயத்திற்கும் அருள்மிகு கற்கடேஸ்வரர் ஆலயத்திற்கும் மத்தியில் இத்திருவாலயம் அமையப் பெற்று உள்ளது.
திருவாலய சிறப்பு:
1. இத்திருவாலயம் ஸ்ரீமஹா கால பைரவர் , ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானுக்கான தனிக் கோயில்.
2. ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ண பைரவர் காலி, சரஸ்வதி லட்சுமி ரூபிணி சமேத சிவ விஷ்ணு பிரம்ம ரூபர். மொத்தத்தில் 65 பைரவி பைரவ சொரூபமான ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர்.
3. ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான் ஒரு நாளில் முப்பொழுதும் எப்பொழுதும் நினைத்து நினைத்து துதிக்கப் பட வேண்டிய தெய்வம். பொன், பொருளை நிறைக்கக் கூடிய தெய்வம்.
4. இது போன்ற தொரு அதிசய அதியற்புத தெய்வத் திருவுரு உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத அபூர்வமான ஒன்றாகும். This deity is a unique one in this World and also
got a copy right deity.
ஸ்ரீவேம்புச்சித்தரின் சிறப்பு:
5. 1990 களில் இருந்து ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மீகத்தில் இருந்து வரும் இவர் திருவண்ணாமலையில் நிருதி மற்றும் வாயு லிங்கத்திற்கிடையில் 13.2.2003 ஸ்ரீமஹா பைரவப் பெருமானால் தடுத்தாட்கொள்ளப் பெற்ற பைரவர் உபாசகரான சொர்ணஸ்ரீ வேம்புச் சித்தர் ஸ்ரீகுணசேகரன் ஸ்வாமிகள் தியானத்தில் 2010 ம் ஆண்டில் ஒரு நாள் தோன்றி திருவாலயம் எழுப்ப சொல்லி கேட்க இவரோ "இந்த உலகம் தோன்றியது முதல் இன்றுவரையில் எவருக்கும் காண்பித்திராத அதிசய அதியற்புத தெய்வத்திருவுருவை எமக்கு காண்பித்து அருளினால் ஆலயம் எழுப்புவதாக" கூற "அவ்வாறே திருக்காட்சி தந்தருளுவோம்" என்று திருக்காட்சி தந்தருளிய திருவுருவ அமைப்பே சொர்ணபுரியில் உள்ள மிக சிறப்பு வாய்ந்த திருவுரு அமைப்பாகும்.
கற்பக விருட்சம்:
6. மேலும் சிறப்பு என்னவென்றால் நினைப்பதை நினைத்தபடி தருகின்ற, கேட்டதை கேட்டபடி தருகின்ற தேவலோக தருவான
தெய்வீக சக்திகள் நிறைக்கப் பெற்ற கற்பக விருட்சத்தின் அடியில் இலட்சுமியின் அம்சமான தாமரை பீடத்தில் அமர்ந்து அருளுவது மிக மிக சிறப்பான ஒன்றாகும்.
சங்க நிதி, பத்ம நிதி:
7. மேலும் மேல் திருக்கரங்களில் நவநிதிகளில் இரு பெரும் நிதிகளான சங்க நிதி,(இதன் மதிப்பு 1×16 பூஜ்ஜியம் கொண்டது) பத்ம நிதி ,(இதன் மதிப்பு 1×32 பூஜ்ஜியம் கொண்டது) களுடன் திகழ்வது மிக மிக சிறப்பான ஒன்று. அஷ்டலட்சுமி கள் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் குபேரன் நவநிதிகளையும் வேண்டிப் பெறுவதும்; அதேபோல் தாம் வேண்டிப்பெற்ற செல்வங்களை தம்மை வேண்டும் மக்களுக்கு அவர்கள் வழங்குவதால் குறைகின்றதை மறுபடியும் இவரை வேண்டி பெறுவதும் மிக விசேஷமான ஒன்றாகும். தினசரி இரவு வேளைகளில் அஷ்ட லட்சுமிகளும்; குபேரனும்;
சகல தேவ தேவதா தெய்வங்களும்; சர்வ சித்த, ரிஷி, முனி, யோகி,
ஞானி நாதாக்களும் இங்கு வந்து வழிபடுவது தொன்றுதொட்டு நடைபெறும் வழக்கம் ஆகும்.
நாக, பாச சூல டமருக சிறப்பு:
8. ஸ்ரீமஹா சொர்ண கால மேல் திருக் கரத்தில் நாக பாச சூலம் தாங்கி இருப் பது என்பது டமரு கத்தை இவர் அடிக்கும் போது அந்த சப்தத்தை கேட்டு தம்மை திரும்பி பார்க்கும் பக்தக் கோடிகளை நாக பாசத்தை கொண்டு அருகில் இழுத்து திரிசூலத்தால் அவர்களின் சாப பாப தோஷங்களை போக்கிஅனைத்து வளங்களையும் வழங்கி கடைசியில் முக்தி அளிப்பதற்காக வைத்துள்ளார்.
பூரண கும்பம்:
9. அதேபோல் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவர் தமது மடியில்சர்வ தேவ தேவதா தெய்வங்கள், நவநிதிகள், நவரத்தினங்கள், அஷ்ட ஐஸ்வர் யங்கள், நவதானியங்கள் மற்றும் நோய் நொடிகளை தீர்க்கக்கூடிய அமிர்தம் நிறைந்த நினைத்தது யாவையும் கேட்ட அந்த வினாடியே வழங்க வல்ல பூரண அமுத கும்பத்தை மடியில் வைத்து உள்ளார்.
சொர்ண கும்பம்:
10. ஸ்ரீமஹா சொர்ண பைரவி அம்மையோ, தமது மடியில் வற்றாத ஜீவ நதியாய், அட்சயப் பாத்திரம் போல் என்றென்றும் பொங்கி பொங்கி வழிந்துக் கொண்டே இருக்கக் கூடிய சொர்ணகும்பத்தை தமது ஒரு திருக் கரத்தால் பிடித்தவாறு வைத்துள்ளாள். மற்றொரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடுப்பை மிக அன்பு மிகு கொண்டு தழுவி இருக்கிறாள்.
சர்வானந்த கோலாகலர்:
11. ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவப் பெருமான் ஆகிய இருவரும் சொர்ண நிறத்தில் புன்னகை தவழும் திருமுகங்களுடன் சர்வானந்த கோலாகலராய் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவர் மேல் திருக்கரத்தால் ஒருவரை ஒருவர் மிக அன்பாக அணைத்தபடி அம்மையப்பனாய் அமர்ந்திருந்து அருளுவது மிகவும் விசேஷம் ஆகும்.
அபய வரத கரம்:
12. ஸ்ரீமஹா சொர்ண கால பைரவப் பெருமான் கீழ் திருக்கரங்களில் அபய வரத முத்திரை கொண்டு அதாவது காக்கும் மற்றும் அருளும் முத்திரை காட்டி தம்மை உள்ளன்போடு நல்ல நம்பிக்கையோடு வழிபடும் பக்தக் கோடிகளுக்கு அனைத்து வளங் களையும் 16 பேறுகளையும் நிறைக்கத் தந்து காத்து அருள்வேன் என்று முப்பெரும் தேவியர் சொரூப ராய், அஷ்ட பைரவி சமேத அஷ்ட பைரவ பைரவ சொரூபராய், சதுஷ்சஷ்டி பைரவி சமேத பைரவ சொரூபராய், மொத்தத்தில் 65 ஆவது பைரவி சமேத பைரவ ரூபராய், அதாவது ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவராக ஸ்ரீமஹா மஹா சொர்ணாகர்ஷன பைரவராய் ஸர்வ தேவ தேவியர் சொரூபராய் இருவரும் அருள் மழை, பொருள் மழை, தன மழை பொழிந்து வருகின்றனர்.
சொர்ணாகர்ஷன அமைவிட சிறப்பு:
13. குருவிற்குரிய திசையான வடக்கே குருவாய் அமர்ந்து ஈசானியம் எனும் வடகிழக்கு திசையை நோக்கியவாறு பஞ்ச பூத சக்தியை கவர்ந்து இழுத்து தரும் பிரமிட் அமைப்பு மூலஸ் தானத்தில், நினைத்ததை நினைத்த படி தருகின்ற, கேட்டதை கேட்டபடி தருகின்ற கற்பக விருட்சத்தின் அடியில் ஆன்மீக மற்றும் இறை சக்தி நிறைந்த ஈசானியத்த்தில் இருந்து ஆன்மீக மற்றும் இறை சக்தி நிறைந்த ஆன்மீக அதிர்வலைகளை எளிதாக பெற்று இங்கு வந்து வேண்டும் பக்த கோடிகளுக்கு அனைத்தையும் உடனுக்குடன் வாரி வழங்கும் பெரு வள்ளலாய் அமர்ந்து அருளிக் கொண்டு இருப்பது மிக மிக விசேஷமான அமைப்பாகும். இங்கு வந்து வழிபட குருவருள் மட்டுமின்றி அனைத்து தெய்வங்களின் அருளும் பரிபூரணமாக கிட்டும்.
9 கோள்களுக்கும் 9 பைரவர்:*
14. நவகோள்களின் பிராணனாக இவர் திகழ்ந்தாலும் சூரியனின் அதிபிரத்யட்ச தேவதையாக ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திகழ்கிறார். இவரது திருச்சன்னதியை சுற்றி 4 பலி பீடங்களில் அஷ்ட பைரவர்கள் சூட்சுமமாய் இருந்து அருளிக் கொண்டு உள்ளனர். மேலும் சூரியனைச் சுற்றியே அனைத்து கோள்களும் சுற்றி வருவது போல் இவரை சுற்றி அஷ்ட பைரவர்கள் சூட்சமமாய் எப்போதும் இங்கு இருந்து கொண்டிருப்பது மிகவும் விசேஷமாகும்.இங்கு வந்து வழிபட நவகிரஹ தோஷங்கள் யாவும் விலகும். நினைத்தது யாவும் நடக்க, கேட்டது யாவும் கிட்ட ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பிரருமானுக்கு சம்பங் கி மாலை சாற்றி, பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து 2 பசுநெய் தீபம் ஏற்றி திரிவாலயத்தை 27 முறை சுற்றி வழிபட வாழ்வில் வளங்கள் யாவும் கிட்டும்.
சிதம்பரத்தில் உள்ளது, சொர்ணபுரியிலும் உள்ளது.
அதேபோல் ஸ்ரீசக்ரநகரமஹா ராஜ பீடமும் இங்கு அமையப் பெற்று உள்ளது.
பக்தக் கோடிகளுக்கு அவர்கள் வாழ்வில் நினைத்தது நடக்க கேட்டது கிடைக்க
சொர்ண மழை பொழிய
15. திருவாலய கருவறையில் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானோடு சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெரு மானும் ஸ்ரீசிவகாம சுந்தரி தாயாரும் வீற்றிருந்து அருள்புரிகின்றனர். சிதம்பரத்தில் எப்படி ஸ்ரீநடராஜப் பெருமான் சன்னதியில் சொர்ணகால பைரவப்பெருமான் உள்ளாரோ அது போல் இங்கு ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானும் ஸ்ரீநடராஜப் பெருமானும் உள்ளார்.
16. அதேபோல் நிறைய சக்தி நிறையப் பெற்றுள்ள மிகப் பழமையான திருவாலயங்களில் எப்படி ஸ்ரீசக்கரம் நிறுவப்பட்டு எப்படி சக்தோயோடு திகழ்கிறதோ அதேபோல் இத்திருவாலயத்திலும் சர்வ சக்தி ஸ்வரூபமான ஸ்ரீமஹா மேரு நிறுவப் பெற்றுள்ளது.
17. மேலும் கர்ப்பிக்கிரஹத்தில் சர்வகாரிய சித்திகளை தரவல்ல யந்திரங்களும் அததற்கான மூலிகைகளும் பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளது. இதுவும் இங்கு ஒரு தனி சிறப்பு.
பிறந்த நட்சத்திர நாள் வழிபாடு:
18. இவரது உடலில் 12 இராசிகளும், 27 நட்சத்திரங்களும் இவரின் உடல் அங்கங்களாக இருப்பதால் இவரை சர்வ இராசி, நட்சத்திரக் காரர்களும் அவரவர் தங்கள் பிறந்த நட்சத்திர நாளில் பன்னீர் அபிஷேகம் செய்வித்து அர்ச்சனை செய்து வழிபட ஒளிமயமான வாழ்க்கை அமையும்.
தொழில் அபிவிருத்தி அடைய:
19. ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவருக்கு அபிஷேகம் செய்யும்போது கோமுகத்தில் வந்து வழியும் தீர்த்தத்தை பிடித்துக் கொண்டு போய் வீடுகளில், கடைகளில், கல்லாப் பெட்டிகளில் தெளிக்க அந்த இடத்தின் தோஷங்கள், பீடைகள், சர்வ கஷ்ட நஷ்ட உபத்திர வங்கள், கடன் தொல்லைகள் யாவும் விலகி, தாரித்திரியம் அகன்று சர்வ ஜன வசியம் ஏற்பட்டு சகல சௌபாக் கியங்களும் முழுமையாக நிறையும்.
செல்வ வளம் சொர்ண வளம் ஏற்பட:
20. தினசரி குரு ஓரை, அல்லது சுக்ர ஓரையில், வியாழக் கிழமை மாலை 4 to 5 மணி குபேர வேளை, வெள்ளிக் கிழமை, தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி நாட்களில் 108 காசுகளை மஞ்சள் துணியில் சுற்றி முடிச்சாக கொண்டு வந்து சொர்ணாகர்ஷன பைரவர் திருவடிகளில் வைத்து அர்ச்சனை செய்து இரண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு அதை கொண்டு போய் காசு பணம் வைத்து புழங்கும் இடத்தில் வைத்திட செலவ செழிப்பு ஏற்படும்.
,
சிறப்பு வாய்ந்த ஆலய சன்னதிகள்:
21. சொர்ணபுரியில் நவக்கிரக சன்னதி, விஷ்ணு, பிரம்மா, சிவன் குருவுக்கென்று தனி சன்னதிகள் கிடையாது. ஏனெனில் நவக்கோள்களின் பிராணனாக இவரே திகழ்வதாலும், சனீஸ்வரனுக்கு குருவாக இவரே இருப்பதாலும், மேலும் சிவ, விஷ்ணு, பிரம்ம சொரூபமாக இவரே நிகழ்கின்ற காரணத்தால் இங்கு அவர்களுக்கென்று சந்நிதிகள் கிடையாது. ஸ்ரீமஹா சொர்ண வரசித்தி வலம்புரி கணபதி சன்னது, ஸ்ரீமஹா சொர்ண வடுக பைரவர் சன்னதி, ஸ்ரீ நாகர்களோடு கூடிய ஸ்ரீமஹா சொர்ண வேம்பு வாலையம்மன் சன்னதிகள் மட்டுமே உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பும் உண்டு.
சிறப்பு வாய்ந்த துவார பாலகர்கள்:
22. மேலும் இங்கு துவார பாலகர்களாக ஆலய நுழைவாயிலில் ஸ்ரீமஹா சுவானரும், ஸ்ரீமஹா கருப்பண்ண ஸ்வாமியும் இருப்பதோடு எல்லோருக்கும் காவல் தெய்வங்களாகவும் எல்லை தெய்வங்களாகவும் இவர்கள் இருவரும் திகழ்ந்து கொண்டு இறுக்கிறார்கள். இந்த அமைப்பும் வேறு எங்கும் கிடையாது.
திருவாலயத்தின் சிறப்பு:
23. இங்கு வந்து கால் பதிக்க தலை யெழுத்து மாறும். ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட ஜாதகத்தில் உள்ள பாதகங்கள் விலகும். ஆயிரம் வருடம் பழமையான ஆயிரம் கோவில் களுக்கு சென்று வழிபட்டால் என்ன பலன் கிட்டுமோ அது இங்கு வந்து வழிபட அது கிட்டும்.குழந்தைப் பேறு, மற்றும் சர்வ காரியங்கள்நிறைவேற வேண்டி துலாபாரம் கொடுப்பது இங்கு வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
ஸ்ரீமஹா சொர்ண வடுக பைரவர்:
24. இங்குள்ள வடுக பைரவர் 8 வயது பாலகனாக விளங்குவதால் இவரை வணங்க 64 பைரவர்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இவர் வடகிழக்கில் இருந்து தெற்கு நோக்கி பார்த்து அருள் புரிகிறார். இவர் வரப்பிரசாதி. இவரை அகலில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் சிவப்பு காட்டன் துணியில் 27 மிளகை வைத்து முடித்த முடிச்சை அதில் வைத்து தீபம் ஏற்றி ஸ்ரீமஹா வடுக பைரவருக்கு செவ்வரளி மாலை சாற்றி வழிபட வாழ்வில் உள்ள சர்வ கஷ்ட நஷ்ட உபத்திரவங்களும், சர்வ கடன் தொல்லைகளும் நாள்பட்ட நோய் நொடிகளும், சூரியனைக் கண்ட பனி போல் விலகும். செவ்வாய்க்கிழமை தோறும் வழிபட கடன் தொல்லைகள் முழுவதும் தீரும் கடன் தொல்லைகள்குறைய ஆரம்பிக்கும்., நோய் நொடிகள் தீரும். சனிக்கிழமை தோறும் வழிபட சனிக் கிரஹ தோஷங்கள் அனைத்தும் விலகும். அம்மாவாசை அன்று வழிபட சர்வ சாப பாப தோஷங்கள், முன்னேற விடாமல் பீடித்துள்ள பீடைகள், ஏவல் பில்லி சூனிய கோளாறுகள் அகலும். தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் (இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காயெண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் கொண்டு தனித்தனியாக 5 அகல்களில் ஏற்றி வழிபட சர்வ தோஷங்கள் விலகும். சனி , ராஹு, கேது தோஷங்கள், பித்ரு தோஷம் விலக ஞாயிற்றுக் கிழமை ராஹு கால வேளைகளில் ஸ்ரீமஹா சொர்ண வடுக பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்து வழிபட சனி, ராஹு, கேது தோதங்கள் விலகும்.
ஸ்ரீமஹா சொர்ண வரசித்தி வலம்புரி விநாயகர்:
25. வரசித்தி வலம்புரி விநாயகர் வடமேற்கு எனும் வாயு மூலையில் அரசு வேம்பிற்கு அருகில் கிழக்கு நோக்கி சூரிய சந்திர பஞ்சபூத பேராற்றலுடன் தம்மை உள்ளன்போடு வழிபடும் பக்தக் கோடிகளுக்கு வாயு வேகத்தில் சென்று காரியங்களில் உள்ள சர்வ தடைகளையும், விக்கினங்களையும் போக்கி காரிய வெற்றியை தருபவர். இவருக்கு புதன் கிழமைகளில் அருகம்புல் சாற்றி தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட காரிய தடைகள், விக்கினங்கள் விலகும்.
ஸ்ரீமஹா சொர்ண வேம்புவாலை அம்மன்:
26. அரசு வேம்பின் அடியில் ஆரம்ப காலங்களில் மூன்று கற்களில் ஸ்ரீகாத்தாயம்மன், ஸ்ரீமஹா மாரியம்மன், ஸ்ரீ அஷ்ட பைரவிகள் என பத்து அம்மன்களை அவைகளில் ஆவாஹனம் செய்து வழிபட்டுக் கொண்டு வந்த வேளையில் திடீரென்று அரச மரத்தின் அடியில் இருந்து தோன்றிய மூன்று வேர்கள் அந்த மூன்று கற்களையும் தன்னுள்ளே சுவீகரித்து கொண்டது. அதன் பின் இங்கு வந்த சில பெண்மணிகளுக்கு அருள் வந்து பல அம்மன்களின் அருள் பரிபூரணமாக இங்கு நிறைந்து உள்ளது என்று சொல்லி வந்த வேளையில் தியானத்தில் தோன்றிய அம்மன் ஸ்ரீவேம்பு வாலை அம்மனின் கழுத்து அளவு சிலையை இரு நாகர்களுடன் அங்கு பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு கூற அவ்வாறே ஸ்ரீமஹா சொர்ண வேம்புவாலை அம்மன் சிலை இரண்டு சர்ப்பங்கள் பக்கமிருக்குமாறு வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பதினொரு அம்மன்களும் பக்தக் கோடிகளால் வணங்கப்பட்டு அவர்களுடைய திருமணத்தடை, பிள்ளைப்பேறு, சர்வ சர்ப்ப தோஷம் போன்ற தடைகளை நீக்கி நல்வாழ்வு வழங்கி கொண்டு இருக்கிறாள். அம்பாளுக்கு பசும்பால், பன்னீர், மஞ்சள் தூள் கொண்டு அபிஷேகம் செய்து நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காயெண்ணெய்,
இலுப்பையெண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து அம்மனை சுற்றி வழிபட தோஷங்கள் யாவும் விலகி திருமணப் பேறு, குழந்தைப்பேறு கிட்டும். சர்ப்ப தோஷங்கள் யாவும் விலகும்.
திருவாலய சிறப்பு:
27. ஆகவே இங்கு வந்து கால் பதிக்க தலையெழுத்து மாறும். ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானை ஸ்ரீவேம்புச்சித்தர் சொல்லியுள்ள முறைப்படி வழிபட ஜாதகத்தில் உள்ள பாதகங்கள் யாவும் சாதகமாகும். ஆயிரம் வருடம் பழமையான ஆயிரம் கோவில் களுக்கு சென்றால் என்ன பலன் கிட்டுமோ அது இந்த ஆலயத்தில் வந்து வழிபட பரிபூரணமாக கிட்டும் என்பது இங்கு வந்து வழிபட்டு செல்லும் பக்தக்கோடிகள் நாளும் பெற்று வரும் நன்மைகளே அதற்கு சாட்சியாக இருந்து கொண்டி ருக்கிறது.
வழிபாட்டு சிறப்பு:
28. உள்ளன்போடு நன்னம்பிக்கை கொண்டு ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட நோயற்ற வாழ்க்கை, நல்ல உயர் படிப்பு, அரசு & அயல்நாட்டு உத்தியோகம், அதிகாரம், புகழ், செல்வாக்கு மிக்க பதவி, மனதிற் கேற்ற திருமணம், நற்குழந்தைப் பேறு, சொர்ணம், தனம், நில புலம், வீடு, வாசல் என அனைத்தையும் பெறலாம்.
திருவாலயவிபூதி சிறப்பு:
29. கடைகள் சரியாக ஓடவில்லை, வியாபாரம் நடக்கவில்லை, தொழிலில் முன்னேற்றம் இல்லை என்றால் சித்தர் ஸ்வாமிகள் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவரை தியானித்து, மந்திரித்து தருகின்ற விபூதியை அவர் சொன்னபடி கொண்டு போய் தெளிக்க வியாபாரம் செழிக்கும். விற்காத இடம் விற்கும். விளையாத நிலம் விளையும். விளங்காத வீடு விளங்கும்.
திருவாலய எலுமிச்சை சிறப்பு:
30. வீட்டில் உள்ள ஏவல் பில்லி சூனியக் கோளாறுகள், சண்டை சச்சரவுகள், மன நிம்மதியின்மை சரியாக சித்தர் ஸ்வாமிகளிடம் எலுமிச்சை கனி மந்திரித்து பெற்று சென்று பூஜையறையில் வைக்க நல்ல மாற்றங்கள் கிட்டும்.சித்தர் ஸ்வாமிகள் சொல்வது போல் வீட்டில் தூபங்கள் தொடர்ந்து போட்டு வர நல்லது நடக்க ஆரம்பிக்கும்.
சொர்ண ஸ்ரீவேம்புச்சித்தர் குணசேகரன் ஸ்வாமிகள்,
சர்வலோக பைரவர் சமஸ்தானம்,
ஸ்ரீமஹா சொர்ணபைரவி சமேத சொர்ணகால பைரவர் @ ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோயில், திருவிசநல்லூர், கும்பகோணம்-612105.
எது எது தோஷம்? எது எது கர்மம்?
ஒவ்வொரு பிறவியிலும் ஊர்ந்து வந்து உறுத்தும் வல்வினை:
1. முதியவர்களை மதியாது நடத்துவது.
2. பெற்றோரை (தாய்/ தந்தையரை) கவனிக்காதது/மதியாதது
3. தன் பிள்ளைகளை தானே வேறுபடுத்தி நடத்துவது.
4. தன் மருமகள்களை தானே வேறுபடுத்தி நடத்துவது.
5. கோள் சொல்லி குடும்ப த்தை பிரிப்பது
6. மாமனார்/மாமியாரை அவமதிப்பது
7. பெண் பிள்ளைகளை தூஷிப்பது
8. கர்ப்பத்தைக் கலைப்பது
9. பெண்களை ஆண்கள் துன்புறுத்துவது.
10. ஆண்களை பெண்கள் அவமதிப்பது.
11. நல்லவனுக்கு ஏவல், பில்லி, சூனியம் வைப்பது
12. நல்லவன் வணங்கி வரும்தெய்வங்களைக் கட்டுவது.
13. தீட்சை கொடுத்த மந்திரங்களை வேலை செய்யாமல் செய்வது
14. சொத்து/காரியம்/ சுகங்களுக்காக நடிப்பது,மாறி மாறிப் பேசுவது
15. ஆண்களை பெண்கள்ஏமாற்றுவது
16. பெண்களை ஆண்கள்ஏமாற்றுவது.
17. நம்பிக்கைத் துரோகம் செய்வது
18. அடுத்தவர்/கோயில்நில புலன்களை அபகரிப்பது
19. சர்ப்பங்களை அடிப்பது/கொல்வது
20. மிருகங்களை/பட்சி களை/உயிரினங்களைவதைப்பது/அடித்து சாப்பிடுவது
21. கோயில் மற்றும் நீர் நிலைகளை அசுத்தப்படுத்துவது/மூடுவது
22. பிறரை அடிமையாய்நடத்துவது
24. மஹான்களை தூஷிப்பது.
25. இறைப் பரம்பொருளைதூஷிப்பது
26. பொறாமை/பேராசையால் பிறரை படுத்துவது
27. குழந்தைப் பேறு இல்லாதவரை கேவலப் படுத்துவது, பேசுவது
28. வியாதியஸ்தரிடம் மனம் நோக்கும்படி பேசுவது, நடந்துக் கொள்வது
29. ஆணவம் கொண்டு அனைவரையும் மதியாதுஇருப்பது.
30. கோயிலில் திருடுவது
31. நம்பிக்கைத் துரோகம்செய்வது
32. அடுத்தவர் பொருளை
அவரவர் அனுமதி பெறாதுகவர்வது, ஏமாற்றுவது
33. குருவுக்கு சீடன் துரோகம்செய்வது
34. சீடனுக்கு குரு துரோகம் செய்வது
36. நன்றி மறப்பது/கொல்வது
37. வலியார் எளியாரை வாட்டுவது
38. பிறரை மனம் நடுங்கச் செய்வது
39. பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பது.
40. கடமைகளில் இருந்து விலகுதல்
41. கூட இருந்தே குழி பறிப்பது
போன்றவையே கர்ம வினைகளுக்கு அடிப்படை காரணம்.
இது எதிலும் படித்ததும் இல்லை
படித்ததில் பிடித்ததும் இல்லை. இது எமது கருத்தே.
ஸ்ரீமஹாசொர்ணாகர்ஷனபைரவப் #பெருமானின்சிறப்பு:
மஹாலக்ஷ்மி மந்திர கோசம், ஸ்ரீதத்வநிதி போன்ற பழைய நூல்களில் சொல்லப்பட்டுள்ள காலசக்ராதிபதி ஸ்ரீமஹா வடுக பைரவர் எனும் ஸ்ரீமஹா கால பைரவர், அஷ்ட திக் பாலகர்களை நிர்வகிக்கும் ஸ்ரீமஹா அஷ்ட(8) பைரவர்கள் நவக்கோள்களின் பிரணனாக நவ(9) பைரவர்கள், அறுபத்தினான்கு கலைகளையும் யோகங்களை யும் வழங்கும் ஸ்ரீஅஷ்டாஷ்ட (64) பைரவர்கள், மேலே சொல்லப்பெற்ற அனைத்தையும் ஒருசேர வழங்கும் 65ஆவதான ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர்:
தன்னை இகழ்ந்த பிரம்மனின் அகந்தையை அழிக்க பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுக்க சாந்த, மங்கள சொரூபரான ஸ்ரீமஹா சிவனார் எடுத்த உக்ர ரூபமே ஸ்ரீமஹா வடுக பைரவர் எனும் ஸ்ரீமஹா கால பைரவர் ரூபம். இவரே காலச்சக்ராதிபதி. காலச்சக்ரத்தில் இப்பிரபஞ்சம் முழுவதும் அதாவது 5 பூதங்கள், 8 திக்குகள், ஆகாயம், பூமி, 9 கோள்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் என இப்பிரபஞ்சம் யாவும் அடங்கி உள்ளது. இப்பூமியை தாங்குகிற அஷ்ட நாகங்களை ஸ்ரீமஹா பைரவர் தம் மேலே இடையிலும், பூணூலாகவும், ஆபரண மாகவும் அணிந்து உள்ளார். கபால மாலை பூண்டவர். பூத, வேதாள, பிரேத, பிசாசு கூட்டங்களின் தலைவர். இவ்வுலகின் சர்வ புண்ணிய சேத்திரங்களையும் சர்வ புண்ணிய நதிகளையும் காத்து அருளுபவர். சர்வ மந்த்ர, யந்திர, தந்திரங்களின் நாயகர். சகல மூலிகைகளின் தலைவர். நவக்கோள்களின் பிரணனாக திகழ்பவர். சனைச்சரனின் குருவாக இருப்பவர். அஷ்ட லட்சுமிகளால், குபேரனால் வணங்கப்படுபவர். சிவ வழிபாட்டின் பூரணத்துவைத்தை பெற்றுத் தருபவர்.
எட்டு திசைகளின் காவலர்களான அஷ்டதிக் பாலகர்களை நிர்வகிக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும்; நவக்கோள்களின் பிராணன் ஆக அதாவது மூச்சுக் காற்றாக விளங்குவதால் நவக்கோள்கள் ஒவ்வொன்றுக்கும் பிரத்யட்ச அதிபதி தெய்வமாக நவ(9) பைரவர்கள்ஆகவும் திகழ்கிறார். அறுபத்து நான்கு கலைகளை மக்களுக்கும்; அறுபத்தி நான்கு யோகங்களை சித்தர்களுக்கும் அருளும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவர்களாகவும்; மேலே சொல்லப் பெற்றுள்ள அனைத்தையும் வழங்குவதுடன் மேலும் சொர்ண சித்தியை, தன பிராப்தியை, அஷ்ட ஐஸ்வர்யங்களை, அஷ்ட மங்களங்களை, நவ ரத்தினங்களை, நவ தானியங்களை, கோடி கோடி லாப கடாட்ச குபேர லோக சம்பத்தை வாரி வழங்கும் பொருட்டு, ஸ்ரீமஹா சொர்ண (வர்ஷினி) பைரவி சமேத சொர்ண (கால) ஆகர்ஷன பைரவராகவும் திகழ்கிறார்.
காசி கங்கைக் கரையில் 64 கட்டங்களிலும் 64 பைரவர்களாக இருந்து கங்கை நதியையும் 64 படித்துறைகளையும் காத்து வருவதாக புராணங்கள் கூறுகின்றன.
அனைத்தையும் தரும் கற்பக விருட்சத்துடன் கூடிய சங்க நிதி, பத்ம நிதி, சொர்ண பூரண கும்பத்துடன், அபய வரத முத்திரை தாங்கிய ஸ்ரீமஹா சொர்ண வர்ஷினி பைரவி சமேத சொர்ணாகர்ஷன பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் இவ்வுலகத்தில் கும்பகோணம் திருவிசநல்லூர், கற்கடேஸ்வரர் சாலையில் உள்ள சொர்ணபுரியில் மட்டுமே உள்ளது. இது பைரவ உபாசகர் ஸ்ரீவேம்புச்சித்தர் குணசேகர ஸ்வாமிகளுக்கு தியானத்தில் திருக்காட்சி காட்டி அருளிய அதிசய அதியற்புத தெய்வ திருக்கோலம் ஆகும்.
அதேபோல் அவ்வப்போது அசுரர்களிடம் இருந்து தேவர்களை காக்க அசுரர்களை அழிக்க போரிடும் போது அந்த அசுரர் மீது இருந்து விழுந்த ஒவ்வொரு சொட்டு இரத்தத்தில் இருந்தும் ஒவ்வொரு அசுரர் தோன்றியதாகவும் அவர்களை அழிக்க ஒன்றிலிருந்து எட்டு ரூபம் எடுத்து பின் அவ்வெட்டு ரூபத்திலிருந்து எட்டெட்டு ரூபம் எடுத்து அறுபத்தி நான்கு பைரவர்களாக மாறி அசுரர்களை அழித்ததாகவும் புராணங்கள் கூறுகிறது. அவ்வாறு போரிடும் போது அஷ்ட(8) பைரவர்களுக்கு அஷ்ட(8) பைரவி சக்திகளையும், அஷ்டாஷ்ட (64) பைரவர் களுக்கு அஷ்டாஷ்ட(64) பைரவி சக்திகளையும் தேவாதி தேவர்கள் வழங்கியதாக கூறப்படுகிறது.
பிரம்ம கபாலம் நீங்கி உக்கிரம் தணிந்து கருநிறம் மாறி பொன்னிறமாகி சொர்ண பைரவியுடன் சர்வானந்த கோலாகலராக புன்னகை பூக்கும் திருமுகங்களுடன் எடுத்த திருக்கோலமே ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோலம்.
நவ (9) பைரவர்கள் &
அஷ்ட(8) பைரவர்கள்:
01.அசிதாங்கபைரவர்: (வடகிழக்கு (ஈஸானன்) (குரு)
அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக அஷ்ட பைரவிகளில் ஒரு சக்தியான பிராம்ஹி தேவி விளங்குகிறார்.
"ஓம் ஞான தேவாய வித்மஹே வித்யா ராஜாய தீமஹி
தந்நோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்."
"ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ பிராம்ஹி ப்ரசோதயாத்."
02. ருருபைரவர்: (கிழக்கு) (இந்திரன்) (சுக்கிரன்)
ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். காளை வாகனத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக அஷ்ட பைரவிகளில் ஒரு சக்தியான மாகேஸ்வரி தேவி விளங்குகிறார்.
"ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ ருரு பைரவ ப்ரசோதயாத்."
"ஓம் வருஷபத் வஜாய வித்மஹே ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தந்நோ ரெளத்ரி ப்ரசோதயாத்."
03. சண்ட பைரவர்: (தெற்கு) (யமன்) (செவ்வாய்)
சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக அஷ்ட பைரவிகளில் ஒரு சக்தியான கௌமாரி தேவி விளங்குகிறார்.
"ஓம் சர்வ சத்ரு நாசாய வித்மஹே மஹாவீராய தீமஹி தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்"
"ஓம் சிகித்வஜாய வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ கவுமாரி ப்ரசோதயாத்.
04. குரோதனபைரவர்: (மேற்கு) (வருணன்) (சனி)
குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார்.
கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக அஷ்ட பைரவிகளில் ஒரு சக்தியான வைஷ்ணவி தேவி விளங்குகிறார்.
"ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே லட்சுமி தராய தீமஹி
தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்"
"ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே சக்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்."
05. உன்மத்த பைரவர்: (வடக்கு) (குபேரன்) (புதன்)
உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக அஷ்ட பைரவிகளில் ஒரு சக்தியான வராஹி தேவி விளங்குகிறார்.
"ஓம் மஹா மந்த்ராய வித்மஹே வாராஹி மனோகராய தீமஹி
தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்."
"ஓம் மஹிஷத் வஜாய வித்மஹே தண்ட ஹஸ்தாயை தீமஹி தந்நோ வராஹி ப்ரசோதயாத்."
06. கபால பைரவர்: (தென் கிழக்கு) (அக்கினி) (சந்திரன்)
கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். யானையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை எல்லோரும் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக அஷ்ட பைரவிகளில் ஒரு சக்தியான இந்திராணி தேவி விளங்குகிறார்.
"ஓம் கால தண்டாய வித்மஹே வஜ்ர வீராய தீமஹி தந்நோ கபால பைரவ ப்ரசோதயாத்."
"ஒம் கஜத்வஜாய வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ இந்திராணி ப்ரசோதயாத்."
07. பீஷண பைரவர்:(வட மேற்கு) (வாயு) (கேது)
பீஷண பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை எல்லோரும் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக அஷ்ட சக்திகளில் ஒரு சக்தியான சாமுண்டி தேவி விளங்குகிறார்.
"ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்"
"ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ காளி ப்ரசோதயாத்."
08. சம்ஹார பைரவர்: (தென் மேற்கு) (நிருதி) (ராஹு)
சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை எல்லோரும் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக அஷ்ட பைரவிகளில் ஒரு சக்தியான சண்டிகா தேவி விளங்குகிறார்.
"ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்"
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே மஹாதேவி ச தீமஹி
தந்நோ சண்டிகா ப்ரசோதயாத்."
09. ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர்: (சூரியன்) (கிழக்கு)
நவ பைரவ மூர்த்திகளில் ஒன்பதாவதாக வருபவர். முப்பெரும் தேவ தேவர்களின் சொரூபமாகவும் அஷ்ட பைரவி சமேத அஷ்ட பைரவ சொரூபமாகவும் அஷ்டாஷ்ட பைரவி சமேத அஷ்டாஷ்ட பைரவி சொரூபமாகவும் விளங்கக்கூடிய ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஆவார். தாம் அமர்ந்து அருள் புரியும் கற்பக விருட்ச, பத்ர பீடத்தையே வாகனமாக கொண்டவர். மேல் திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதி எனும் இருபெரும் நிதிகளை கொண்டவர். கீழ் திருக்கரங்களில் அபய வரத முத்திரை தரித்தவர். ஸ்ரீமஹா சொர்ணகால பைரவர் மடியில் பூரண அமுத கும்பத்துடனும்; ஸ்ரீமஹா சொர்ண வர்ஷினி பைரவி சொர்ண கும்பத்தையும் கொண்டிருக்கிறார்கள். இந்த அமைப்பு இப்பே ருலகில் கும்பகோணம், திருவிசநல்லூர், சொர்ணபுரியில் மட்டுமே உண்டு. இது பைரவ உபாசகர் ஸ்ரீவேம்புச்சித்தர் தியானத்தில் காட்டப்பெற்ற அதிசய அதியற்புத திருவுரு காட்சி. இவருடைய தேவி அஜாமிளா தேவி எனும் சொர்ண வர்ஷினி பைரவி ஆவார். நவக்கிரகங்களில் சூரியனுக்குரிய அதி பிரத்யட்ச தெய்வம் இவரே ஆவார். மனிதர்களுக்கு அதிகாரமிக்க பதவி, புகழ், செல்வாக்கு, தலைகுனிவில்லாத வாழ்க்கை, சொர்ண சித்தி, தனப் பிராப்தியை, சொத்து சுகங்களை அருளுபவர். சங்கடமில்லாத வாழ்க்கை, கடன், நோய், நொடி இல்லாத நிலையை தருபவர். சர்வ கஷ்ட நஷ்ட உபத்திரவங்களை, தீய சக்திகளை, ஏவல், பில்லி, சூனியங்களை விலக்குபவர்.வாழ்வில் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள அனைத்து சுப காரிய தடைகளையும் நீக்கி சுக வாழ்வு தருபவர். பைரவ ரூபங்களில் வீட்டில் வைத்து முக்காலமும் மிக அவசியமாக வணங்கப்பட வேண்டியவர். கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் இவர். இவரை வணங்க வாழ்வில் அனைத்தையும் பெறலாம்.
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர்:
"பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம்ஹாத் மஹாய அஷ்ட அஷ்டாஷ்ட பைரவ ரூபாய தீமஹி தந்நோசொர்ணாகர்ஷன பைரவ ப்ரசோதயாத்".
ஸ்ரீமஹா சொர்ண (வர்ஷினி) பைரவி:
"பைரவ்யை வித்மஹே மஹா மஹா காளி மஹா மஹா சரஸ்வதி மஹா மஹா லக்ஷ்மி ஐக்ய அஷ்ட அஷ்டாஷ்ட பைரவி ரூபிணி தீமஹி தந்நோ சொர்ண வர்ஷினி பைரவி ப்ரசோதயாத்".
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர்
மற்றுமொரு காயத்ரி:
கற்பக விருட்ச பத்ர பீட வாசாய வித்மஹே சொர்ண வர்ஷினி பைரவி சமேதாய தீமஹி தந்நோ சொர்ணாகர்ஷன பைரவ ப்ரசோதயாத்".
ஸ்ரீவேம்புச்சித்தர் குணசேகர ஸ்வாமி கள்.,(பைரவ உபாசகர்),
ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் திருக்கோயில், சொர்ணபுரி, கற்கடேஸ்வரர் கோயில் சாலை, திருவிசநல்லூர்,
கும்பகோணம் -612105.
ஸ்ரீமஹா வடுக பைரவர்
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர்:
கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ணபுரியில் தனிச் சன்னதியில் 8 வயது பாலகனாக எழுந்தருளி கம்பீரத்துடன் அருள் பாலிக்கும் பைரவர்தான் ஸ்ரீமஹா வடுக பைரவர். இந்த தோற்றம் தான் பைரவரின் ஆதித் தோற்றம்.
அஷ்ட (8) பைரவர்:
இவரிடம் இருந்து தான் அசிதாங்க பைரவர், ருருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர்.
சதுஷ்சஷ்டி (64) பைரவர்:
அதன் பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக அசுரர்களை அழிப்பதற்காக 64 திருக் கோலங்களில் ஸ்ரீமஹா பைரவர் 64 திருப்பெயர்களுடன் சுவான வாகனத்தோடும், சுவான வாகனம் இன்றியும் கூட திகழ்கின்றனர்.
கால புருஷன்:
பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட "காலபுருஷனாக" கூறுகின்றன. பன்னிரெண்டு ராசிகளும் அவரது உடலின் அங்கங்களாக அதாவது மேஷம்-சிரசு; ரிஷபம்-வாய்; மிதுனம்-இரு கரங்கள்; கடகம்-மார்பு; சிம்மம்-வயிறு; கன்னி-இடை; விருச்சிகம்-லிங்கம்; தனுசு-தொடைகள்; மகரம்-முழந்தாள்; கும்பம்-கால்களின் கீழ்பகுதி; மீனம்-அடித்தளங்களாகவும் விளங்குகின்றன.
காலச்சக்கராதிபதி:
பிரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளும், வான மண்டலத்தில் உள்ள சிறிய பெரிய நட்சத்திரங்களும், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களும், எட்டு திக்குகளும், பஞ்ச பூதங்களும், காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே!
காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே! கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், அந்த நவக்கிரகங்களின் பிராணனாக இருந்து கொண்டு நவக்கிரக ங்களையே அவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார். பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன. அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார்.
வழிபடு பலன்:
ஸ்ரீமஹா வடுக பைரவரை வழிபட அஷ்ட (8)பைரவர், சதுஷ்சஷ்டி (64) பைரவர் போன்றோரை வழிபட்ட பலன் கிட்டும்.
வழிபட வேண்டிய நாட்கள்:
இவரை தேய்பிறை அஷ்டமி, அம்மாவாசை, தினசரி ராகுகாலங்கள் போன்ற நேரங்களில் தொடர்ந்து வழிபட சத்ரு தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், காரியத்தடை, திருமண எதிர்ப்பு, கடன் தொல்லை, நோய் நொடிகள் சாப, பாப, தோஷங்கள் போன்றவை விலகும்.
65 ஆவது பைரவர் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர்
நினைத்தது நடக்க; கேட்டது கிடைக்க; சொர்ண சித்தி, தன பிராப்தி, பரிபூரண ஆயுள், ஆரோக்கியம், புகழ், செல்வாக்கு, அதிகாரமிக்க பதவி, திருமணப் பேறு, குழந்தை பாக்கியம்,
அயல்நாடு உத்தியோகம் போன்றவைகளை உடனுக்குடன் வழங்க நினைத்ததை நினைத்தபடி தருகின்ற கற்பக விருட்சத்தின் அடியில் , மேல் திருக்கரங்களில் நவ நிதிகளில் இருபெரும் நிதிகளான சங்க நிதி பத்மநிதி தாங்கி கேட்டது கேட்டபடி கிட்ட ,நோய் நொடி விலக மடியில் பூரண அம்ருத கும்பத்துடனும், சாப, பாப, தோஷங்களை நீக்க நாக, பாச, சூலத்துடன் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவரும்; சொர்ண பிராப்தி, தன பிராப்தி தருவதற்கு ஸ்ரீமஹா சொர்ணபைரவி அம்மை வற்றாத ஜீவ நதி போல் பொங்கி பொங்கி வழிந்து கொண்டே இருக்கக் கூடிய பொற் குடத்துடனும் 65 ஆவது பைரவ பைரவி ரூபராக அதாவது ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானாய், வாரி வாரி வழங்கும் பெரு வள்ளலாய் திகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
வாழ்க வளத்துடன் வளர்க நலத்துடன்
நற்பவி! நற்பவி!! நற்பவி!!!
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட கிட்டும் பலன்கள் என்ன? என்ன?
கும்பகோணம், திருவிசநல்லூர், சொர்ணபுரியில் உறைந்த உலகில் இது வரை எங்கும் வெளிவராத, வேறு எங்கும் காணவியலாத அதிசய, அதியற்புத திருவுரு கொண்ட, ஸ்ரீவேம்புச்சித்தர் தியானத்தில் தோன்றி காட்சியளித்த, ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானை வழிபட கிட்டும் பலன்கள்:
1. சர்வ சாப, பாப, தோஷங்கள்
விலகும்.
2. கர்ம வினைகள் ஒழியும்.
3. நவக்கிரக தோஷங்கள் விலகும்.
4. சனிக்கிரஹ தோஷங்கள் விலகும்.
5. சர்ப்ப தோஷங்கள் விலகும்.
6. வறுமை அறவே ஒழியும்.
7. கடன் தொல்லைகள் குறையும்.
8. சண்டை, சச்சரவுகள் ஓயும்.
9. நோய், நொடிகள் தீரும்.
10. தடைகள் யாவும் விலகும். தலை
குனிவு இல்லாத வாழ்க்கை
அமையும்.
11. திருமண பாக்கியம் கிட்டும்.
நல்ல வரண் அமையும்.
12. தம்பதிகளுக்குள் அன்யோன்யம்
ஏற்படும். ஒற்றுமை ஓங்கும்.
13. பிள்ளைப் பேறு ஏற்படும். சிறந்த
குழந்தைகள் பிறக்கும்.
14. கல்வியில் முன்னேற்றம் கிட்டும்.
நினைத்த படிப்பு அமையும்.
15. நல்ல வேலை கிட்டும். அதுவும்
நினைத்தது மாதிரி அமையும்.
16. அயல் நாட்டு வேலை வாய்ப்பு
அமையும்.
17. பணம் ஏதோ ஒரு வகையில்
வந்து கொண்டே இருக்கும்.
18. ஏவல், பில்லி, சூனியம் விலகும்.
தீய சக்திகள் விலகி ஓடும்.
18. கண்திருஷ்டி, பொறாமை
விலகும். தீயவர்கள் விலகு
வார்கள்
19. நில புலம் சேரும். வீடு, வாசல்,
நஞ்சை புஞ்சை சேரும்.
20. சொத்து, சுகம் கூடும். பணம்
காசுக்கு குறைவிருக்காது
21. அதிகாரமிக்க பதவி, புகழ்,
செல்வாக்கு கிட்டும். நல்ல சுய
தொழில் அமையும்.
22. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
23. தொழிலில் உள்ள போட்டி
பொறாமை குறையும்.
தொழிலில்சறுக்கல் இருக்காது.
24. சொர்ண சித்தி கிட்டும். தன,
தானிய நிறைவு உண்டு.
25. கோடி கோடி லாப கடாட்ச,
குபேர லோக சம்பத்து கிட்டும்.
26. அஷ்ட ஐஸ்வர்யம் பெருகும்.
அஷ்ட லட்சுமி கருணை கிட்டும்.
28. அஷ்ட மங்களங்கள் நிறையும்.
29. வந்த வினைகள் நீங்கும்.
30. வரும் வினைகள் வாராது போகும்.
31. கேட்டது யாவும் கேட்டபடி
கிடைக்கும்.
32. நினைத்தது யாவும் நினைத்தபடி
நடக்கும்.
33. கேட்காததும், நினைக்காததும் கூட
நடந்து அதிசயம் பல நிகழும்.
#கஷ்டங்கள்குறைய: சிவப்பு துணியில் 27 மிளகு வைத்து முடிச்சு போட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் போட நல்லது.
#நினைத்ததுநடக்க: ஐந்து தனித்தனி அகல் எடுத்து ஐந்து எண்ணெய் கொண்டு பஞ்ச தீபம் ஏற்றுவது நல்லது.
#வசதிவாய்ப்புகள்பெறுக: இரண்டு அகல் விளக்குகளில் சுத்த பசு நெய் கொண்டு தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது.
#கஷ்டங்கள்குறைய: தினசரி பிரதோஷ கால வேளைகள், மாத பிரதோஷங்கள், ஞாயிறு ராஹு காலங்கள், சனிக்கிழமை, செவ்வாய், வெள்ளி ராஹு காலங்கள், அம்மாவாசை, தேய்பிறை/வளர்பிறை அஷ்டமி நாட்கள் வழிபாடு செய்வது நல்லது.
#சொத்துசுகம், நிலபுலம், சொர்ண சித்தி, குபேர சம்பத்து, அஷ்ட ஐஸ்வர்யம், நினைத்தது நடக்க மாதப்பிறப்பு நாட்கள், பிறந்த நட்சத்திர நாட்கள், தினசரி குளிகை காலங்கள், செவ்வாய் கிழமை, வியாழக்கிழமை மாலை வேளை, வெள்ளிக்கிழமை, தேய்பிறை/வளர்பிறை அஷ்டமி நாட்கள், பௌர்ணமி நாட்கள்.
#ஸ்ரீவேம்புச்சித்தர்,
(பைரவ உபாசகர்)
ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத
சொர்ணகால பைரவர் திருக்கோயில்,
கற்கடேஸ்வரர் கோயில் சாலை,
சொர்ணபுரி, திருவிசநல்லூர்,
கும்பகோணம் - 612105.
அஷ்ட ஐஸ்வர்யங்களையும் நவநிதிகளையும் தரும் உலகில் இதுவரை வேறு எங்கும் காணவியலா அதிசய அற்புத கலியுகத்தின் கண் கண்ட தெய்வம்:
எல்லா ராசிக்காரர்களும் எல்லா நட்சத்திரக் காரர்களும் வந்து வழிபட்டு தங்களின் சாப, பாப, தோஷங்களை போக்கி கொள்ள வேண்டிய அற்புத திருத்தலம்:
ஜாதகத்தில் நல்ல தசை, நல்ல புத்தி நடக்கும் போது அபரிமிதமான நல்ல பலன்கள் நடப்பதற்கும்; கெட்ட தசை,கெட்ட புத்தி நடக்கும்போது கெடுதல்கள் தாக்காது இருப்பதற்கும் வந்து வழிபட்டு செல்ல வேண்டிய திருத்தலம்:
ஆயிரம் ஆண்டு கால பழமையான திருவாலயத்தில் கிடைக்கின்ற பலனை விட அதிக பலன்களை வழங்கும் அதியற்புத திருத்தலம்:
சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், ஹோமம் நடைபெறும் நாட்கள்:
நமது (கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ணபுரி உறை) ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி, அம்மாவாசை போன்ற நாட்களில் ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானுக்கும் ஸ்ரீமஹா வடுக பைரவருக்கும் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி, அம்மாவாசை நாட்களில் காலை 09.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை களும் 10.00 மணிக்கு சர்வ காரிய சித்தி, சொர்ண சித்தி, தன பிராப்தி தரும் சர்வ கஷ்ட நஷ்ட கடன் உபத்திரவங்களை போக்கும் கொல்லிமலையில் இருந்து தருவிக்கப் பெற்ற அதியற்புத மூலிகைகளை கொண்டு ஸ்ரீ கால பைரவர், ஸ்ரீ அஷ்ட பைரவர், ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமம் நடைபெறும்.
ஆலய அமைவிடம்:
திருவிசநல்லூரில் உள்ள ஸ்ரீசௌந்தரநாயகி சமேத சிவயோகிநாதர் சதுர்கால பைரவர் கோவிலுக்கும் ஸ்ரீ அருமருந்து நாயகி அபூர்வ நாயகி சமேத கற்கடேஸ்வரர் கோவிலுக்கும் இடையில் நமது ஆலயம் அமைந்துள்ளது.
ஆலய நடை திறப்பு நேரம்:
காலை 08.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை
மாலை 04.00 மணி முதல் இரவு 06.00 மணி வரை.
அருள்வாக்கு
தினசரி காலை 09.00 மணி முதல் 01.00 மணி வரை அருள்வாக்கு சொல்லப் படும். முன் அனுமதி பெற்று வரவும்.
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் பெருமை:
ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான் ஸ்ரீமஹா காளி, சரஸ்வதி, லக்ஷ்மி ஐக்ய ஸ்ரீமஹா சிவ விஷ்ணு பிரம்ம சொரூபம். அஷ்ட. பைரவி சமேத அஷ்ட பைரவ மற்றும் அஷ்டாஷ்ட பைரவி சமேத அஷ்டாஷ்ட பைரவ சொரூபம். பெருமானின் உடலில் 12 ராசிகளும் உடலின் அங்கங்களாக இருப்பதால் எல்லா ராசிக்காரர்களும், அந்த 12 ராசிகளுக்குள் அடங்கிய 27 நட்சத்திரக்காரர்களும் வழிபட அனைத்து நலனையும் பெறலாம். அதேபோல் நவக்கோள்களின் பிராணனாகவும் சூரிய பகவானின் பிரத்யட்ச அதி தேவதையாகவும் விளங்குவதாலும் மேலும் சூரியனை சுற்றியே அனைத்து கோள்களும் சுற்றி வருவதாலும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானை தொடர்ந்து வழிபட ஜாதகத்தில் எந்த தசை நடந்தாலும் அதேபோல் எந்த புத்தி நடந்தாலும் அவர்கள் வந்து வழிபட நவக்கிரஹ தோஷங்கள் யாவும் விலகும். அதன் தாக்கத்தில் இருந்தும் விடுபடலாம். ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான் இப்பூமியை தங்கி நிற்கும் அஷ்ட நாகங்களை பூணூலாக அணிந்திருப்பதால் இவரை வழிபட சர்வ சர்ப்ப தோஷங்களும் விலகும். தம்மை வணங்கும் குபேரனுக்கு நவநிதிகளையும், அஷ்ட லட்சுமிகளுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வழங்குபவரும் இவரே. அவர்களுக்கு குறையும் செல்வ வளத்தை தம்மை வணங்க திரும்ப தருபவரும் அவரே.
அதேபோல் இப்பூவுலகில் பைரவர் தோன்றி திருக்காட்சி அளித்த பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட பைரவரின் அருளை பரிபூரணமாய் பெறலாம். ஏனெனில் இத்திருவாலயத்தை அமைத்த ஸ்ரீவேம்புச்சித்தர் அவதரித்தது கேட்டை நட்சத்திரம் தான். ஆக கேட்டை நட்சத்திர நாளில் சென்று வழிபடுவதும் சிறப்பு.
எல்லோரும் வழிபட வேண்டிய கால வேளைகள்:
வாழ்வில் சர்வ கஷ்ட நஷ்டங்கள், சாப, பாப, தோஷங்கள், கடன் தொல்லைகள், வியாதிகள், காரிய தடைகள்,ஏவல் , பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள், சண்டை சச்சரவுகள் விலக:
தினசரி ராஹு கால வேளைகள், தினசரி பிரதோஷ கால வேளைகள்,
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, அம்மாவாசை, தேய்பிறை அஷ்டமி போன்ற நாட்கள்.
வீடு, வாசல், நில புலம், பொன், பொருள், புகழ், செல்வாக்கு, விவாஹ பிராப்தி, சந்தான பிராப்தி, கல்வி முன்னேற்றம், வேலை வாய்ப்பு, அதிகார மிக்க பதவி, தொழில் முன்னேற்றம், தொட்ட காரியம் யாவிலும் வெற்றி கிட்ட:
தினசரி குளிகை காலங்கள், திங்கட்கிழமை அந்தி, சந்தி நேரங்கள், செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, திருவாதிரை நட்சத்திர நாட்கள், வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி, மாதப்பிறப்பு, பிறந்த நட்சத்திர நாட்கள், சித்திரை வருடப் பிறப்பு, சித்திரை பரணி, ஐப்பசி பரணி, ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷ, கேட்டை நட்சத்திர நாட்கள்.
பைரவ விரதம்:
தை மாதம் முதல் செவ்வாய் கிழமையில் இருந்து விரதம் இருக்க ஆரம்பித்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவ விரதம் இருந்து வருவது நல்ல வளமான வாழ்வைத் தரும். அதேபோல் பரணி நட்சத்திர நாட்களிலும் விரதம் மேற்கொள்ள நல்லது.
சொல்ல வேண்டிய மந்திரம்:
ஸ்ரீமஹாவடுக பைரவர் மந்திரம்:
ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்ததாரணாய குரு குரு வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா.
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் மந்திரம்:
ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஓம் நமோ பகவதே சொர்ணாகர்ஷன பைரவாய பிர ணதாபீஷ்ட தத்பர பூரணாய ஏஹி ஏஹி கருணாநிதே மஹ்யம் ஹிரண்ய சித்திஞ்ச தாபய தாபய சீக்ரம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஸ்வாஹா.
ஸ்வாமிக்கு போட வேண்டிய மாலைகள்:
#தாமரைப்பூ மாலை போடலாம்.
#வில்வ மாலை போடலாம்.
#செவ்வரளிப்பூ மாலை போடலாம்.
#சம்பங்கிப்பூ மாலை போடலாம்.
#பன்னீர் ரோஜா மாலை போடலாம்.
#எலுமிச்சை108 கோர்த்து மாலை போடலாம்.
#மஞ்சள் செவ்வந்திப்பூ மாலை போடலாம்.
#வெற்றிலை மாலை போடலாம்.
#சந்தன மாலை போடலாம்.
வாழ்வில் சுபிட்சம் ஏற்பட பைரவ தீபம் போடும் முறை:
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான் சன்னதி முன்
தேங்காய் சர்வ காரிய ஜெயதீபம்:
அதாவது தேங்காயில் மஞ்சளைத் தடவி இரண்டாக உடைத்து தேங்காய் நீரை கீழே ஊற்றி உள்ளே துடைத்து விட்டு அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவும்.
பஞ்சபூத வசிய தீபம்:
அதாவது 5 அகல் விளக்குகளில் முறையே இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஊற்றி திரிபோட்டு விளக்கேற்றலாம்.
அஷ்டபைரவர்/ அஷ்ட திக் பாலக வசிய தீபம்:
/
அதாவது எட்டு அகல் விளக்குகளில் ஐந்து எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து ஊற்றி திரி போட்டு தீபங்கள் ஏற்றலாம்.
நவக்கோள் வசிய தீபம்:
அதாவது ஒன்பது அகல் விளக்குகளில் ஐந்து எண்ணெய்களையும் ஓன்றாக கலந்து தீபம் ஏற்றலாம்.
ராசி வசியதீபம்:
அதாவது 12 அகல் விளக்குகளில் ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஏற்றலாம்.
நட்சத்திர வசிய தீபம்:
அதாவது 27 அகல் விளக்குகளில் ஐந்து எண்ணெய்களையும் கலந்து ஏற்றலாம்.
மிளகு தீபம்: சர்வ ருண/ரோஹ/தாரித்ரிய வித்வேஷன, சர்வ கஷ்ட/நஷ்ட/உபத்திரவ நிவர்த்தித, சர்வ சாப/பாப/தோஷ ஹர, சர்வ சத்ரு நாசன, சர்வ ஏவல் பில்லி சூனிய ஹர தீபம்:
அதாவது 27 மிளகை சிவப்பு, வெள்ளை அல்லது மஞ்சள் துணியில் ஏதாவது ஒன்றில் வைத்து சிறு மூட்டையாக கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம்.
பூசணிக்காய் தீபம்:
அதாவது ஒரு பூசணிக்காயை வாங்கி இரண்டாக வெட்டி உள்ளே உள்ள விதைகளை நீக்கி இரண்டு பாதியிலும் உள்ளே குங்குமத்தை தடவி மூன்று இடத்தில் சந்தன குங்குமப் பொட்டு வைத்து நல்லெண்ணெய் நிரப்பி திரி போட்டு விளக்கேற்றலாம்.#வயதுக்கேற்ற சர்வ தோஷ ஹர தீபம்: அதாவது உங்களுக்கு தற்போது என்ன வயது ஆகிறதோ அந்த வயத்துக்கேற்ற அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றலாம்.
மேலே சொன்ன முறைகளில் உங்களுக்கு எது வசதியோ அவ்வாறு தீபம் போட்டு வழிபட கஷ்டங்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும்.
ஸ்ரீவேம்புச்சித்தர் (பைரவ உபாசகர்),
ஸ்தாபகர், ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் திருக்கோயில், ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாட்டு குழு, சொர்ணபுரி, திருவிசநல்லூர், கும்பகோணம் - 612 105.
நித்ய பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், விஷேச கால பூஜைகளுக்கு, நித்ய அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் ஹோமங்களுக்கு தேவையான மூலிகை பொருட்கள் வாங்கித் தந்து இறை கைங்கர்யத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கீழ்க்கண்ட G Pay எண்ணுக்கு பணம் அனுப்பி வைக்கலாம்.
G Pay No.94449 64303
வாட்சப்: 94449 64303
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் வரலாறு அவரது பூஜை முறைகள், மந்திரங்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றி விரிவாக அறிய கீழ்க்கண்ட வெப்சைட் மற்றும் யூடியூபிற்குள் செல்லவும்.
வெப் சைட்: (web site)
https://sornakarshanabhairava.com/
யூடியூப் (You tube)
https://www.youtube.com/channel/UCzjFs9wrqCjVOX6WoIbA_YQ
அன்னதானம்:
தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் காலை 9.00 மணிக்கு ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனை களும்; 10.00 மணிக்கு ஸ்ரீகால பைரவர், ஸ்ரீஅஷ்ட பைரவர், ஸ்ரீசொர்ணாகர்ஷன பைரவர் மற்றும் சர்வ தேவ தேவதா தெய்வங்கள் மந்திரங்கள் சொல்லி கொல்லிமலையின் சிறப்பான மூலிகைகளைக் கொண்டு ஹோமம் முடிந்த பின் மதியம் அன்னதானம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அபிஷேக ஆராதனைகளுக்கு, ஆலய தீபங்களுக்கு ஹோமத்திற்கு, அன்னதானத்திற்கு உதவ விரும்புப வர்கள் ஆலயத்திற்கு வந்து உதவலாம்.
Sorrna sri Vembu siddhar, (Bairava Upasakar), சொர்ண ஸ்ரீ வேம்புச்சித்தர், (பைரவ உபாசகர்), திருவிசநல்லூர்,
கும்பகோணம்-612105
வாட்ஸப் & ஜிபே எண்:
94449 64303.
பௌர்ணமி சிறப்பு பூஜை மற்றும் ஹோமம் :
வாழ்க நலத்துடன் வளர்க வளத்துடன்
நற்பவி நற்பவி நற்பவி
ஸ்ரீமஹாசொர்ணாகர்ஷன பைரவர் அனுக்கிரகம் அனுகூலம் பரிபூரணம்.
பக்தக் கோடிகள் வாழ்வில் சர்வ கஷ்டங்களும் நீங்கி சுபிட்சம் ஏற்பட பௌர்ணமி சிறப்பு வழிபாட்டு பூஜை மற்றும் ஹோமம்:
1.8.2023 செவ்வாய்கிழமை காலை 9.00 மணிக்கு கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ணபுரி உறை ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானுக்கும் ஸ்ரீமஹா சொர்ண வடுக பைரவப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அதனைத் தொடர்ந்து 10.00 மணிக்கு சர்வ கஷ்டநஷ்ட உபத்திரவங்கள், கடன் தொல்லைகள், சர்வ நோய் நொடிகள் நீங்கி தன பிராப்தி, சொர்ண சித்தி, சர்வ காரிய அனுகூலம் கிட்ட கொல்லி மலையில் இருந்து தருவிக்கப் பெற்ற அதிசக்தி நிறைந்த மூலிகைகளைக் கொண்டு ஸ்ரீ கால பைரவர், ஸ்ரீ அஷ்ட பைரவர் ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர் மற்றும் சர்வ தேவ தேவதா தெய்வ மந்திரங்கள் சொல்லி ஹோமமும் இனிதே பெறும்.
திருவாலய வழிபாட்டு சிறப்பு :
1.இத்திருவாலயத்தில் வந்து கால் பதிக்க தலையெழுத்து மாறும்.
2. ஸ்ரீமஹா அம்மையப்பனை தொழுது கும்பிட ஜாதகத்தில் உள்ள பாதகங்கள் சாதகங்கள் ஆகும்.
3. பழமையான ஆயிரம் திருக்கோயில் சென்று வணங்கினால் என்ன பலன் கிட்டுமோ அதை இந்த ஒரு ஆலயத்திற்கு வந்து வழிபட்டு உடனே பெறலாம்.
4. நினைத்தது நினைத்தபடி நடக்கும்.
5. கேட்டது கேட்டபடி கிடைக்கும்.
6. ஸ்ரீமஹா சொர்ணா கர்ஷன பைரவர் இருக்கும் இடத்தில் சொர்ணம் கொழித்துக் கொண்டே இருக்கும்.
திருவாலய திறப்பு நேரம் :
தினசரி திருவாலயம் காலை 09.00 மணி முதல் 01.00 மணி வரையும் மாலை 04.00 மணி முதல் 06.30 மணி வரையும் திறக்கப் பெற்றிருக்கும்.
சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் ஹோமம் :
ஒவ்வொரு மாதம் வரும் அம்மாவாசை, பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி நாட்களில் நமது ஆலயத்தில் காலை 09.00 மணிக்கு ஸ்ரீமஹா அம்மையப்பனுக்கு க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் 10.00 மணிக்கு ஸ்ரீகால, ஸ்ரீஅஷ்ட, ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமமும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்.
பைரவர் அருள்வாக்கு :
தினசரி காலை 09.00 முதல் மதியம் 12.00 மணி வரை பைரவர் அருள்வாக்கு சொல்லப்பெறும். முன் அனுமதி பெற்று நேரில் வரவும்.
Sorrna Sri Vembu siddhar, (Bairava Upasakar)
சொர்ணஸ்ரீ வேம்புச்சித்தர், (பைரவ உபாசகர்), சர்வலோக பைரவர் சமஸ்தானம், ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் @ ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோயில்,சொர்ணபுரி, கற்கடேஸ்வரர் கோயில் சாலை, திருவிசநல்லூர்,
கும்பகோணம் - 612105
அலைபேசி: 94449 64303.
சித்தர்_வாக்கு
கேள்வி:
இந்த உலகில் பிறந்த எல்லா ராசிக் காரர்களும் மற்றும் நட்சத்திரக் காரர்களும் தங்கள் சாப பாப தோஷங்கள் நீங்க கலிக்காலத்தில் வழிபட வேண்டிய ஸ்ரீமஹா பைரவி சமேத ஸ்ரீமஹாபைரவ திருவாலயம் எங்கு அமைந்து உள்ளது?
பதில்:
மிக அருமையான கேள்வி. அதற்கான பதில் எதுவெனில்
கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருவிசநல்லூரில் பிரசித்திப் பெற்ற இரு சிவாலயங் களுக்கு மத்தியில் ராஜ கிரீடத்தில் வைரம் பதித்தாற் போல் ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருவாலயம் அமைந்துள்ளது. இந்த திருவாலயத்தில் உறைந்துள்ள ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானின் அதிசய அதியற்புத தெய்வத் திருவுரு உலகில் வேறு எங்கும் காண இயலாத ஒன்று. பைரவ உபாசகரான ஸ்ரீவேம்பூச்சித்தர் அவர்களுக்கு தியானத்தில் திருவாலயம் எழுப்பச் சொல்லித் திருக்காட்சிக் காட்டி அருளிய திருவுரு ஆகும். மேலும் இங்குள்ள இந்த தெய்வம் முப்பெரும் (3) தேவ(சிவ, விஷ்ணு, பிரம்ம) தேவியர் (காளி, சரஸ்வதி, லெட்சுமி) ரூபராய், அஷ்ட (8) பைரவ, பைரவி ரூபராய், சதுஷ் சஷ்டி(64) பைரவ பைரவி ரூபராய், ஆக மொத்தத்தில் சர்வ தேவ தேவதா தெய்வ சொரூபராய் இங்குள்ள ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் திகழ்கிறார். உலகில் அதிசயம் என்றால் ஒன்றாக மட்டுமே உலகம் உள்ள அளவும் இத் தெய்வத்தை வேறு எவரும் உருவமாக செய்யவோ படமாகவோ செய்யவோ பிறர் முயற்சி மேற்கொள்ளாதவாறு Copy Right பெறப்பட்ட தெய்வமிது ஆகும்.
ஸ்ரீவேம்புச்சித்தர்
1994 முதல் ஸ்ரீவேம்புச்சித்தர் தம்மை நாடி வரும் பக்தக் கோடிகளுக்கு அவர்கள் கஷ்டங்கள் நீங்க அவரவர் களாகவே செய்து கொள்ளும் அளவுக்கு மிக எளிய பரிகாரங் களை கூறி அவரவரது கஷ்டங்களை தீர்த்து வருகிறார்.
நீங்களும் உங்கள் வாழ்வில் ஒரு முறை ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானை தரிசனம் செய்தும், பைரவ உபாசகரான ஸ்ரீவேம்பச்சித்தர் அவர்களை சந்தித்து ம் வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயலுங்கள்.
தொடர்புக்கு:
94449 64303
சிதம்பரத்தில் உள்ளது சொர்ணபுரியிலும் உள்ளது
அதேபோல் இங்கு ஸ்ரீசக்ரநகரமஹா ராஜ பீடமும் இங்கு அமையப் பெற்று உள்ளது.
பக்தக் கோடிகளுக்கு அவர்கள் வாழ்வில் நினைத்தது நடக்க கேட்டது கிடைக்க
சொர்ண மழை பொழிந்து கொண்டே இருக்க
திருவாலய கருவறையில் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானோடு சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெரு மானும் ஸ்ரீசிவகாம சுந்தரி தாயாரும் வீற்றிருந்து அருள்புரிகின்றனர். சிதம்பரத்தில் எப்படி ஸ்ரீநடராஜப் பெருமான் சன்னதியில் சொர்ணகால பைரவப்பெருமான் உள்ளாரோ அது போல் இங்கு ஸ்ரீமஹாசொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹாசொர்ணாகர்ஷன பைரவப் பெருமானும் ஸ்ரீநடராஜப் பெருமானும் உள்ளனர்.
அதேபோல் நிறைய சக்தி நிறையப் பெற்றுள்ள மிகப் பழமையான திருவாலயங்களில் எப்படி ஸ்ரீசக்கரம் நிறுவப்பட்டு எப்படி மிகுந்த சக்தியோடு திகழ்கிறதோ அதேபோல் இத்திருவாலயத்திலும் 64 கோடி தேவ தேவதா தெய்வங்களின் மொத்த சொரூபமான ஸ்ரீமஹா மேரு நிறுவப் பெற்றுள்ளது.
மேலும் கர்ப்பிக்கிரஹத்தில் சர்வகாரிய சித்திகளை தரவல்ல யந்திரங்களும் அததற்கான மூலிகைகளும் பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளது. இதுவும் இங்கு ஒரு தனி சிறப்பு.
நமது திருவாலய த்தில் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருசன்னதி யில் திருமணம், சஷ்டியப்த பூர்த்தி (60 வயது திருமணம்) சதாபிஷேகம் (80 வயது திருமணம்) வந்து நடத்திக் கொண்டவர்கள் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட நெடிய வயது, அமைதியான, எல்லா வசதிகளோடும் வாழ்க்கை அமையப்பெற்று எல்லோரும் சிறக்க வாழ்ந்து வருகின்றனர்.
அதேபோல் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், குழந்தைக்கு நோயுற்று குணமாக வேண்டும் என்று வந்து வேண்டிக் கொண்டவர்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெற்று குழந்தைக்கு நோய் நீங்கப் பெற்று அந்தக் குழந்தைக்கு எடைக்கு எடை ஸ்வீட், போன்ற பொருட்கள் வைத்து வழிபாடு செய்கிறார்கள்.
திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டி செல்பவர்கள் சிலர் அன்னதானத்திற்கு அரிசி மூட்டை வாங்கி தருகிறார்கள். இன்னும் சிலர் அன்னதானத்திற்கு வேண்டிய எண்ணெய், துவரம் பருப்பு போன்றவற்றை வாங்கித் தருகிறார்கள். சிலர் ஒரு நாளுக்குரிய அன்னதானத்திற்கு பணம் தருகிறார்கள்.
சிலர் தாங்கள் வேண்டிய கோரிக்கைகளுக்காகதங்கள் பெயருக்கு, குடும்பத்திற்காக அதற்குரிய காணிக்கை செலுத்தி ஹோமம் செய்து கொள்கிறார்கள். ஹோமத்திற்கு வேண்டிய பொருட்களான நெய், ஹோம திரவியம், சமித்துகள், நவதானியம், வெண்கடுகு , சாம்பிராணி, குங்கிலியம் போன்ற பொருட்கள் வாங்கித் தந்து வேண்டுதல் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
இன்னும் சிலர் ஸ்வாமிக்கு அதற்குரிய காணிக்கை செலுத்தி அபிஷேக ஆராதனைகள் செய்து கொள்கிறார்கள். விளக்குகளுக்கு உரிய எண்ணெய் டின் வாங்கி தருகிறார்கள்.
பைரவ உபாசகர் திருவிசநல்லூர் சொர்ண ஸ்ரீவேம்புச்சித்தர் ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருவாலயத்தில் உள்ள தெய்வங்களுக்காக
இயற்றிய பாடல்கள் அனைவரும் பாடி பலன் பெறவே
ஸ்ரீமஹா சொர்ண வடுக பைரவர்
பல்லவி
ஓம் வடுக பைரவரே
எட்டு வயது பாலகரே
சொர்ணபுரியில் உறைந்தவரே
வேம்புச்சித்தர் இதய நேசரே
அனுபல்லவி
64 பைரவரை வழிபட்ட பலன் தருபவரே
சாப பாப தோஷம் போக்குபவரே
எங்கள் வடுக பைரவரே (ஓம் .....)
சரணம்
கடன் தொல்லை நீக்குபவரே
ஏவல் பில்லி சூனிய கோளாறை குறைப்பவரே
கண் திருஷ்டி, பொறாமை போக்குபவரே
வினை தீர்க்கும் வேம்புச்சித்தர் ஆசிரமம் நிறைந்தவரே
எங்கள் குறை தீர்ப்பவரே (ஓம்...)
ஸ்ரீமஹா சொர்ண வரசித்தி வலம்புரி விநாயகர்
பல்லவி
விநாயகனே
வெற்றியின் நாயகனே
வரங்களை மழை போல் பொழிபவனே
சொர்ணபுரியில் அருள்பவனே
அனுபல்லவி
சங்கடங்கள் தீர்ப்பவனே
விக்கினங்கள் களைபவனே
அருகம்புல் பிரியனே
(விநாயகனே...)
சரணம்
வெள்ளெருக்கு மாலை அணிபவனே
சங்கடஹர சதுர்த்தி பூஜிதனே
புத்தியை தருபவனே
சித்தியை குவிப்பவனே
(விநாயகனே....)
சரணம்
வேம்புச்சித்தன் இதய நேசனே
வினைகள் களைபவனே
திருவிசநல்லூர் நிறைந்தவனே
வரசித்தி வலம்புரி விநாயகனே
(விநாயகனே....)
பரம சிவனின் புத்திரனே
பார்வதி தேவியின்
அருமை மைந்தனே
குமரனின் அன்பு சோதரனே
மால் மறுகோனே
(விநாயகனே....)
ஸ்ரீமஹா சொர்ண வேம்புவாலை யம்மன்
பல்லவி
ஓம்... ஓம்... ஓம்...
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஆதிசக்தி மஹா சக்தி
பராசக்தி ஓம்
வேம்பு சக்தி வேம்பு வாலை சக்தி பராசக்தி ஓம்
அனுபல்லவி
அரசு வேம்பின் அடியில் அமர்ந்த சக்தி வேம்பு சக்தி வேம்பு வாலை சக்தி ஓம். (ஓம்.....)
சரணம்
மாரியம்மா காத்தாயம்மா
சப்த மாதர் நிறைந்த சக்தி வேம்பு சக்தி
வேம்பு வாலை சக்தி ஓம். (ஓம்....)
வரண் வேண்டி வருபவர்க்கு
கல்யாணம் நடத்தி வைப்பவளாம்
பிள்ளை இல்லாதவர்க்கு
பிள்ளை வரம் தருபவளாம்
சர்வ தோஷம், நவக்கிரஹ தோஷம்
சர்ப்ப தோஷம் போக்குபவளாம்
(ஓம்....)
மடிப்பிச்சை ஏந்தி வந்தவர்க்கே மடி நிறைய அருளை தந்தவளாம் சக்தி மிக நிறைந்தவளாம்
அண்டிய பேருக்கு தம்மை அண்டிய பேருக்கு அரவணைத்து அனைத்தும் தருபவளாம் (ஓம்....)
வேம்புச்சித்தன் பெயரில் நிறைந்தவளாம்
அவன் இதயம் முழுதும் உறைந்தவளாம்
அவன் வாக்கில் நின்று உரைப்பவளாம்
(ஓம்.....)
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர்
பல்லவி
சொர்ண பைரவா
சொர்ணகால பைரவா
திருவிசநல்லூர்
சொர்ணபுரியில்
சொர்ணபைரவி அம்மையோடு அமர்ந்து அருளும்
சொர்ணாகர்ஷன பைரவா
அனுபல்லவி
கோயில் நகராம் கும்பகோணம் அருகே
திருவிசநல்லூர்
சொர்ணபுரியில் உறைந்தவராம்
சொர்ணகால பைரவர் அவர் பெயராம்
சொர்ண பைரவி அம்மையோடு அமர்ந்தவராம்
வேம்புச்சித்தனுக்கு காட்சி கொடுத்தே
இவ்வுலகை ஆள வந்தவராம் (சொர்ண...)
சரணம்
உலகில் வேறு எங்கும் காணவியலா அதிசய அதியற்புத தெய்வ திருவுருவை கொண்டவராம்.
தமை தொழும்
பக்தர்களின் வாழ்வில் அதிசயங்கள் அதியற்புதங்கள் பல நிகழ்த்துபவராம் (சொர்ண.....)
பொன்னை, தனத்தை, பொருளை நிறைய பொழிபவராம்
கேட்ட வரம் கேட்டபடி அருள்பவராம்
நினைத்ததை நினைத்தபடி நடத்தி தருபவராம் (சொர்ண...)
மனிதன் வாழ்வின் உச்சியில் மிளிர புகழ், செல்வாக்கு, உயர் படிப்பு, நற்பதவி, நில புலம், சுகபோகம் என அனைத்தையும் வள்ளலாய் மாறி வாரி வாரி வழங்குபவராம்
வேம்புச்சித்தன் இதயம் நிறந்தவராம்
தமை பணிந்து வேண்டும் பக்தரை வாழ்வில் உயரச் செய்பவராம்
கலியுகத்தில் இவர் போல் தெய்வம் எவரும் இதுவரை கண்டதில்லை அதிசயமாம் அற்புதமாம் அதியற்புதமாம் (சொர்ண....)
சொர்ண சித்தி, தன பிராப்தி, சர்வ காரிய அனுகூல சித்தி தரும்
ஓர் அட்சயப் பாத்திரம்
பைரவ உபாசகர்ஸ்ரீவேம்புச்சித்தர் இயற்றிய *ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் வருகைப் படலம்
கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ண புரி உறை ஸ்ரீமஹா மஹா சொர்ண பைரவி சமேத ஸ்ரீமஹா மஹா சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான் திருவுருமுன் காலை மாலை பாட பொன்னும் பொருளும் குவியும்.
சர்வ காரிய அனுகூல சித்தி கிட்டும்.
"பக்தர்கள் பலருடைய வாழ்வில் வசந்தத்தை தருவித்துத் தந்த ஓர் கற்பக விருட்சம்
ஆகாயதேவன் நிழல் தரும் குடையாய்
பரவி விரிந்து நிற்க
வருண பகவானோ
விண்ணில் இருந்து தண்ணீர் தெளித்து வரவேற்க காத்து நிற்க
வானத்து நட்சத்திரங்கள்
மினு மினுப்பை காட்டி நிற்க
சூரிய சந்திரரோ காலை மாலை என
மாறிமாறி பிரகாசம் போட்டு நிற்க
பூமா தேவியோ பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்றுக் காத்து நிற்க
வாயுதேவனோ தென்றலாய் இனிய தென்றலாய் சாமரம் வீசி நிற்க
அக்னிபகவானோ தீபஜோதியாய்,
மங்களப் பெருஜோதியாய்
வெளிச்சம் காட்டி நிற்க
கின்னரர்களும் கந்தர்வர்களும் யட்சர்களும்
வானிலிருந்து பூமழை பொழிந்து நிற்க
ஒரு புறம் லக்ஷ்மி நாராயணர்
மறுபுறம் சரஸ்வதி பிரம்மா என
சித்தி புத்தி சமேத மஹா கணபதியும்
வள்ளி தேவசேனாமஹா முருகனும் ஹரிஹர சுத ஐயப்பனும்
சோட்டாணிக்கரை பகவதியும்
அருகில் இருக்க
இன்னும் பிற தேவ தேவதைகளும்
இந்திரனும் குபேரனும் அஷ்டத்திக் பாலகர்களும் சூழ்ந்து நிற்க
அஷ்ட லக்ஷ்மிகளும் பரவி நின்று வேண்டி நிற்க
உலகை என்றென்றும் தன் பக்கம் ஈர்த்து நிறுத்திடவே
கயிலாய மலைதனில் இருந்து
கருணை மழை பொழிந்திடவே
நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றி தந்திடவே
கற்பகமரத்தின்அடியில்
பத்ர பீடத்தில்அமர்ந்த வண்ணம்
ஒருவரை ஒருவர் அன்பாய் அணைத்தபடி
முகத்தில் புன்முறுவல் மிகக் கொண்டு
உலகம் உய்வு பெறவே
உலக மக்கள்
நன்மை பெறவே
சொர்ணபுரியில்அற்புதங்கள் பற்பல நிகழ்த்திடவே
ஐந்தொழில் நாயகனும் தன் நாயகியுடனே
ஆதி சிவமும் ஆதி சக்தியும் ஆக
சொர்ணநிறத்தில் ஆகாயம்தனில்
அற்புதமாய் மிக அழகாக மிதந்து வந்தனரே!
ஆயிரம்கோடிசூரியபிரகாசமாய்
ஆயிரம் கோடி சந்திர பிரகாசமாய்
ஆயிரம் கோடி அக்னி பிரகாசமாய்
ஆயிரம் கோடி சொர்ண பிரகாசமாய்
ஸ்ரீமஹா மஹா சொர்ண பைரவி ஸ்ரீமஹா மஹா சமேத சொர்ணகால பைரவராய்
பூரண அமுத சொர்ண கும்பத்துடன்
சங்க, பத்ம நிதி தாங்கி
நோய், நொடி தீர்த்திடவே கஷ்ட நஷ்டம் நீக்கிடவே நவகோள் தாக்கம் போக்கிடவே
நன்மைகள் நாளும் துலங்கிடவே
சர்வ மங்களம் தனை வாழ்வில் நிறைத்திடவே
காக்கும் மற்றும் அருளும் முத்திரை தாங்கி
வேம்புச் சித்தன் அன்பினுக்கு
அன்பு அழைப்பினுக் கிணங்கி
அஷ்ட பைரவி சமேத
அஷ்ட பைரவர் மற்றும்
அஷ்டாஷ்ட பைரவி சமேத
அஷ்டாஷ்ட பைரவர் அம்சத்துடன்
சொர்ணபுரிக்கு மஹா சொர்ண ஆகர்ஷண பைரவராய்
எழுந்தருளினரே! எழுந்தருளினரே!
எழுந்தருள் செய்தனரே!
வேம்புச் சித்தன் இதயம் குளிரச் செய்தனரே!
இப்பேரழகின் பெரும் திறத்தை
சர்வ லோக சித்த ரிஷி
முனி யோகி ஞானி நாதாக்கள்
கண்கொட்டாது பார்த்து நிற்கின்றனரே!
சப்த மாதாக்களும்அஷ்ட திக் பாலகர்களும்
நவ கோள்களும்
நவ துர்க்கைகளும் நலமாய் வந்து சேர்ந்தனரே!
நல் கிராம தேவ தேவதைகளும் குல தெய்வமும்
காமதேனு, கற்பகத்தரு, அட்சயப்பாத்திரம்
அமுதசுரபி, சிந்தாமணி, கௌஸ்துபமணி, உச்சைசிரவஷ், ஐராவதம், சங்க நிதி, பத்ம நிதி, நவ நிதி, அற்புத விளக்கு, மோகினியர், யோகினியர், எட்சனியர், கந்தர்வர், கின்னரர் ஆகிய அனைவரும்
வினை நீக்கும் வேம்புச்சித்தர் ஆசிரமத்திலே
மங்களம்பெருக்க மகிழ்ந்து வந்தனரே!
குருவருளும் திருவருளும் இறையருளும் நிரம்பிடச் செய்தனரே!
அஷ்ட பைரவரும் அஷ்ட பைரவியரும்
அஷ்டாஷ்ட பைரவரும்அஷ்டாஷ்ட பைரவியரும்
காசி மாநகரிலிருந்து கடுகவே வந்தனரே!
சர்வ ஜனத்தை தன் பக்கம் ஈர்த்து
பெருங் கருணைக் காட்டிடவே
கடுகவே வந்தனரே!
பண மழை, சொர்ண மழை என அவரவர் வாழ்வில் பொழிந்து
வளமையைப் பெருக்கிடவே
சொர்ண பைரவி சமேத சொர்ண கால பைரவர் சித்தர் பீடத்திற்கே
பேரன்பு மிகுக் கொண்டு வந்து சேர்ந்தனரே!
சர்வ புண்ணிய சேத்திர நாயக நாயகியரும்
நாம் தேடிய சொர்ண பூமி புண்ணிய பூமி
இது வென்றே வந்து சேர்ந்தனரே!
நம் பங்குக்கு நாமும் நலம் சேர்ப்போம்
பலம் மிக சேர்ப்போம் என்றே வந்து நிறைந்ததுவே!
நந்தி எம்பிரானும், சண்டிகேசனும்,
கருடனும், அனுமனும், சர்ப்பராசனும், சர்ப்பராணியும்
சிம்மமும், சுவானமும், மயூரமும், மூஷிகமும் கூட
மஹா கருப்பரும், மஹா கருத்தம்மன் உடனே
பாதுகாவலாய் என்றும் உடனிருப்போம் என்றே
பக்கமிருந்து பாதுகாக்க பறந்தோடி வந்தனரே
மக்களும் தம் பங்குக்கு ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீம் ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவா வா வா என்றே உள்ளம் உருகி
கண்ணீர் பெருக்கி வழிபாடு செய்து
சொர்ண சித்தி, தன பிராப்தி, சர்வ. காரிய அனுகூல சித்தி என அனைத்தும்
பெறுன்றனரே!
இச் சிறப்பு பற்றி என் சொல்வேன்?
என் சொல்வேன்?
ஏது உரைப்பேன்?
ஏது உரைப்பேன்?
எல்லாம் அவன் செயலே!
எல்லாம் அவன் செயலே! எங்கும் அவன் அருளே!
எங்கும் அவன் அருளே!
மேற்கண்ட ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் வருகைப்படலத்தை தினம் தினம் சொர்ணாகர்ஷன பைரவர் பெருமான் படத்தின் முன்பு 33 முறை பாராயணம் செய்து வர பெரும் பணப் பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். செய்யும் தொழிலில் சுணக்கம் வராது. பணமுடை இராது. குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.
சண்டை சச்சரவுகள் விலகும். தீய சக்திகள் ஓடும். நினைத்தன யாவும் நடக்கும். கேட்டன யாவும் கிட்டும். வல்வினை கரையும்.
முதலில் ஆரம்பிக்கும் போது தேய்பிறை அஷ்டமி/ வளர்பிறை அஷ்டமி/பௌர்ணமி இதில் ஏதாவது ஒன்றாக இருந்தால் மிகவும் நல்லது. இலுப்பை எண்ணெய் தீபம் இரண்டு ஏற்றி வைத்து பெயர் சொல்லி அர்ச்சனை செய்து பின் படிக்கவும்.
ஸ்ரீவேம்புச்சித்தர்,
(பைரவ உபாசகர்)
ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத ஸ்ரீமஹா சொர்ண கால பைரவர் திருக்கோயில்,சொர்ணபுரி, திருவிசநல்லூர், கும்பகோணம்.
வாட்சப்: 94449 64303.
வற்றாதசொர்ணசித்திகிட்ட:
**ஸ்ரீ மஹா சொர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம்*
சொர்ணாகர்ஷண பைரவ அஷ்டகத்தை கும்பகோணம், திருவிசநல்லூர், சொர்ணபுரி உறை ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருவுரு முன் தினமும் நெய் விளக்கில் தாமரை தண்டு திரி போட்டு படித்து வர தீராத கடன்கள் தீரும். சொர்ண சித்தி, செல்வ செழிப்பு, எல்லா வளங்களும் கிட்டுவதுடன் வாழ்வில் நன்மைகள் நாளும் பயக்கும். அதேபோல் பௌர்ணமி அன்று சந்திரன் தோன்றிய பின் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருவுரு முன் பால் பாயாசம் படைத்து 18 முறை இதை படித்து பூஜை செய்து வர செல்வ செழிப்பு மிகும்.
தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள் வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்
சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பைரவ பைரவ சரணம் சரணம்
சொர்ணாகர்ஷன பைரவ சரணம்-1
வாழ்வினில் வளந்தர வையகம்
நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானெனவந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான்
கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பைரவ பைரவ சரணம் சரணம்
சொர்ணாகர்ஷன பைரவ சரணம்-2
முழுநில வதனில் முறையொடு
பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான்
உயர்வுறச்செய்திடுவான் முழுமலர்த்
தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான்
பைரவ பைரவ சரணம் சரணம்
சொர்ணாகர்ஷன பைரவ சரணம்-3
நான்மறை ஓதுவார் நடுவினில்இருப்பான்
நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச்
சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
நிறைத்திடுவான் வான்மழை எனவே
வளங்களைப்பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பைரவ பைரவ சரணம் சரணம்
சொர்ணாகர்ஷன பைரவ சரணம்-4
பூதங்கள் யாவும் தனக்குள்ளே
வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள்
ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்
பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும்
மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பைரவ பைரவ சரணம் சரணம்
சொர்ணாகர்ஷன பைரவ சரணம்-5
பொழில்களில் மணப்பான் பூசைகள்ஏற்பான்
பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில்
தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட
பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பைரவ பைரவ சரணம் சரணம்
சொர்ணாகர்ஷன பைரவ சரணம்-6
சதுர்முகன் ஆணவத் தலையினைக்
கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில்
பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
செய்யென்றான் பதரினைக் குவித்து
செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பைரவ பைரவ சரணம் சரணம்
சொர்ணாகர்ஷன பைரவ சரணம்-7
ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள்
செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய சொர்ண வயிரவா சொர்ணபுரி வாசா செகம் புகழ் தேவா
செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பைரவ பைரவ சரணம் சரணம்
சொர்ணாகர்ஷன பைரவ சரணம்-8
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷண பைரவா நின் திருவடிகள் சரணம் சரணம்
ஸ்ரீவேம்புச்சித்தர்,
(பைரவ உபாசகர்).
ஶ்ரீ கால பைரவாஷ்டகம் இது ஆதிசங்கரர் அவர்களால் அருளப்பெற்றது.
தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயக்ஞசூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம்
நாரதாதியோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 1 )
காசிநகர் வாழ் காலபைரவா! நின் மாண்பினைப் பாடுகிறேன் – நினது தாமரைப் பாதங்களில் தேவேந்திரன் வந்து பணிந்து வணங்குகிறான்; நீ அணிகின்ற யக்ஞோபவீதமோ நச்சினைக் கக்கிடும் அரவம் அன்றோ; நினது சடாமுடியை அலங்கரிப்பதோ பாலொளிவீசும் முழுநிலவு; அருட் பார்வையை அள்ளி வீசும் நினது ஒளிவீசும் நயனங்கள்; நாரத முனிவரும் ஏனைய இசை வாணர்களும் நயம்பட இசைக்கும் புகழுடையாய்; திக்குகள் அனைத்தையும், ஆடையாய் அணிந்த எழிலுறு மேனியனே! நின்னைப் பாடுகின்றேன்.
பானுகோடி பாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்
காலகால மம்புஜாக்ஷ மக்ஷசூல மக்ஷரம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 2 )
காசி நகராளும் காலபைரவா! நின் புகழை என் நாவால் உரக்கப் பாடுகின்றேன். கோடி சூரியர் நாடிய ஒளிக்கதிர் வீசிடும் ஞாயிறே; மீண்டும் மீண்டும் வந்து பிறக்கும் கேட்டினை அழிப்பாய்; பிரபஞ்சத்தின் அதிபதியே நீலகண்டா! எங்கள் பெற்றியைப் போற்றி வரம் தரும் கருணையே; முக்கண் உடைய மூலப் பரம்பொருளே; காலனையழித்த கருணை வள்ளலே; தாமரைக் கண்ணா; அழிவற்ற ஆயுதம் கரங்களில் தாங்கிய கருணையே நீதான் நிலையானவன்..
சூல டங்க பாச தண்ட பாணி மாதிகாரணம்
ஷ்யாமகாய மாதிதேவ மக்ஷரம் நிராமயம்
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவப்ரியம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே ( 3 )
காசி நகரையாளும் காலபைரவா நின் புகழினைப் பாடுகின்றேன். கடிந்திடும் கோடரி கைக்கொண்டு, பாசக் கயிற்றினை பற்றிய கையுடன், இப்புவனந்தனை படைத்துக் காத்திடும் பேரருள் கருணையே! சாம்பல் பூசிய கவின்மிகு உடலுடன், தேவாதி தேவா தேவருள் தலைமையே! அழிவினை அழிக்கும் அழியாச் செல்வமே; நோய்நொடிதனையே நெருங்காமல் செய்து உடல்நலம் காக்கும் உத்தமத் தலைவா! வலிமையனைத்தும் ஒருங்கே கொண்ட பிரபஞ்சத்தைப் படைத்து, சிற்சபைதனிலே தாண்டவமாடும் தனிப்பெரும் இறைவா!
புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த சாரு விக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விக்ரஹம்
நிக்வணன் மனோக்ஞஹேம கிங்கிணீலஸத்கடிம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 4 )
காசி நகராளும் காலபைரவரைப் புகழ்வேன்! மனதில் தோன்றும் விருப்புகளையும், அதனை அடையும் மார்க்கங்களையும் காட்டி அருள்புரியும் தேவா! மனதை கொள்ளை கொள்ளும் எழிலுடை தோற்றமுடையாய்! பணிவோர் தம்மை பரவசப்படுத்தும் கருணைக் கடலே! நிரந்தரப் பொருளே! பல்லிடந்தோறும் பற்பல தோற்றம் பயின்றிடும் தேவே! இடையில் ஒளியுமிழ் பொன்னணியுடனே மணிகள் ஒலிக்க நடமிடும் இறைவா!
தர்மசேது பாலகம் த்வதர்மமார்க்க நாசகம்
கர்மபாச மோசகம் சுசர்ம தாயகம் விபும்
சுவர்ணவர்ண கேசபாச சோபிதாங்க நிர்மலம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 5 )
காசி நகரில் கருணை வழங்கும் காலபைரவர் புகழினை இசைப்பேன். நேர்மை வழிதனை நிலைத்திடச் செய்வோன்; அறவழி பிறள்வோரை அழித்திடும் காலன்; கர்ம வினைகள் விளைத்திடும் செயல்கள் அனைத்தையும் அழித்துக் காப்போன்; அளிக்கும் நலன்களை அடக்கமோடு அளிப்போன்; அற்புதத்திலும் அற்புதமானவன்; அணியும் அணிகலன் அனைத்தும் ஒளிருகின்றன பொன்னின் நிறத்தில்.
ரத்னபாதுகா ப்ரபாபிராம பாத யுக்மகம்
நித்யமத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்சனம்
ம்ருத்யு தர்பநாசனம் கராளதடம்ஷ்ட்ர மோக்ஷனம்
காசிகா புராதினாத காலபைரவம் பஜே. ( 6 )
காசி நகராளும் காலபைரவர் புகழினைப் பாடுவேன்; பொன்னாலான காலணி இரண்டும் மின்னிடும் கால்களை யுடையோன்; நிரந்தரமானவன்; ஈடில்லை இவருக்கு மாற்றார் எவரும்; விரும்பியதனைத்தையும் விரைந்து அருள்பவன்; தனக்கென விருப்பம் எதுவும் இலாதவன்; இறப்பையும் வென்ற மேலோனாவன்; ஆன்ம விடுதலை யைத் தன் பற்களால் தருபவன்.
அட்டஹாச பின்னபத்மஜாண்ட கோசஸந்ததிம்
த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜாலமுக்ரசாஸனம்
அஷ்டஸித்தி தாயகம் கபாலிமாலிகந்தரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே. ( 7 )
காசி நகராளும் காலபைரவர் புகழினைப் பாடுவேன். படைப்புத் தேவன் தாமரைச் செல்வன் பிரம்மன் படைத்த அனைத்தையும் தன் கர்ஜனையால் மட்டுமே உடைக்கும் ஆற்றல் படைத்தோன்; பாவங்கள் அனைத்தையும் தன் கருணைப் பார்வையால் கருகிடச் செய்வோன்; ஆள்பவரில் இவனே ஆண்மையாளன் எனும் பெருமையைப் பெற்றோன்; அட்டாங்க சித்தி* அருளும் பெரியோன்; கபால மாலையை அணிந்திடும் பெற்றியன். (*அட்டாங்க சித்தி என்பது: அனிமா, மஹிமா, லகிமா, கரிமா, ப்ராப்தி, ப்ரகாம்யா, ஈசத்வா, வசித்வா எனும் சித்திகளாம்).
பூதஸங்க நாயகம் விசாலகீர்த்தி தாயகம்
காசிவாசி லோகபுண்ய பாப சோதகம் விபும்
நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே. ( 8 )
காசி நகராளும் கற்பகமாம் காலபைரவரைப் பாடுகின்றேன். பேய்க்கணங்கள் அனைத்துக்கும் அதிபதியானவனே! அளவற்ற புகழினை அள்ளித் தெளிப்பவனே! காசியில் வாழ்வோர் பிணிகளை நீக்கி, பாவங்கள் போக்கி பவித்திரமாய்ச் செய்வோனே! ஒளிமயமானவனே! நல்வழி காட்டிடும் நலம் தரும் நாயகனே! காலத்தை வென்ற நிரந்தரமானவனே! பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து வழிநடத்தும் வல்லோனே! நின் பாதம் பணிகின்றேன்.
கால பைரவாஷ்டகம் படந்தியே மனோஹரம்
க்ஞானமுக்திஸாதனம் விசித்ர புண்ய வர்த்தனம்
ஸோகமோஹ தைன்யலோப கோபதாப நாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸன்னிதிம் த்ருவம் (9)
காலபைரவரின் புகழ்பாடும் இவ்வெட்டு வசீகரப் பதிவினையும் படித்து ஆன்ம விடுதலை எனும் அரும்பொருளை உணர்ந்தோர் எல்லோரும், பாவ வழி மறந்து நற்செயல்கள் புரிந்து, துக்கம் அழிந்து, பற்றும் பாசமும் ஒழித்து, ஆசையும், கோபமும் துறந்து பரம்பொருளாம் காலபைரவரின் பாதரவிந்தங்களை அடைவர் என்பது திண்ணம்.
உலகில் வேறு எங்கும் காணவியலாத அதிசய, அதியற்புத திருவுருவம் கொண்ட ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் உறைந்த திருக்கோயில்.
இத்திருவாலய நுழைவு வாயிலில் ஸ்ரீமஹா சுவானரும், ஸ்ரீமஹா கருப்பண்ண சாமியும் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர்.
கிழக்கே நோக்கிய ஆலயம். வடமேற்கே ஸ்ரீமஹா சொர்ண வரசித்தி வலம்புரி விநாயகர், அதன் அருகே அரசு வேம்பின் கீழ் நாகர்களோடு கூடிய ஸ்ரீமஹா சொர்ண வேம்பு வாலையம்மன், அரசு வேம்பின் அடியில்10 அம்மன்கள் சூட்சுமம் ஆக இருந்து அருள்புரிகின்றனர். வடகிழக்கே தெற்கை நோக்கி ஸ்ரீமஹா சொர்ண வடுக பைரவர், வடக்கே அதாவது குபேரன் குருவிற்குரிய திக்கிலே கற்பக மரத்தின் அடியில் அமர்ந்து ஈசான்யத்தை நோக்கி இருக்கிற ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் என திருவாலய தெய்வங்கள்.
எப்பொழுதும் முப்பொழுதும் வணங்க வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்கள்.
வழிபாட்டு பலன்கள் :
இங்கு வந்து கால் வைக்க தலையெழுத்து மாறும். பல ஜென்ம சாப பாப தோஷங்கள் விலகும். கஷ்டங்கள் யாவும் சூரியனைக் கண்ட பனி போல் கரைந்து ஓடும்.
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப்பெருமானுக்கு சம்பங்கி மாலை சாற்றி அர்ச்சனை செய்து இரு பசு நெய் தீபம் ஏற்றி 27 முறை சுற்றி வேண்ட வேண்ட ஜாதகத்தில் உள்ள பாதகங்கள் யாவும் அகலும்.
1000 வருட பழமையான 1000 கோவில்களுக்கு சென்று வேண்டினால் என்ன பலன்கள் கிடைக்குமோ அது இந்த ஒரு திருக்கோவிலில் வந்து வேண்ட கிடைக்கும்.
அனைத்து ராசி, நட்சத்திரக் காரர்களும் தங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கான அனைத்து சுக போகங்களான பணம், காசு, தங்கம், நில புலம், வீடு வாசல், திருமணம், நல்ல கணவன்- மனைவி, நல்ல படிப்பு, குழந்தை பாக்கியம், புகழ், செல்வாக்கு, உயர்ந்த பதவி, நோய் நொடியற்ற, கஷ்டங்கள் இல்லா சுகமான வாழ்வு என அனைத்தையும் பெற வணங்க வேண்டிய தெய்வம். கும்பகோணம், திருவிசநல்லூர் சொர்ணபுரி உறை ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா மஹா சொர்ணாகர்ஷன பைரவர்.
கேட்டதை கேட்டபடியும் நினைத்ததை நினைத்தபடியும் தருகின்ற கற்பக மரத்தின் அடியில் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவர் ஸ்ரீமஹா சொர்ண பைரவி அம்மையை சற்றே அணைத்தபடி மேல் திருக்கரங்களில் நாக பாச சூல டமருகத்துடன் அதாவது தாம் இசைக்கும் டமருகத்தின் இசையை செவிமடுத்து தம்மை வேண்ட வரும் பக்தக்கோடிகளை நாக பாசம் வீசி அருகில் அவர்களை இழுத்து திரிசூலத்தால் அவர்களது பாவங்களை போக்கியும்; மற்றும் நவநிதிகளில் இரு பெரும் நிதிகளான சங்கநிதி (இதன் மதிப்பு 1×16 பூஜ்ஜியம் கொண்டது) பத்மநிதியுடன் (இதன் மதிப்பு 1×32 பூஜ்ஜியம் கொண்டது) மடியில் பூரண அமுத கும்பத்துடன் ( இதனுள் சர்வ தேவ தேவதா தெய்வங்கள், நவநிதிகள், நவரத்தினங்கள், நவதானியங்கள், நோய் நொடிகளை நீக்குகிற அமிர்தம் நிறைந்தது) அபய வரத கரம் எனும் காக்கும் மற்றும் அருளும் முத்திரை தாங்கி அதாவது உள்ளன்போடு நல் நம்பிக்கையோடு தம்மிடம் பணிந்து வேண்டும் பக்தக்கோடிகளை அரவணைத்து அவர்கள் கஷ்டங்கள் யாவையும் தீர்த்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அருளுவேன் என்றும்;
ஸ்ரீமஹா சொர்ணபைரவி அம்மையோ ஓர் திருக்கரத்தால் வற்றாத ஜீவ நதி போல் அட்சயப்பாத்திரம் போல் பொங்கி பொங்கி வழிந்து கொண்டே இருக்கிற சொர்ண கும்பத்தை இறுக்கிப்பிடித்த படி
மற்றோர் திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடுப்பைத் தழுவியவாறு புன்னகை தவழும் திருமுகங்களுடன் அமர்ந்து அருள் மழை பொருள் மழை, சொர்ண மழை என பக்தக்கோடிகளுக்கு பொழிந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த தெய்வம் இவ்வுலகம் தோன்றியது முதல் எவர் மூலமும் வெளிப்படாத கலியுகத்தில் பைரவ உபாசகர் ஸ்ரீவேம்புச்சித்தர் குணசேகரன் ஸ்வாமிகள் தியானத்தின் மூலம் 2010ஆம் ஆண்டு தான் இவ்வையகத்தை ஆண்டு அருள்புரிய அம்மையப்பனாக, ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவராக, ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவராக கும்பகோணத்தை அடுத்த திருவிசநல்லூரிலே 2008லே இடம் வாங்க சுப சகுணங்கள் நிறைய காட்டி உத்தரவிட்ட அந்த இடத்திலேயே வந்து அமர்ந்து அரும்பெரும் வள்ளலாய் தம்மை நாடி வரும் பக்தக்கோடிகளுக்குஅவர்கள் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். 12.2.2012 அன்று குடமுழுக்கு விழா பசு, குதிரை, யானை இவைகளுடன் இனிதே நடைபெற்றது. அன்றிலிருந்து தொடர்ந்து பக்தக்கோடிகள் கோடிக்கணக்கில் இங்கு வந்து வேண்டி தங்கள் குறைகள் களையப்பட்டு எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெற்று நிறைவான வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் பக்தர்களின் குறைகள் நீங்குவதற்கான யந்திரங்கள், மூலிகைகள் பத்திக்கப்பெற்று இருப்பதால் குறைகள் யாவும் நீங்கப்படுகிறது.
தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் காலை 9.00 மணிக்கு ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் மற்றும் ஸ்ரீமஹா சொர்ண வடுக பைரவப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை களும் 10.00 மணிக்கு கொல்லிமலையில் இருந்து கொண்டு வரப்பெற்ற சர்வ கஷ்டநஷ்ட உபத்திரவங்கள், கடன் தொல்லைகள், ஏவல் பில்லி சூனியங்கள் போக்குகிற மற்றும் தன பிராப்தி, சொர்ணசித்தி, காரிய சித்தி, சகல சௌபாக்கிய சித்தி தருகின்ற மூலிகைகளை கொண்டு பைரவ உபாசகர் சொர்ணஸ்ரீ வேம்புச்சித்தர் திருக்கரங்களால் நடத்தப்பெறுகிறது. இதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது.
நித்தமும் அனைத்து பைரவர்களும் வந்து கூடும் இடம். அஷ்ட லட்சுமிகளும், குபேரனும், சர்வ சித்தர் ரிஷி முனி யோகி ஞானி நாதாக்களும் வந்து வணங்குமிடம். மிகவும் சக்தி நிறை ஆலயம்.
வீட்டின் அனைத்து சுபகாரியங்கள் மற்றும் திருமணம், 60 ஆம் திருமணம், 80 ஆம் திருமணம் போன்றவைகளை இங்கு நடத்த இது மிகவும் உகந்த அதாவது அம்மையப்பன் சேர்ந்து அருகருகே அமர்ந்து அன்புடன் உறைந்த திருத்தலம்.
இங்கு தினசரி ராஹு காலங்களில், தினசரி பிரதோஷ கால வேளைகளில், சனிக்கிழமை, அம்மாவாசை, மாதங்களில் வரும் 8, 17, 26 தேதிகளில் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி நாட்களில் வழிபட கஷ்டங்கள் விலகும்.
தினசரி குளிகை காலங்கள், வியாழக்கிழமை மாலை குபேர வேளைகளில், வெள்ளிக்கிழமை சுக்ர ஓரைகளில், வியாழக்கிழமை குரு ஓரைகளில், தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி நாட்களில் வழிபட தன பிராப்தி, சொர்ண சித்தி, காரிய சித்தி, சகல சௌபாக்கிய சித்திகளும் கிட்டும்.
அவரவர் பிறந்த நட்சத்திர நாட்களில் பன்னீர், சந்தன அபிஷேகம் செய்து வழிபட கஷ்டங்கள் விலகி நன்மைகள் பெருகும்.
கடன் தொல்லைகள் தீர செவ்வாய் கிழமை மதியம் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் வந்து வேண்டி கடனை கொடுத்து வர கடன்கள் விரைவில் அடைய வழிவகைகள் பிறக்கும்.
ஸ்ரீமஹா சொர்ண வரசித்தி வலம்புரி விநாயகருக்கு அருகம்புல் சாற்றி தேங்காய் எண்ணெய் தீபம் போடுவது சிறப்பு.
ஸ்ரீமஹா சொர்ண வேம்புவாலை யம்மனுக்கு செவ்வரளி சாற்றி விளக்கெண்ணெய் தீபம் போடுவது சிறப்பு.
ஸ்ரீமஹா சொர்ண வடுக பைரவருக்கு செவ்வரளி சாற்றி அகலில் நல்லெண்ணெய் ஊற்றி 27 மிளகை சிவப்பு காட்டன் துணியில் முடிச்சு போட்டு அகலில் ஊற்றிய நல்லெண்ணெயில் முக்கி அதிலேயே வைத்து ஏற்றி வழிபட கஷ்டங்கள் யாவும் விலகும். பஞ்ச எண்ணெய் தீபம், தேங்காய் மூடியில் தீபம், பூசணிக்காய் மூடியில் தீபமும் ஏற்றலாம்.
ஸ்ரீமஹா வடுக பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமும், ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவருக்கு நெய் தீபமும் போட வேண்டும்.
108 காசுகளை ஒரு மஞ்சள் பட்டுத்துணியில் முடித்து ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானுக்கு சம்பங்கி மாலை சாற்றி பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து 2 பசு நெய் தீபம் ஏற்றி காசை வைத்து வழிபட்டு அந்த முடிச்சை காசு பணம் வைக்கும் பணப்பெட்டி, பீரோ, கல்லா வில் வைக்க காசு பணம் புழக்கம் நன்றாக இருக்கும்.
திருவாலயம் காலை 09.00 மணியில் இருந்து மதியம் 01.00 மணி வரையும்; மாலை 04.00 மணி முதல் 06.30 மணி வரையும் திறந்திருக்கும்.
தினசரி காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை பைரவர் அருள்வாக்கு சொல்லப்படும். முன் அனுமதி பெற்று வரவும்.
அவரவர் கஷ்டங்கள் சரியாக ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனை கள், கலச பூஜை, ஹோமம் செய்து கொள்ள, அன்னதானம் செய்ய காணிக்கை கட்டணம் செலுத்த கீழ்க்கண்ட அலைபேசியை தொடர்பு கொள்ளளவும்.
அலைபேசி: 94449 64303
ஆலய தெய்வங்களுக்கு நித்திய அபிஷேக ஆராதனைகள், வஸ்திரங்கள், தீபங்களுக்கான எண்ணெய்,தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, பௌர்ணமி, அம்மாவாசை யாக வேள்விகளுக்குரிய பொருட்கள், அன்னதானத்திற்கு வேண்டிய அரிசி, பருப்பு, மற்ற இதர பொருட்கள் நேராக வந்து வாங்கி தருபவர்கள் வாங்கித் தரலாம். அல்லது வருமான வரி விலக்கு தரும் 12(A) கொண்ட Sri vembusidhar charitable Trust a/c க்கு பணம் அனுப்பி வைக்கலாம்.
Bank Name: City Union Bank Ltd.,
A/c No.510909010271485
IFSCode CIUB0000021
Branch: Thiruvidaimaruthur.
சொர்ண ஸ்ரீவேம்பூச்சித்தர்
இவருடைய 7, 8 வயதிலேயே மச்சமுனி தரிசனம் பெற்றவர். இறை பரம்பொருளோடு பல ஜென்ம தொடர்பு கொண்டவர். சிறு பிள்ளை பிராயத்தில் இருந்தே நிறைய ஆன்மீக அனுபவங்கள் பெற்றவர். இறைவனை பலமுறை நேருக்கு நேர் தரிசனம் பெற்றவர். காவல்துறை யில் சுருக்கெழுத்தராக, நிறைய அதாவது கிட்டத்தட்ட 27க்கும் மேற்பட்ட IPS அதிகாரிகளிடம் ஏன் தமிழக காவல் துறை DGP உட்பட அனைவரிடமும் personal ஆக முகாம் அலுவலகங்களில் மிகவும் நேர்மையாக 32 ஆண்டுகள் பணியாற்றிவர். தம்மை நாடி வந்த அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை எந்தவித சிறு எதிர்பார்ப்பும் இன்றி செய்தவர். 1994 முதல் ஆன்மீகத்தில் தம்மை கஷ்டம் என்று நாடி வருபவர்களின் கஷ்டங்களை கேட்டறிந்து சிறு சிறு பரிகாரங்கள் சொல்லி யாகத்தில் வந்து கலந்து கொள்ள சொல்லி சரி செய்து வருபவர்.
2003ல் திருவண்ணாமலை நிருதி மற்றும் வாயு லிங்கத்திற்கு அருகில் ஸ்ரீமஹா பைரவப் பெருமானால் தடுத்தாட்கொள்ள பெற்றவர். இந்த சம்பவத்திற்கு 7 ஆவது நாளில் கொல்லிமலை சித்தர் ஒருவரால் சித்தர்களுக்கான தீட்சை முறைகள், பைரவ பைரவி உபாசனை, அஷ்ட பைரவர் உபாசனை, 64 பைரவர் உபாசனை, காளி, வாலை, வாராஹி உபாசனைகள், வாசி யோகம் போன்றவைகள் பெற்று 2005ல் தன் குருநாதர் இவரது பல ஜென்ம பெயரான ஸ்ரீவேம்புச்சித்தர் என்று அழைத்து உலகத்தின் முன் மக்களுக்கு அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்.
இவரின் ஆன்மீக பணிக்கு சிறப்பான ஒரே ஒரு எடுத்துக்காட்டு இவரிடம் ஸ்ரீமஹா பைரவப் பெருமான் தியானத்தில் தோன்றி எனக்கொரு ஆலயம் எழுப்பு என்று கேட்க இவரோ இந்த உலகம் என்று தோன்றியதோ அன்று முதல் இன்று என்னிடம் வந்து கேட்கும் வரை இதுவரை எவருக்கும் காட்டிராத அதிசய அதியற்புத திருக்காட்சியை காட்டியருளினால் திருவாலயம் எழுப்புகிறேன் என்று கூற அவ்வாறே திருக்காட்சி தந்து அருளுவோம் என்று கூறியவாறு திருக்காட்சி காட்டி அருளியதே கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ணபுரியில் உறைந்து அருளும் ஸ்ரீமஹா சொர்ணபைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் அதிசய அதியற்புத உலகில் வேறு எங்கும் காணவியலாத திருவுருவம் ஆகும்.
கடந்த 30 ஆண்டுகளாக ஆன்மீகம் மூலம் உலக மக்களுக்கு சமூக சேவை செய்து வருவதை பாராட்டி உலக அளவியலான ஆக்ஸ்பா பல்கலைக்கழகம் 29.9.2023 வெள்ளிக்கிழமை அன்று மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில் கௌரவ டாக்டர் பட்டம் எமக்கு வழங்கப்பட்டது.
முக்கிய அறிவிப்பு
இந்த ஆலய ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் எம்மால் காப்பிரைட் அதாவது காப்புரிமை பெறப்பெற்ற தெய்வம். ஆகவே இதை போட்டோ பிடிப்பதோ, இதே போன்ற சிலையை வேறு எவரும் வடிப்பதோ, படமாக வரைவதோ, பிறர் வேறு எதிலும் வெளியிடுவதோ யாருக்கும் உரிமை கிடையாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
உலகில் வேறு எங்கும் காணவியலா அதிசய அதியற்புத எமது தியானத்தில் தோன்றி ஆலயம் எழுப்ப சொல்லி அதன் பிறகு காட்சியளித்த ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான் கும்பகோணம் திருவிசநல்லூர், சொர்ணபுரியில் ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகாலபைரவர் எனும் சொர்ணாகர்ஷன பைரவர் திருவாலயத்தில் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானாக எழுந்தருளி அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறார். அதிசயம் என்பது ஓரிடத்தில் மட்டுமே இருந்தால் தான் அதிசயம். ஆகவே இதை தவறுதலாக மற்றவர் பயன்படுத்துவதை தவிர்க்கவே இந்தப் பதிவு.
Dr. S. குணசேகரன் @
சொர்ண ஸ்ரீவேம்புச்சித்தர் @ சித்தர் ஸ்ரீ ஸ்ரீ குணசேகர ஸ்வாமிகள்,
(பைரவ உபாசகர்)
சர்வலோகபைரவர்சமஸ்தானம்,
ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் @ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோயில் திருவிசநல்லூர்,
கும்பகோணம் -612105
அலைபேசி:94449_64303
64 பைரவர்கள் & 64 யோகினி பைரவிகள்:
65 ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர்:
1) நீலகண்ட பைரவர்
( ஜயா யோகினி )
2) விசாலாக்ஷ பைரவர்
( விஜயா யோகினி )
3) மார்த்தாண்ட பைரவர்
( ஜயந்தி யோகினி )
4) முண்டனப்ரபு பைரவர்
( அபராஜிதா யோகினி )
5) ஸ்வஸ்சந்த பைரவர்
( திவ்யமோகினி யோகினி )
6) அதிஸந்துஷ்ட பைரவர்
( மஹா யோகினி )
7) கேஸர பைரவர்
( ஸித்தமோகினி யோகினி )
8) ஸம்ஹார பைரவர்
( கணேஸ்வர யோகினி )
9) விஸ்வரூப பைரவர்
( ப்ரேதாஸிந்யை யோகினி )
10) நாநாரூப பைரவர்
( டாகினி யோகினி )
11) பரம பைரவர்
( காளி யோகினி )
12) தண்டகர்ண பைரவர்
( காளராத்ரி யோகினி )
13) ஸீதாபத்ர பைரவர்
( நிஸாஸாரீ யோகினி )
14) ஸிரீடன் பைரவர்
( டங்கார்ரீ யோகினி )
15) உன்மத்த பைரவர்
( வேதாள்யா யோகினி )
16) மேகநாத பைரவர்
( ஹும்காரி யோகினி )
17) மநோவேக பைரவர்
( ஊர்த்துவகேஸி யோகினி )
18) க்ஷேத்ரபாலக பைரவர்
( வ்ருபாட்சி யோகினி )
19) வ்ருபாஷ பைரவர்
( ஸுஷ்காங்கீ யோகினி )
20) கராள பைரவர்
( நரபோஜினி யோகினி )
21) நிர்பய பைரவர்
( பட்சாரி யோகினி )
22) பிஸித பைரவர்
( வீரபத்ரா யோகினி )
23) ப்ரேஷித பைரவர்
( தூம்ராக்ஷி யோகினி )
24) லோகபால பைரவர்
( கலகப்ரியா யோகினி )
25) கதாதர பைரவர்
( கோர ரக்தாக்ஷி யோகினி )
26) வஜ்ரஹஸ்த பைரவர்
( விஸ்வரூபி யோகினி )
27) மஹாகால பைரவர்
( அபயங்க்ரி யோகினி )
28) பிரகண்ட பைரவர்
( வீரகௌமாரி யோகினி )
29) ப்ரளய பைரவர்
( சண்டிகை யோகினி )
30) அந்தக பைரவர்
( வாராஹி யோகினி )
31) பூமிகர்ப பைரவர்
( முண்டதாரணி யோகினி )
32) பீஷண பைரவர்
( ராக்ஷஸி யோகினி )
33) ஸூலபால பைரவர்
( பைரவி யோகினி )
34) குலபால பைரவர்
( த்வாங்க்ஷிணி யோகினி )
35) ருண்டமாலா பைரவர்
( தூம்ராங்கி யோகினி )
36) ரக்தாங்க பைரவர்
( ப்ரேதவாஹினி யோகினி )
37) பிங்களேக்ஷ பைரவர்
( கட்கிணி யோகினி )
38) அப்ரரூப பைரவர்
( தீர்க்க லம்போஷ்யா யோகினி )
39) தாரபாலந பைரவர்
( மாலினி யோகினி )
40) ப்ரஜாபாலந பைரவர்
( மந்த்ர யோகினி )
41) ஸூல பைரவர்
( நீலி யோகினி )
42) மந்த்ரநாயக பைரவர்
( சக்ரிணி யோகினி )
43) ருத்ர பைரவர்
( கங்காளி யோகினி )
44) பிதாமஹ பைரவர்
( புவனேஸ்வரி யோகினி )
45) விஷ்ணு பைரவர்
( த்ரோடகீ யோகினி )
46) வடுகநாத பைரவர்
( மஹாமாரீ யோகினி )
47) கபால பைரவர்
( யமதூதி யோகினி )
48) பூதவேதாள பைரவர்
( காட்டேரி யோகினி )
49) த்ரிநேத்ர பைரவர்
( கேசினி யோகினி )
50) த்ரிபுராந்தக பைரவர்
( மர்த்தினி யோகினி )
51) வரத பைரவர்
( ரோமஜங்கே யோகினி )
52) பர்வதவாகன பைரவர்
( நிர்வாண யோகினி )
53) சசிவாகன பைரவர்
( விஸாலி யோகினி )
54) கபாலபூஷண பைரவர்
( கார்முகி யோகினி )
55) ஸர்வக்ஞ பைரவர்
( தோத்யமின யோகினி )
56) ஸர்வதேவ பைரவர்
( அதோமுக்யை யோகினி )
57) ஈஸாந பைரவர்
( முண்டாக்ரதாரிணி யோகினி )
58) ஸர்வபூத பைரவர்
( வ்யாக்ரிணி யோகினி )
59) கோரநாத பைரவர்
( தூங்க்ஷிணி யோகினி )
60) பயங்கர பைரவர்
( ப்ரேதரூபிணி யோகினி )
61) புக்திமுக்தி பலப்ரத பைரவர்
( தூர்ஜடை யோகினி )
62) காலாக்நி பைரவர்
( கோரா யோகினி )
63) மஹாரௌத்ர பைரவர்
( கராளி யோகினி )
64) தக்ஷிணாபிஸ்தித பைரவர்
( விஷலங்கர்யா யோகினி )
மேற்கண்ட 64 பைரவர்கள் மற்றும் 64 யோகினி பைரவிகள் பற்றி சாக்த தந்திர நூல்களிலும் மந்திர மஹோததி என்ற மந்திர நூலிலும் சொல்லப் பட்டுள்ளது.
65 ஆவது பைரவர்:
கும்பகோணம் திருவிசநல்லூர், சொர்ணபுரியில் உறைந்திருக்கும் ஓம் ஸ்ரீ மஹா சொர்ண பைரவி ஸமேத ஸ்ரீமஹா சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் அதாவது ஓம் ஸ்ரீமஹா சர்வ ஆனந்த பைரவி ஸமேத ஸ்ரீமஹா சர்வானந்த கோலாகல பைரவர். 9
உக்கிரம் நீங்கிய திருக்கோலம்.
நவக்கோள்களின் பிராணனாக திகழ்பவர். அவர் தம் திருவடியில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கம். ஆக அனைத்து ராசிகளுக்கும் இவரே அதிபதி. இந்த ராசிகளின் தோஷ ஸ்தானத்தில் நவகிரகங்களில் எது இருந்தாலும் அவர்களைக் கட்டுபடுத்துபவர் இவர் தான். ஆக இவரை வணங்க சர்வ சாப பாப தோஷங்களும் விலகி வாழ்வில் எல்லா வளமும் நலமும், பொன்னும் பொருளும் கிட்டும் என்று மேற்கண்ட மந்திர, தந்திர நூல்கள் கூறுகின்றன.
சிறப்பு பூஜை மற்றும் ஹோமம்
இங்கு தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் காலை 09.00 மணிக்கு ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்; அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணிக்கு ஸ்ரீகால பைரவர், ஸ்ரீஅஷ்ட பைரவர், ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமமும் நடைபெறும்.
4.2.2024 முதல் 12.2.2024 வரை சிங்கப்பூர் மற்றும் மலேசிய வாழ் பக்தக் கோடிகளை சந்திக்க ஆன்மீக பயணம் மேற்கொள்ளப் பெற்றது.
வளர்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை மற்றும் ஹோமம்:
பொன், பொருள், அஷ்ட ஐஸ்வர்யம்,
சகல சௌபாக்கி யங்களும் அருளும் தெய்வம் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர்.
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் எனும் சொர்ணபைரவி சமேத சொர்ணகால பைரவர் திருக் கோயில் எனும் சித்தர் கோயில்.
அனுதினமும் அஷ்ட லட்சுமிகளாலும் குபேரனாலும் சர்வ தேவ தேவதாக் களாலும், சர்வ சித்தர், ரிஷி, முனி, யோகி, ஞானி, நாதாக்களாலும் வணங்கப் பெறும் கலியுகத்தில் கண் கண்ட தெய்வம்.
உலகில் வேறு எங்கும் காணவியலா அதிசய அதியற்புத திருவுரு வம் கொண்ட ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர்.
நற்பவி. நற்பவி நற்பவி
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர்
அனுக்கிரகம் பரிபூரணம்.
வாழ்வில் சர்வ கஷ்டங்கள் நீங்கி
சுபிட்சம் பெற தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு பூஜை மற்றும் ஹோமம்:
16.4.2024 செவ்வாய்கிழமை காலை 9.00 மணிக்கு கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ணபுரி உறை ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானுக்கும் ஸ்ரீமஹா சொர்ண வடுக பைரவப் பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அதனைத் தொடர்ந்து 10.00 மணிக்கு சர்வ கஷ்ட நஷ்ட உபத்திரவங்கள், கடன் தொல்லைகள், சர்வ நோய் நொடிகள் நீங்கி தன பிராப்தி, சொர்ண சித்தி, சர்வ காரிய அனுகூலம் கிட்ட கொல்லி மலையில் இருந்து தருவிக்கப் பெற்ற அதிகசக்தி வாய்ந்த மூலிகைகளைக் கொண்டு ஸ்ரீ கால பைரவர், ஸ்ரீ அஷ்ட பைரவர் ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமமும் இனிதே பெறும்.
ஸ்ரீமஹாசொர்ணபைரவிசமேத சொர்ணகால பைரவர் @ ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷனபைரவர் திருவாலய அமைவிடம்:
கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருவிசநல்லூர்
ஸ்ரீ சிவயோகிநாதர் ஆலயத்திற்கும் ஸ்ரீகற்கடேஸ்வரர் அருமருந்து நாயகி ஆலயத்திற்கும் இடையே இயற்கை சூழல் நிறைந்த வயல்வெளியினுள் அமைந்துள்ளது.
திருவாலய வழிபாட்டு_சிறப்பு:
இத்திருவாலயத்தில் வந்து கால் பதிக்க தலையெழுத்து மாறும். ஸ்ரீமஹா அம்மையப்பனை முறைப்படி தொழுது கும்பிட ஜாதகத்தில் உள்ள பாதகங்கள் சாதகங்கள் ஆகும். ஆயிரம் வருடம் பழமையான ஆயிரம் கோயில் சென்று வணங்கினால் என்ன பலன் கிட்டுமோ அந்த பலன் இந்த ஆலயத்தில் வந்து வழிபட உடனே கிட்டும்.
இத்திருவாலயம் பைரவ உபாசகர் சித்தர் ஸ்ரீஸ்ரீகுணசேகரன் ஸ்வாமிகள் அவர்களால் கட்டப்பட்ட அபரிமிதமான ஆற்றல் நிறைந்த பிரமிட் அமைப்பிலான மூலஸ்தானம் கொண்ட கோயில். ஆதலால் இங்கு எப்போதும் ஆகாயத்தில் இருந்து ஈர்க்கப்படும் பையோ காஸ்மிக் எனர்ஜியும் பூமியில் இருந்து ஈர்க்கப்படும் எர்த் எனெர்ஜியும் இணைந்த அளவற்ற பிரபஞ்ச சக்தி நிறை இறையாற்றலும் எந்நேரமும் மூலஸ்தானத்தில் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கும்.
ஆகவே இங்கு வந்து வழிபட நினைத்தது யாவும் நினைத்தபடி நடக்கும். கேட்டது யாவும் கேட்டபடி கிடைக்கும். இந்த ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் இருக்கும் இடத்தில் சொர்ணம் எப்போதும் கொழித்துக் கொண்டே இருக்கும்.
திருவாலய_திறப்புநேரம்:
தினசரி திருவாலயம் காலை 09.00 மணி முதல் 01.00 மணி வரையும் மாலை 04.00 மணி முதல் 06.30 மணி வரையும் திறக்கப் பெற்றிருக்கும்.
சிறப்புஅபிஷேகஆராதனைகள் மற்றும்ஹோமம்:
ஒவ்வொரு மாதம் வரும் அம்மாவாசை, பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி நாட்களில் நமது ஆலயத்தில் காலை 09.00 மணிக்கு ஸ்ரீமஹா அம்மையப்பனுக்கு க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் 10.00 மணிக்கு ஸ்ரீகால, ஸ்ரீஅஷ்ட, ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமமும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்.
13வகையான பாவங்களும்விலக வேண்டுமா?சர்வசாபபாபதோஷங்கள்_அகல வேண்டுமா?
தினசரி காலை எழுந்ததும் சூரியனை கும்பிடு. நவக்கோள்களின் பிராணனாக திகழும் சூரியனின் அதிப்ரத்யட்ச பிராண தேவதையுமான கும்பகோணம் திருவிசநல்லூர் சொர்ணபுரி உறை
சொர்ணபைரவி சமேத சொர்ணகால பைரவர் எனும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவரை எப்போதும் காலை, மாலை, இரவு என முப்பொழுதும் நெய் தீபம் போட்டு உளம் உருகி கும்பிடு.
பாவங்கள் எல்லாம், கஷ்டங்கள் யாவும் சூரியனை கண்ட பனி போல உருகி ஓடுமே. தடுப்புக்கள் யாவும் விலகுமே. நல்லன யாவும் நடக்குமே. வாழ்க்கை ஒளி மயமாய் மாறுமே.
வாழ்வில்கெடுதல்கள்விலகிநன்மைகள்பெருக:
ஸ்வாமிக்கு தினசரி பூஜைக்கு வேண்டிய பூக்கள், மாலைகள், ஸ்வாமி சிலைகளுக்கு வஸ்திரங்கள், சன்னதி விளக்குகளுக்கு வேண்டிய நல்லெண்ணெய், கலசத்திற்கு போட தேவையான வாசனை திரவியங்கள், ஹோமத்திற்கு வேண்டிய பட்டுத்துணி, தூய பசு நெய், ஹோம திரவியங்கள், பழங்கள், தேன், பால், தயிர், சமித்துகள், நவதானியங்கள், வெண் கடுகு வாங்கி கொடுக்கலாம். அதேபோல் அன்னதானத்திற்கு வேண்டிய அரிசி, துவரம் பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் போன்றவைகளை வாங்கித் தரலாம். ஆலய தூய்மை பராமரிப்பு, அன்னம் பரிமாறுதல் போன்ற சேவைகள் செய்யலாம். மேற்கண்ட உதவிகள் , சேவைகளை தொடர்ந்து இங்கு வந்து செய்து வர சாப பாப தோஷங்கள் விலகி புண்ணியம் சேரும். கெடுதல்கள் யாவும் விலகி நன்மைகள் உண்டாகும்.
பைரவர் அருள்வாக்கு:
ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை காலை 10.00 முதல் மதியம் 12.00 மணி வரை பைரவர் அருள்வாக்கு சொல்லப்பெறும். முன் அனுமதி பெற்று நேரில் வரவும்.
சித்தர் ஸ்ரீஸ்ரீகுணசேகரன் ஸ்வாமிகள், (பைரவ உபாசகர்) ஸ்தாபகர், ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் @ ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோயில், சர்வலோக பைரவர் சமஸ்தானம், சொர்ணபுரி, 721A, கற்கடேஸ்வரர் கோயில் சாலை, திருவிசநல்லூர்,
கும்பகோணம் -612105
அலைபேசி: 94449 64303
Opening Hour
Open Now- Monday : 09:00-18:30
- Tuesday : 09:00-18:30
- Wednesday : 09:00-18:30
- Thursday : 09:00-18:30
- Friday : 09:00-18:30
- Saturday : 09:00-18:30
- Sunday : 09:00-18:30
Location on Map
Featured Video
Address | No. 721, Karkadeshwarar Kovil Street, Thiruvisanallur, Thiruvidaimarudur Taluk, Thanjavur District, Tamil Nadu 612105, India |
---|---|
[email protected] | |
Phone | 9444964303, 9444443477 |
Website |
Send Email to business
Recent reviews
மாயா, அமெரிக்கா
Posted on: Apr 07, 2024
நான் அமெரிக்காவில் வசிக்கிறேன். எனக்கு நல்ல வேலை கிடைக்க என்ன செய்யலாம் என்று சித்தர் ஸ்வாமிகள் இடம் தொடர்பு கொண்டு கேட்டேன். சித்தர் ஸ்வாமிகள் வேலை கிடைக்க ஒரு மந்திரம் சொல்லி அதை சொல்லிக் கொண்டே இரு Detail
சேதுராமன், கும்பகோணம்
Posted on: Feb 18, 2024
எனக்கு என்னுடைய இடத்தை விற்க விடாமல் என் உறவினர்கள் தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். எனக்கு வேண்டிய ஒருவர் இந்த ஆலயத்திற்கு சென்று சொர்ணஸ்ரீ வேம்புச்சித்தரை போய் பார். அப்படியே அங்குள்ள ஸ்ரீமஹ Detail
சேதுராமன், கும்பகோணம்
Posted on: Feb 18, 2024
எனக்கு என்னுடைய இடத்தை விற்க விடாமல் என் உறவினர்கள் தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். எனக்கு வேண்டிய ஒருவர் இந்த ஆலயத்திற்கு சென்று சொர்ணஸ்ரீ வேம்புச்சித்தரை போய் பார். அப்படியே அங்குள்ள ஸ்ரீமஹ Detail
சேதுராமன், கும்பகோணம்
Posted on: Feb 18, 2024
எனக்கு என்னுடைய இடத்தை விற்க விடாமல் என் உறவினர்கள் தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். எனக்கு வேண்டிய ஒருவர் இந்த ஆலயத்திற்கு சென்று சொர்ணஸ்ரீ வேம்புச்சித்தரை போய் பார். அப்படியே அங்குள்ள ஸ்ரீமஹ Detail
சேதுராமன், கும்பகோணம்
Posted on: Feb 18, 2024
எனக்கு என்னுடைய இடத்தை விற்க விடாமல் என் உறவினர்கள் தொந்தரவு கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். எனக்கு வேண்டிய ஒருவர் இந்த ஆலயத்திற்கு சென்று சொர்ணஸ்ரீ வேம்புச்சித்தரை போய் பார். அப்படியே அங்குள்ள ஸ்ரீமஹ Detail
Posted on: Feb 01, 2024
நான் இந்த ஆலயத்திற்கு பல வருடங்கள் ஆக வந்து கொண்டு இருக்கிறேன். என் அத்தை குல தெய்வம் பற்றி தெரிந்து கொள்ளவும் மேலும் அவர் மகனுக்கு திருமணம் ஆகவும் இங்கு ஒருமுறை அழைத்து வந்தேன். இங்கு வந்து வேண்டி செ Detail
கற்பகம், கண்டியூர்
Posted on: Jan 19, 2024
நான் இந்த ஆலயத்திற்கு இரண்டு வருடமாக வந்து இங்கு நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு வருகிறேன். இங்கு வரும் போது ஒரு மளிகை கடையில் மாத சம்பளத்திற்கு வேலை செய்து வந்தேன். இப்போதோ ஒரு கடையை சொந்தமாக திறந Detail
D.அருண், கருப்பூர்
Posted on: Jan 04, 2024
எனக்கு வெளிநாடு செல்ல விசா தாமதம் ஆகிக் கொண்டு இருந்தது. இது பற்றி என் நண்பர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு சித்தர் ஸ்வாமிகளையும் பார்த்து விட்டு வந்து விடுங் Detail
Posted on: Nov 11, 2023
ஒரு மூன்று, நான்கு மாதத்திற்கு முன் இந்த ஆலயத்திற்கு எதேச்சையாக வந்தேன். வந்து வேண்டி சென்ற சில நாட்களிலேயே விவசாயத்திற்குரிய அறுவடை செய்யும் மெஷினுக்கு லோன் கிடைத்தது. பல ஆண்டுகளாக கட்ட முடியாமல் தேங Detail
Posted on: Nov 11, 2023
ஒரு மூன்று, நான்கு மாதத்திற்கு முன் இந்த ஆலயத்திற்கு எதேச்சையாக வந்தேன். வந்து வேண்டி சென்ற சில நாட்களிலேயே விவசாயத்திற்குரிய அறுவடை செய்யும் மெஷினுக்கு லோன் கிடைத்தது. பல ஆண்டுகளாக கட்ட முடியாமல் தேங Detail
Posted on: Sep 02, 2023
கையெழுத்தை மாற்றி தலையெழுத்தை மாற்றிய அற்புதங்கள்: யான் பணி புரிந்த திரு. P.C. Panth, IPS ADGP, யாக இருந்த போது அவருக்கு DGP ப்ரோமோஷன் வருவதில் நீண்ட கால தாமதம் ஆகிக் கொண்டிருந்தது. ஒரு நாள் எம்மை அழ Detail
சிவா, கும்பகோணம்
Posted on: Aug 27, 2023
மிகவும் சக்தி நிறைந்த ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமான். அவரின் பேரருள் பரிபூரணமாக பெற்ற அருள் வள்ளல் ஸ்ரீவேம்பூச்சித்தர் ஸ்வாமிகள் Detail
சிவா, கும்பகோணம்
Posted on: Aug 27, 2023
எனக்கு 6 வயது 6 வயதில் இரு குழந்தைகள் இறந்து விட்டது. இப்போது ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கும் அது போல் ஆகிவிடுமோ என்று பயந்திருந்த வேளையில் சித்தர் ஸ்வாமிகளை பற்றி கேள்விப்பட்டு ஆலயத்திற்கு சென்று ஸ Detail
Posted on: Aug 27, 2023
ஸ்ரீவேம்பூச்சித்தர் சாமி எங்களுக்கு கிடைத்தது நாங்கள் ஏதோ ஒரு பிறவியில் செய்த புண்ணியம் என்றே கருதுகிறோம். அவரை நாடி வரும் இந்த உலகத்தினருக்கே நல்லதை செய்து கொண்டு இருக்கிறார்கள். அன்னதானம் போடுகிறார் Detail
Posted on: Aug 26, 2023
ஸ்வாமிகள் மூலம் நான் பெற்ற பலன்களை எல்லாம் முன்னே பதிவு இட்டு இருக்கிறேன். ரேட்டிங் கொடுக்க விட்டு விட்டேன். அதை இப்போது பதிகிறேன். Detail
ஏழுமலை, கும்பகோணம்
Posted on: Aug 26, 2023
ஸ்வாமிகள் மூலம் பெற்ற பலனை முன்னே பதிவிட்டு விட்டேன். ரேட்டிங் மட்டும் இப்போது தருகிறேன். Detail
Posted on: Aug 26, 2023
நான் தாராசுரத்தில் காய்கறி கடை வைத்து இருந்தேன். கோரானா காலத்தில் தொழில் முடங்கியது. இரண்டரை வருட கோரானா காலத்தில் திறந்திருந்த ஒரே கோயில் ஸ்ரீவேம்பூச்சித்தர் கட்டிய ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் கோயில் Detail
ஏழுமலை, கும்பகோணம்
Posted on: Aug 26, 2023
இந்த திருவாலய த்திற்கு வரும் போது எனது பணியில் நிம்மதி இல்லாத நிலை இருந்தது. என் பெண்ணுக்கு வேலை இல்லாமல் இருந்தது. இரண்டும் இங்கு வந்து ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவரை வழிபட்டும் சித்தர் ஸ்வாமிகள் சொல்லிய Detail
Posted on: Aug 21, 2023
#இறைவன்_நடத்திய_அதிசயம் #அற்புதம் இதுபோன்று எண்ணற்ற IPS அதிகாரிகளுக்கும் காவல் ஆளினர்களுக்கும் உதவியுள்ளேன். 2011ல் DGP Mr. K. P. ஜெயின் என்பவரிடம்(இவரிடம் கிட்டத்தட்ட 5 வருடத்திற்கு மேலாக முகாம் உ Detail
ஸ்ரீராம், டெல்லி
Posted on: Aug 17, 2023
நான் டெல்லியில் என் வயதான தந்தையாருடன் வசித்து வருகிறேன். எனக்கு தாய் இல்லை. ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் பெருமானின் பெருமைகளையும் ஸ்ரீவேம்பூச்சித்தர் பற்றியும் யூ டியூப் ல் படித்து தெரிந்து கொண்டு நிச் Detail
Posted on: Aug 16, 2023
நான் ஒரு ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு தை பொங்கல் அன்று ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் திருவாலய த்தில் இறை தரிசனம் முடித்துவிட்டு பின் சித்தர் ஸ்வாமிகளை சந்தித்தேன். நான் எனது பார்ட்னர் ஒருவர Detail
Theagu, qatar
Posted on: Aug 15, 2023
நான் 15 வருடங்களுக்கு மேலாக கத்தாரில் வசித்து வருகிறேன். என் நெருங்கிய உறவினர் மூலமாக 2003ல் பெங்களூரில் வாங்கிய பாஸ்போர்ட்டை சென்னை முகவரிக்கு மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டதால் அப்போது சித்தர் ஸ்வாமி DG Detail
Posted on: Aug 15, 2023
நான் BSNL என்ஜினியர். திருச்சி யில் பணி புரிந்து வந்தேன். என் பையனை நல்ல படிப்பு படிக்க வைக்க கடனை வாங்கினேன். அவன் விருப்பப்பட்டான் என்ற காரணத்தால் ஒரு பைக்கையும் வாங்கி கொடுத்தேன். அவன் ஆக்சிடெண்ட் Detail
பாண்டியன், கருப்பூர்
Posted on: Aug 11, 2023
நான் பணிபுரியும் கல்லூரியில் எனக்கு மற்றவர்கள் மறைமுகமாக கொடுத்து வந்த தொல்லைகளை சித்தர் ஐயா அவர்களிடம் முறையிட்டேன். ஒரு மந்திரத்தை உபதேசம் செய்தார்கள். அதை தினசரி சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அந்த Detail
சேகர், திருவிசநல்லூர்
Posted on: Aug 11, 2023
சித்தர் ஸ்வாமிகளிடம் 15 ஆண்டுகளாக பழகி வருகிறேன். எனது எதிரிகளால் ஏவப்படும் துஷ்டப்பிரயோகங்களினால் உடல்நிலை எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ஸ்வாமிகள் இடமிருந்து பெற்று செல்லும் விபூதியும Detail
கவிமணி, கடலூர்.
Posted on: Aug 09, 2023
நான் மீனவ சமூகத்தை சேர்ந்தவன். நான் இந்த ஆலயத்திற்கு எங்கள் சமூக மக்கள் 20க்கு மேற்பட்டோரை அஷ்டமி தோறும் ஒரு வேனில் அழைத்து வருவேன். அவர்கள் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவருக்கும், ஸ்ரீமஹா வடுக பைரவருக்கும் Detail
பிரகாஷ், செருகுடி
Posted on: Aug 09, 2023
இந்த கோயிலுக்கு 10 வருடங்களாக வந்து கொண்டிருக்கிறோம்.முதலில் எனது தாய் நானும் என் தங்கையும் நல்லா படிக்கணும். குடும்ப கஷ்டங்கள் விலக வேண்டும் என்று வந்தாங்க. குடும்பம் ஒரு முன்னேற்றத்திற்கு வரத் தொடங் Detail
Posted on: Jul 29, 2023
2001ல் எங்கள் குடும்பம் ஒரு மந்திரவாதியிடம் மாட்டி கொண்டு மிகவும் அவஸ்தையுற்றோம். வீட்டில் வளர்ப்பு பிராணிகள் அவ்வப்போது இறந்தது. எங்களுக்கு ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது வாகன விபத்துகள் ஏற்பட்டது. உடல் Detail
Sampath, Mumbai
Posted on: Jul 29, 2023
நான் மும்பையில் அரசு வங்கி ஒன்றில் AGM ஆக இருந்து போன மாதம் நல்ல முறையில் ஓய்வு பெற்றேன். அதே வங்கியில் அடுத்த மாதத்தில் இருந்து Part time வேலை தருவதாக சொல்லி இருக்கிறார்கள். இந்த ஆலயத்திற்கு வந்ததில் Detail
விஜயம்மா, கத்தார்
Posted on: Jul 28, 2023
15 ஆண்டுகளுக்கு முன் சித்தர் அறிமுகம் கிடைக்கப் பெற்ற பின் தான் என் கணவருக்கு நல்ல வேலை கிடைத்தது. ₹.30 லட்சத்துக்கு வீடு வாங்கினோம். என் மகள் நன்றாக படித்து M.Tech., முடித்தாள். நல்ல வேலை கிடைத்தது. Detail
M. L. Jain, Jaipur
Posted on: Jul 28, 2023
I am having many more miracles in my life. Now I ஆம் very happy in my life.799
Murugu Anand
Posted on: Jul 27, 2023
குறைகள் நீங்கி நல்வாழ்வு அளிக்கும் மிக அற்புத தெய்வம். நல்ல வேலை வாய்ப்பு அமையும். குழந்தை பேறு கிட்டும். திருமண பாக்கியம் கிட்டும். நோய் நொடிகள் நீங்கும். கடன் தொல்லைகள், ஏவல், பில்லி, சூனியங்கள் வில Detail
லாவண்யா, சென்னை
Posted on: Jul 27, 2023
கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும். யாம் இருக்கும் இடத்தில் சொர்ணம் கொழிக்கும் என்பது 100% சத்தியமான உண்மை. இதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. Detail
Posted on: Jul 27, 2023
இந்த ஆலயத்திற்கு வந்ததில் இருந்து, ஸ்ரீ வேம்புச்சித்தரை சந்தித்ததில் இருந்து என் வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றம் நானே அசந்து போகும் அளவில் நடந்து கொண்டுள்ளது. இதுபோல் உலக மக்கள் அனைவரும் இங்கு வந Detail
Dr. G. Kalaivani
Posted on: Jul 27, 2023
இந்தக் கோயில் உலகில் வேறு எங்கும் காணாத அதிசய அற்புதமான தெய்வம். இந்த ஆலயம் சித்தர்கள் முறைப்படி அமைக்கப் பெற்ற சிறப்பான ஆலயம். பைரவ உபாசகர் ஸ்ரீவேம்பூச்சித்தரால் உருவாக்கப் பெற்ற ஆலயம். இங்கு வரு Detail
SVC Trust
Posted on: Jul 25, 2023
Excellent Temple.
SVC Trust
Posted on: Jul 25, 2023
This deity is a very most powerful deity in the world. All are come and visit this temple and pray to solve your problems get your good experiences
KALYAN KUMAR M
Posted on: Jul 25, 2023
Bhairava is the magnificent and fiery manifestation of Shiva associated with annihilation. Bhairava originates from the word Bhīru, which means fearful. Bhairava means terribly fearful form. It's als Detail
Vijayakumar
Posted on: Jul 24, 2023
It is a very powerful temple. Do you want miracles in your life? Then come and visit
Shanthini
Posted on: Jul 24, 2023
It's very wonderful Temple and deity. I have got many more miracles in my life
Sai Theagaraj
Posted on: Jul 23, 2023
Worshipping Sri Maha Sorna Bairavi sametha Sornakala Bairavar residing in this temple has miraculously changed my life by bringing immense prosperity, happiness, positivity and peace. Through the divi Detail
Gunasekaran CC
Posted on: Jul 23, 2023
This deity is a wonderful one in the World. All are getting good results for their problems.
Sai Theagaraj
Posted on: Jul 23, 2023
Sri Maha Sorna Bairavi sametha Sri Maha Sornakala Bairavar temple at Thiruvisanallur, built by Bairava Upasakar Sri Vembu Sidhar houses a very unique form Bairavar seen nowhere else in the world. The Detail