user-image

Posted on: Nov 11, 2023

ஒரு மூன்று, நான்கு மாதத்திற்கு முன் இந்த ஆலயத்திற்கு எதேச்சையாக வந்தேன். வந்து வேண்டி சென்ற சில நாட்களிலேயே விவசாயத்திற்குரிய அறுவடை செய்யும் மெஷினுக்கு லோன் கிடைத்தது. பல ஆண்டுகளாக கட்ட முடியாமல் தேங்கிக் கிடந்த இருந்த வீட்டு வேலைகள் ஆரம்பிப்பதற்கான ஒரு சூழ்நிலை திடீரென ஏற்பட்டு வீட்டு வேலை இனிதே முடிந்தது. அதன் பின் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி க்கும் அன்னதானத்திற்காக என்னால் முடிந்த அரிசி, பருப்பு, காய்கறிகள் வாங்கித் தருகிறேன். எனக்குத் தெரிந்த அனைவருக்கும் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானின் மகிமையை எடுத்துக் கூறி யாம் பெற்ற இன்பம் பெருக வையகம் என்று எல்லோருக்கும் சொல்லியும் வருகிறேன்.