user-image

Posted on: Aug 16, 2023

நான் ஒரு ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு தை பொங்கல் அன்று ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் திருவாலய த்தில் இறை தரிசனம் முடித்துவிட்டு பின் சித்தர் ஸ்வாமிகளை சந்தித்தேன். நான் எனது பார்ட்னர் ஒருவருடன் சேர்ந்து பீரோ தயாரிக்கும் தொழில் செய்து வந்தேன். பார்ட்னர் இடையிலேயே என்னை ஏமாற்றிவிட்டு சென்றதால் தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு கடன் தொல்லையில் சிக்கி தவித்து கொண்டிருந்தேன். ஸ்வாமிகள் சில பரிகாரங்கள் சொல்லி அதை செய்தும் அவர்கள் சொல்ல சொன்ன மந்திரங்களை சொல்லி வந்தேன். தொழில் நல்ல முன்னேற்றம் கண்டது. கடன்கள் குறைய தொடங்கியது. என்னுடைய இரு பையன்களும் நன்றாக படித்து நல்ல வேலையும் கிடைத்தது. இப்போது மிக நன்றாக என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. தொழிலும் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. சித்தர் ஸ்வாமிகள் காவல் துறையில் மிக உயர்ந்த இடங்களில் எல்லாம் பணி புரிந்து இருந்தாலும் நாம் பழகுவதற்கு மிக இனிமையான எளிய பரிகாரங்கள் சொல்லி அனைத்து கஷ்டங்களில் இருந்தும் காப்பாற்றி விடுகிறார்.