user-image

D.அருண், கருப்பூர்

Posted on: Jan 04, 2024

எனக்கு வெளிநாடு செல்ல விசா தாமதம் ஆகிக் கொண்டு இருந்தது. இது பற்றி என் நண்பர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு சித்தர் ஸ்வாமிகளையும் பார்த்து விட்டு வந்து விடுங்கள் என்று சொன்னார். அதுபோல் பௌர்ணமி பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானை சம்பங்கி மாலை அணிவித்து பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து இரு பசு நெய் தீபம் போட்டு வேண்டிக் கொண்டு 27 முறை ஆலயத்து சுற்றி வழிபட்டு Dr. சொர்ண ஸ்ரீ வேம்புச்சித்தர் ஸ்வாமிகளிடம் ஆசிர்வாதம் பெற்று வந்தேன். இரண்டு நாட்களிலேயே விசா வந்து விட்டது. மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். வீட்டிலும் மிகவும் ஆச்சரியம் அடைந்தார்கள். இதுபோல் இங்கு வந்து வழிபட்டு பலன் ஏராளம் ஏராளமானோர். எல்லோரும் இதுபோல் இங்கு வந்து வேண்டி வாழ்வில் நல்லன பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். " யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"