user-image

பாண்டியன், கருப்பூர்

Posted on: Aug 11, 2023

நான் பணிபுரியும் கல்லூரியில் எனக்கு மற்றவர்கள் மறைமுகமாக கொடுத்து வந்த தொல்லைகளை சித்தர் ஐயா அவர்களிடம் முறையிட்டேன். ஒரு மந்திரத்தை உபதேசம் செய்தார்கள். அதை தினசரி சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அந்த மறைமுக எதிரிகளின் தொல்லை முழுவதுமாக மறைந்தது. அதை போல ஒரு இடம் அவசர தேவைக்காக விற்க நினைத்த போது விற்பனை செய்ய இயலவில்லை. சித்தர் ஐயாவிடம் சொன்னேன். சில பரிகாரங்கள் சொன்னார்கள். அதை செய்தேன். அது நல்ல விலைக்கு விற்றதுடன் பணமும் உடனே கைக்கு கிடைத்தது. சித்தர் ஐயாவும் இங்கு வீற்றிருந்து அருளும் தெய்வமும் மிகவும் சக்தி நிறைந்தது.