user-image

பிரகாஷ், செருகுடி

Posted on: Aug 09, 2023

இந்த கோயிலுக்கு 10 வருடங்களாக வந்து கொண்டிருக்கிறோம்.முதலில் எனது தாய் நானும் என் தங்கையும் நல்லா படிக்கணும். குடும்ப கஷ்டங்கள் விலக வேண்டும் என்று வந்தாங்க. குடும்பம் ஒரு முன்னேற்றத்திற்கு வரத் தொடங்கியது. நானும் படித்து நல்ல வேலைக்கு போனேன். என் தங்கைக்கும் நல்ல வரன் கிடைத்தது. குழந்தையும் பிறந்தது. எனது தாய் பஞ்சாயத்து வார்டு எலெக்ஷனில் நின்று ஜெயித்து அந்த பஞ்சாயத்து போர்டில் துணை தலைவராகவும் உள்ளார். வீடும் இப்போது கட்டிக்கொண்டு இருக்கிறோம். வீட்டு வேலை நன்றாக போய்க் கொண்டு இருக்கிறது. இங்கு வந்து ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவரையும் ஸ்ரீவேம்பூச்சித்தரையும் நம்பி கெட்டவர்கள் என்று எங்களுக்கு தெரிந்து எவரையும் நாங்கள் கண்டதில்லை. எல்லோரும் மிக மிக நன்றாக உள்ளோம். நீங்களும் இந்த ஆலயத்திற்கு வந்து ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவப் பெருமானையும் ஸ்ரீவேம்பூச்சித்தர் அய்யா அவர்களையும் தரிசித்து வேண்டி எங்கள் குடும்பத்தை போல் உங்கள் வாழ்விற்கு குடும்பத்திற்கு வேண்டிய எல்லாவற்றையும் பெற்று பெருவாழ்வு வாழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.