user-image

Posted on: Aug 15, 2023

நான் BSNL என்ஜினியர். திருச்சி யில் பணி புரிந்து வந்தேன். என் பையனை நல்ல படிப்பு படிக்க வைக்க கடனை வாங்கினேன். அவன் விருப்பப்பட்டான் என்ற காரணத்தால் ஒரு பைக்கையும் வாங்கி கொடுத்தேன். அவன் ஆக்சிடெண்ட் ஆகி அவனை காப்பாற்ற வைத்தியம் செய்ததில் கடன் தலைக்கு மேல் போய் கடனை கொடுக்க முடியாமல் வட்டியையும் கொடுக்க முடியாமல் யாருக்கும் பதில் சொல்ல முடியாமல் வேலையை விட்டு ஏன் ஊரை விட்டே ஓடி போய் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த நேரத்தில் உயிரையே மாய்த்து கொள்வோம் என்று நினைத்திருந்த நிலையில் ஸ்ரீவேம்புச்சித்தர் சாமி 2006ல் வெளியிட்ட "காக்கும் தெய்வம் மஹா பைரவர்" என்ற புத்தகத்தை படித்து விட்டு சித்தரை எப்படியாவது சந்திக்க வேண்டும் நல்ல வழியை அடைய வேண்டும் என்று அந்த பிரசுரத்தாரை தொடர்பு கொண்டு போன் எண் பெற பலமுறை முயற்சி செய்து பெற்று ஸ்வாமிகளை தொடர்பு கொண்டு கையில் விஷ பாட்டிலை வைத்து கொண்டு தான் பேசுகிறேன். போன் செய்ய கூட கையில் காசு இல்லை என்று புலம்பி அழுது தீர்த்தேன். அவர் கவலைப்படாதே நேரில் வா எல்லாம் நல்லபடியாக நடக்கும். பூஜைகளில் வந்து கலந்து கொள் என்று சொன்னார்கள். மந்திரம் சொல்லி விபூதி தந்தார்கள். பூஜைகளில், ஹோமங்களில் அவ்வப்போது வந்து வந்து கலந்து கொண்டேன். ஸ்வாமி சொன்னபடியே திருச்சியில் மறுபடியும் விட்ட இடத்திலேயே வேலை கிடைத்தது. மும்பைக்கு மாற்றல் கிடைக்கும் செல். கஷ்டங்கள் தீரும் என்றார்கள். சென்றேன். கஷ்டங்கள் குறைய தொடங்கியது. பையனுக்கும் பெங்களூரில் ஒரு வேலை கிடைத்தது. அவனுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான். பெண்ணுக்கும் அவள் மனதிற்கு பிடித்த மாப்பிள்ளை கிடைத்தது. நானும் மும்பையில் நிறைய சம்பளத்துடன் ஓய்வு பெற்றேன். இன்று மிக நன்றாக இருக்கிறேன். அவர் மிக எளிமையாக இருந்து கொண்டு வருகிறவர்கள் அனைவருக்கும் வெளியில் எவரும் அறியா வண்ணம் அவரை அணுகுகின்ற அனைவருக்கும் நல்லது செய்து கொண்டுள்ளார். அவர் இந்த உலகிற்கு கிடைத்தது ஒரு வரப்பிரசாதம் ஆகும். கலியுகத்தில் இப்படி ஒருவரை காண்பதே அரிது. அவர் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் ஏதோ ஓர் பிறவியில் கொஞ்சம் நல்லது செய்திருப்போம் என்று எண்ணுகிறோம். ஸ்வாமிகள் பல்லாண்டுகள் நலமாய் வாழ்ந்து இந்த உலகிற்கு நல்வழி காட்ட வேண்டும். அவர்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கு எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.